புதுமாத்தளன் பிரதேசத்துக்கு ஜனாதிபதி இன்று விஜயம்

வடக்கில் இறுதி மோதல் இடம்பெற்ற பகுதியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள நினைவுத் தூபியை இன்று காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ திறந்துவைத்தார்.
பயங்கரவாதத்தை அழிப்பதற்குப் பங்காற்றிய சகலரையும் நினைவுகூரும்வகையில் இந்த நினைவுத் தூபி நிர்மாணிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.
இந்த நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் உட்பட சிரேஷ்ட படை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.
இன்று காலை அந்தப் பிரதேசத்துக்கு விஜயம் செய்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வன்னி நடவடிக்கையில் பங்குபற்றிய படை வீரர்களைச் சந்தித்ததுடன் அப்பிரதேசத்தையும் சுற்றிப் பார்வையிட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது.
0 Response to "புதுமாத்தளன் பிரதேசத்துக்கு ஜனாதிபதி இன்று விஜயம்"
แสดงความคิดเห็น