இரண்டு வயது குழந்தை உயிரோடு எரிந்து சாம்பல்!

ராஸ் அல்கைமா: கோர் குவைர் பகுதியில் உள்ள தனது இரண்டாவது தந்தை வீட்டில் இருந்த இரண்டு வயது நிரம்பிய பங்களாதேஷை சேர்ந்த பெண் குழந்தை ஒன்று அத் தந்தைக்கு பிறந்த மூன்றரை வயது மகனுடன் விருந்தினர் அறையில் விளையாடிக் கொண்டிருந்த போது ஏற்பட்ட தீ விபத்தில் உயிருடன் எரிந்து சாம்பலான சம்பவம் நடந்துள்ளது
ராஸ் அல்கைமா உள்துறை அமைச்சக தற்காலிக தலைவர் கர்னல் முகமது அப்துல்லா அல் ஜாபி கூறும்போது அச்சிறுமியின் உடல் முற்றிலுமாக கரிந்து சாம்பலாகிபோனதாக கூறினார். மேலும் அக் குடும்பத்தினர் விருந்தினர் அறையிலிருந்து புகை வருவதை கவனித்தும் அதனுள் குழந்தை விளையாடிக்கொண்டிருந்ததை கவனிக்காததையடுத்து இந்த சம்பவம் நடந்துள்ளது
அச்சிறுவனும் சிறுமியும் ஒன்றாக விளையாடிக் கொண்டிருக்கும் போது அச்சிறுவன் அவனிடம் இருந்த லைட்டரை கொளுத்தி அங்கிருந்த சில பொருட்களில் தீவைத்துவிட்டு ஓடிவிட்டதாகவும் இதனால் அறைமுழுவதும் தீ பரவியது இதனால் மூச்சுதிணறிய அக்குழந்தை மயங்கி விழுந்து தீயில் கருகியது. தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்து விருந்தினர் அறைக்கு சென்று பார்த்தபோது குழந்தை கருகிய நிலையில் கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
இறந்த சிறுமியின் தாய் பங்களாதேஷ் நாட்டை சேர்ந்தவர் இவர் முந்தைய கணவரிடமிருந்து விவாகரத்து பெற்ற பெண்ணாவார்.கர்னல் முகமது அப்துல்லா அல் ஜாபி கூறுகையில் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை தீ விபத்துகளை உண்டாக்கும் பொருட்களுடன் விளையாடுவதை தவிர்த்தால் இது போன்ற சோக சம்பவங்களையும் தவிர்க்கமுடியும் என்றார்.
0 Response to "இரண்டு வயது குழந்தை உயிரோடு எரிந்து சாம்பல்!"
แสดงความคิดเห็น