jkr
แสดงบทความที่มีป้ายกำกับ சிறுவர் แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ சிறுவர் แสดงบทความทั้งหมด

இலங்கையின் முதலாவது 'விருப்பு பொழுது போக்குச் சந்தை'


சிறுவர்கள், இளம் சமுதாயத்தினர், பொழுது போக்காளர்கள், மற்றும் நாட்டின் எதிர்காலம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு 'விருப்பு பொழுது போக்கு சந்தை 2010' எனும் நிகழ்வு அடுத்த வருடம் பெப்ரவரி 12,13,14 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது.

மிலேனிய யுகம், வாழ்க்கைச் செலவு, பணவீக்கம், அரசியல் குளறுபடிகள் - இவை எல்லாவற்றுக்கும் மத்தியியில் நாகரிக போதையில் சிக்கித் தவிக்கும் இளம் சமுதாயத்தினர்.

போதைப் பொருட்களும், பச்சைக் குத்துதலும் தான் இந்த நாகரிக இளம் சமுதாயத்தின் இன்றைய பொழுது போக்காக உள்ளது.

அடிப்படையிலிருந்தே இந்த நாகரிக மோகத்தினை இல்லாதொழிப்பது தற்போது முயற்கொம்பான காரியம். என்றாலும் அதனையும் முயன்று பார்க்க எத்தனிக்கும், 75 வருட கால சேவையைக் கொண்ட றோட்டரிக் கழகமானது இதற்கு முன் வந்தது.

ஐக்கிய நாடுகளின் பொருளாதார மற்றும் சமூக கவுன்சிலின் விசேட ஆலோசனை அந்தஸ்தைப் பெற்று, 20 வருட கால சேவையினைப் பூர்த்தி செய்யும் இலங்கை போதைப்பொருள் தடுப்புச் சங்கத்துடன் இணைந்து றோட்டரிக் கழகம் இதனை செயற்படுத்தவுள்ளது.

அமைதியாக மூச்சு விடக்கூட நேரம் இல்லாது பறந்து திரியும் உலக வாழ்க்கையில், சிறுவர்கள் அதாவது இளம் சமுதாயத்தைக் கவனிக்கவோ, கைவிடவோ எமக்கு நேரம் இருப்பதில்லை. இதனால் தமது முக்கிய தேவை எதுவென்று கூட பலருக்கு தெரிவதில்லை.

அதனால் தான் பெரும்பாலான சிறுவர்கள் கோபம், வன்முறை, மது - போதைப்பொருள் பாவனை, மனஅழுத்தம் போன்ற சொல்லொணா செயற்பாடுகளுக்கு ஆளாகின்றனர்.

சிறுவர்கள், இளம் சமுதாயத்தினர், பொழுது போக்காளர்கள், மற்றும் நாட்டின் எதிர்காலம் என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு 'விருப்பு பொழுது போக்கு சந்தை 2010' எனும் நிகழ்வு அடுத்த வருடம் பெப்ரவரி 12,13,14 ஆகிய தினங்களில் நடைபெறவுள்ளது.

நாட்டினதும் எமது முன்னோர்களினதும் பாரம்பரிய பொழுதுபோக்கு அம்சங்களை வெளிப்படுத்தும் வகையில் கண்காட்சியும் மாநாடும் இடம்பெறவுள்ளன. வங்கிகளின் பிரசன்னம், பாடசாலை மாணவர்களுக்கிடையிலான கட்டுரைப் போட்டி எனப் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதன் மூலம் கிடைக்கின்ற வருமானத்தை போதைப் பொருள் துஷ்பிரயோக தடுப்புக்கும், கண்டறிதல் செயற்பாடுகளுக்கும் உபயோகிக்கப்படும் என ஏற்பாட்டுக் குழுத் தலைவரும் றோட்டரிக் கழக உறுப்பினரும் மஜித் அப்துல் காதர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்காக விண்ணப்பிக்க விரும்புகின்றவர்கள் பின்வரும் விலாசத்துடன் மின்னஞ்சல் மூலம் அல்லது சுய விலாசமிடப்பட்ட கடித உறையினை டிசம்பர் 30க்கு முன் அனுப்பி விண்ணப்பப் பத்திரங்களைப் பெற்றுக்கொள்ள முடியும்.

தொடர்புகளுக்கு:

www.hobbyfair2010.com

The Hobby Fair 2010 ,
C/o. SLANA,
NO.05, Kirimanadala Mawatha,
Nawala,
T/P.011 2868494

Fax. 011 2861743

E-Mail: info@hobbyfair2010.com

Web: www.hobbyfair2010.com
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

பயங்கரவாதத்தை ஒழித்த பெருமையில் சிறுவர் தினக் கொண்டாட்டம் : ஜனாதிபதி

இலங்கையில் கொடிய பயங்கரவாதம் இல்லாதொழிக்கப்பட்ட பெருமிதத்துடன் உலக சிறுவர் தின கொண்டாட்டங்கள் நடைபெறுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மூன்று தசாப்தகால பயங்கரவாதத்தை தாய்நாட்டிலிருந்து முற்றாக ஒழித்த இலங்கையர்கள் என்ற பெருமையுடன் இம்முறை உலக சிறுவர் தினம் கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஜனாதிபதி விடுத்துள்ள செய்தி யிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அச்செய்தியில் ஜனாதிபதி மேலும் தெரிவித்திருப்பதாவது :

"கடந்த மூன்று தசாப்த காலமாக நீடித்த யுத்தத்தில் அதிகளவில் சிறுவர்களும் பெண்களுமே பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ளனர்.

படை வீரர்கள் தமது உயிரைப் பலியாக்கி வெற்றிகொண்ட தேசத்தினை நமது பிள்ளைகளுக்காகக் கட்டியெழுப்புவது நமது பொறுப்பாகும்.

சகல சிறுவர்களுக்கும் அன்பு, பாதுகாப்பு, அரவணைப்புடன் சிறந்த எதிர்காலம் ஒன்றை உருவாக்கிக் கொடுப்பதற்கும் பெரியவர்களான நாம் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

சிறுவர்களை ஆயுதமேந்தவைத்து அவர்களின் அடிப்படை உரிமைகளை இல்லாதொழித்த யுகத்துக்கு அரசாங்கம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.

மூன்று தசாப்தங்களாகத் தொடர்ந்த பயங்கரவாதத்தினால் எமது நாட்டில் பெரும்பாலும் பாதிக்கப்பட்டவர்கள் சிறுவர்களும் பெண்களுமே. எமது பிள்ளைகளின் வாழ்விடங்களும் இல்லாதொழிந்தன.

'வெற்றிபெற்ற தேசத்தை சிறார்களுக்காக கட்டியெழுப்புவோம்' என்ற தொனியில் இம்முறை உலக சிறுவர் தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இதற்கு எனது பாராட்டுகளைத் தெரிவிக்கிறேன்.

பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டுள்ள நிலையில் போதைப்பொருள் மற்றும் வறுமை என்பன சிறுவர் முன்னேற்றத்தில் பெரும் தடையாகவுள்ளன.

பயங்கரவாதத்தை வெற்றிகொண்டது போல் இந்த சவாலையும் வெற்றிகொள்ள ஒன்றிணைவோம்."

இவ்வாறு ஜனாதிபதி தமது செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளார்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates