jkr
แสดงบทความที่มีป้ายกำกับ ஜெனரல் சரத்பொன்சேகா แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ ஜெனரல் சரத்பொன்சேகா แสดงบทความทั้งหมด

ஜெனரல் சரத்பொன்சேகாவின் உத்தியோகபூர்வ அலுவலகம் அதிரடிப்படையினரால் சுற்றிவளைப்பு


ஜெனரல் சரத்பொன்சேகாவின் உத்தியோகபூர்வ அலுவலகம் சற்று நேரத்திற்கு முன்னர் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பூதாகாரமாக வெடித்திருக்கும் இந்த பிரச்சினையின் மற்றுமொரு அடியாக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகாவின் உத்தியோகபூர்வ அலுவலகம் விஷேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் ரோயல் கல்லூரிக்கு அருகில் பாதுகாப்பு தரப்பினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களால் தொடர்ந்தும் செய்தி சேகரிப்பில் ஈடுபட முடியாதுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஜெனரல் சரத்பொன்சேகாவின் உத்தியோகபூர்வ அலுவலகம் அதிரடிப்படையினரால் சுற்றிவளைப்பு


ஜெனரல் சரத்பொன்சேகாவின் உத்தியோகபூர்வ அலுவலகம் சற்று நேரத்திற்கு முன்னர் விசேட அதிரடிப்படையினர் மற்றும் இராணுவத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பூதாகாரமாக வெடித்திருக்கும் இந்த பிரச்சினையின் மற்றுமொரு அடியாக எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகாவின் உத்தியோகபூர்வ அலுவலகம் விஷேட அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்கள் ரோயல் கல்லூரிக்கு அருகில் பாதுகாப்பு தரப்பினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களால் தொடர்ந்தும் செய்தி சேகரிப்பில் ஈடுபட முடியாதுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து ஜனநாயகத்தை நிலைநிறுத்தப் போகிறேன் -ஜெனரல் சரத்பொன்சேகா!


இலங்கையின் வடக்கே தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டுள்ள பிரதான எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளரான ஜெனரல் சரத்பொன்சேகா, நாட்டில் தற்போதுள்ள ஊழல் நிறைந்த குடும்ப ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்து ஜனநாயகத்தை நிலைநிறுத்தப் போவதாகத் தெரிவித்துள்ளார். சனிக்கிழமை யாழ்ப்பாணத்திற்குச் சென்றிருந்த சரத்பொன்சேகா ஞாயிறன்று மன்னார், வவுனியா ஆகிய இடங்களில் இடம்பெற்ற பொதுக்கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றியிருந்தார். இலங்கையில் உள்ள அனைத்து மக்களும் சமஉரிமை உடையவர்களாக, இன, மத, குல வேறுபாடின்றி பாதுகாப்பாக வாழ்வதற்காக நாட்டின் அரசியலமைப்பை மாற்றியமைக்கப் போவதாக அவர் வவுனியா நகரசபை மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகையில் தெரிவித்தார். புதிய ஆட்சியில் 60வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு மாதாந்தம் 2000ஆயிரம் ரூபா உதவித்தொகை வழங்கவும், இராணுவம் பொலிசார் உட்பட அனைத்து அரச ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு வழங்கப்படும் என்றும் சமத்துவமான முறையில் ஊழலற்ற வகையில் நாட்டில் அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்படும் என்றும் சரத் பொன்சேகா இதன்போது உறுதியளித்துள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இராணுவத்தினரைக் காட்டிக்கொடேன் - ஜெனரல் ஃபொன்சேகா


இராணுவ வீரர்களை எவ்விதத்திலும் காட்டிக் கொடுக்கப் போவதில்லையென ஜெனரல் சரத் ஃபொன்சேகா தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரியில் நேற்று மாலை நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

ஜெனரல் ஃபொன்சேகாவுக்கு ஆதரவளிக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களும், பிரதிநிதிகளும் இக்கூட்டத்தில் கலந்துகொண்டனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

புலிகளிடம் பணம் வாங்கும் ஜெனரல் பொன்சேகா


எதிர்கட்சிகளின் பொது வேட்பாளரான ஜெனரல் சரத்பொன்சேகாவின் தேர்தல் பிரச்சாரங்களுக்கு புலிகளின் முகவர்களிடம் இருந்து பணம் பெறப்பட்டுள்ளதாக பரவலான குற்றச்சாட்டுக்கள் எழுந்துவருகின்றது. புலிகளின் ஆதரவு இந்திய நிறுவனம் ஒன்று இலங்கையில் படப்பிடிப்பொன்றில் ஈடுபட்டுவருவதாகவும் அவர்களுடாகவே இப்பணம் பரிமாறப்பட்டுள்ளாகவும் கூறப்படுகின்றது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

அனைவரும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை இல்லாதொழிக்க அணிதிரள வேண்டும் -சரத் பொன்சேகா


நாட்டில் நல்லாட்சியை ஏற்படுத்த வேண்டுமாயின் தற்போதைய நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஆட்சியை இல்லாதொழிப்பதற்கு அனைவரும் அணிதிரள வேண்டுமென ஜனாதிபதி வேட்பாளர் ஜெனரல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார் புறக்கோட்டையில் இடம்பெற்ற ஜனநாயகத்தை இல்லாதொழிக்க நிறைவேற்ற அதிகார முறைமை என்ற தலைப்பிலான நூல் வெளியீ;ட்டு விழாவில் கலந்துக் கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இன்றைய காலகட்டத்திற்கு மிகவும் அவசியமான கருத்துக்களை இந்த நூல் கொண்டிருப்பதாக சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ஏகாதிபத்தியத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பதாக குறிப்பிட்டு;ள்ளார். நிறைவேற்று அதிகார முறையின் பயங்கரதன்மையே தம்மை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுமாறு உந்தியதாக அவர் தெரிவித்துள்ளார். மிகவும் கீழ்த்தரமான முறையில் சட்டத்திற்கு எதிராக நிறைவேற்று அதிகார பலம் பயன்படுத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். படுகொலை செய்தநபர் ஒருவருக்கு ஆறுவருட சிறைத்தண்டனை எழுத்தாளர் ஒருவர் கருத்துக்களை வெளியிட்டால் இருபது ஆண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டதாக அவர் சுட்டிக் காட்டியுள்ளார். நிறைவேற்று அதிகார பலத்தை பயன்படுத்தி சட்டத்திற்கு புறம்பான வகையில் எதையும் செய்ய முடியும் என அவர் தெரிவித்துள்ளார். எனவே நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்கு அனைவரும் அணிதிரள வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates