jkr
แสดงบทความที่มีป้ายกำกับ நாசாவின் แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ நாசாவின் แสดงบทความทั้งหมด

செவ்வாயில் உயிரினம் - நிரூபிக்கத் தயாராகிறது நாசா


செவ்வாயில் உயிரினங்கள் இருந்திருக்கலாம்! வறண்டு சிவந்த பாலைவனம் போல இப்போது காட்சியளிக்கும் செவ்வாய் கிரகம், ஒரு காலத்தில் பெருங்கடலும், பசுமையும் கலந்த பிரதேசமாக இருந்திருக்கலாம்! செவ்வாய் கிரகவாசிகள் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னதாகவே பூமிக்கு வந்திருக்கக்கூடும்!

மனிதர்களாக இல்லையென்றாலும், கிருமிகளின் வடிவத்திலாவது பூமிக்கு வந்திருக்கக் கூடும்!

இவை வெறும் அறிவியல் புனை கதைக்கான கற்பனைகள் அல்ல. இவற்றை நம்புவதற்கு வலுவான அடிப்படை ஆதாரங்கள் உள்ளன என்கிறது சமீபத்திய நாசாவின் ஆய்வு முடிவு.

13 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு செவ்வாயில் இருந்து பூமியில் வந்து விழுந்த விண்கல், பாறையாக கடந்த 1996ம் ஆண்டில் அன்டார்க்டிக் கடல் பகுதியில் அடையாளம் காணப்பட்டது.

'அலென் ஹில்ஸ் 84001' என்று இதற்கு விஞ்ஞானிகள் பெயரிட்டனர். அப்போது, அந்த பாறையின் மீது உயிரித்தன்மை கொண்ட படிமத் துகள்கள் இருந்தன. அவை செவ்வாயில் இருந்து வந்திருக்கக்கூடும் என்று நாசா கூறியது.

ஆனால், விண்ணில் இருந்து பூமியில் மோதியதாலும், அன்டார்க்டிக் கடலின் அசுத்தங்கள், பூஞ்சைகள் பல்லாண்டுகளாக பாறையில் படிந்ததால் உருவானவையே ஃபாஸில் படிமங்களாக தோற்றமளிக்கின்றன என்று கூறி அப்போது பெரும்பாலான விஞ்ஞானிகள் நாசாவின் கருத்தை நிராகரித்தார்கள்.

ஆனால், அந்த பாறையில் படிந்துள்ளவை செவ்வாய் கிரகத்திலிருந்து வந்தவை தான் என்பதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளதாக இப்போது நாசா விஞ்ஞானிகள் உறுதிபட தெரிவிக்கிறார்கள். இதை தங்களால் நிரூபிக்க முடியும் என்றும் கூறுகின்றனர்.

13 ஆண்டுகளுக்கு முன்பிருந்தை விட இப்போது அதிநுட்பமான மைக்ராஸ்கோப்புகள் பயன்படுத்தப்படுகின்றன. அப்போது நிரூபிக்க முடியாததை தொழில்நுட்ப வளர்ச்சியின் மூலம் இன்று நாசா செய்துள்ளது.

நாசாவில், கேத்தி தாமஸ்-கெர்டா ஆகியோர் தலைமையிலான விஞ்ஞானிகள் குழு இந்த செவ்வாய் பாறையில் உள்ள படிமங்களை நுணுக்கமாக ஆராய்ந்துள்ளது. அதில் கார்பொனைட் மற்றும் மக்னீஸிய உலோக படிகங்களை விஞ்ஞானிகள் அடையாளம் கண்டுள்ளனர்.

பாறையில் பரவலாகக் காணப்படும் உலோக படிமங்கள் வழக்கத்துக்கு மாறான ரசாயண மற்றும் இயற்பியல் தன்மைககொண்டவை. அவற்றின் அமைப்புகள் புவியியல் சார்ந்து இல்லாமல், உயிரி தன்மையை ஒத்துள்ளது. அதுமட்டுமின்றி பூமியில் உள்ள காந்தக் கிருமிகளின் (magnetic bacteria) சாயல் அவற்றில் வெகுவாக உள்ளது.

இவை நிச்சயம் 13 ஆயிரம் ஆண்டுகளில் உருவானவை அல்ல. 3.5 பில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு தண்ணீருக்கும், செவ்வாய் கிரகத்துக்கும் என்ன தொடர்பு என்பதை விசாரிக்கவே இவை ஆதாரமாக உள்ளன என்ற முடிவிற்கு நாசா ஆய்வுக் குழு வந்துள்ளது. இதுகுறித்து விரைவில் நாசா தனது அதிகாரப்பூர்வமான அறிவிப்பை வெளியிட உள்ளது.

இங்கிலாந்தின் 'அஸ்ட்ரானமி நவ்' இதழின் துணையாசிரியர் எமிலி பால்ட்வின் இதுபற்றி கூறும்போது, 'விண்கல் பாறையில் படிந்துள்ளவை பூமியில் உருவானவை அல்ல என்று நிரூபிக்கப்பட்டால், நம்முடைய சூரிய குடும்பத்தின் கிரகங்களில் உயிர்கள் எப்போது, எப்படி தோன்றின என்பது குறித்த புரிதல் மேலும் அதிகமாகும்' என குறிப்பிட்டுள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

நிலவின் தளத்தில் நாசாவின் ரொக்கெட்டுக்கள் மோதல்

நாசா அனுப்பிய LCROSS (Lunar Crater Observation and Sensing Satellite) செயற்கைக் கோளுடன் இணைத்து அனுப்பப்பட்ட ரொக்கெட்டுக்கள் நிலவின் தளத்தில் மோதியுள்ளன.

மொத்தம் 2 ரொக்கெட்டுக்கள் மோத விடப்பட்டன. இரண்டுமே வெற்றிகரமாக நிலவின் தளத்தில் மோதி நின்றதாக நாசா தெரிவித்துள்ளது.

முதலில் 'சென்டார்' என்ற ரொக்கெட்டை மோத விட்டனர். நிலவின் தென் முனையில் இந்த ரொக்கெட் மோத விடப்பட்டது.

2000 கிலோ எடை கொண்ட அந்த ரொக்கெட், மணிக்கு 900 கிலோ மீட்டர் வேகத்தில் அசுர வேகத்தில் பாய்ந்து சென்று மோதியது.

இதையடுத்து 'ஷெபர்டிங்' என்ற 2ஆவது ரொக்கெட் மோத விடப்பட்டது. முதல் ரொக்கெட் மோதிய நான்கு நிமிடங்களில் 2ஆவது ரொக்கெட் மோத விடப்பட்டது. அதே கோணத்தில் இந்த ரொக்கெட்டும் விடப்பட்டது.

நிலவின் தளத்தில் தண்ணீர் இருப்பதை உறுதி செய்து கொள்வதற்கான ஆய்வுக்காக 'எல்கிராஸ்' அனுப்பப்பட்டுள்ளது. சந்திரயான்-1 விண்கலம், நிலவில் தண்ணீர் இருப்பதைக் கண்டுபிடிக்க உதவியதைத் தொடர்ந்து தற்போது அமெரிக்காவின் கவனம் நிலவின் மீது திரும்பியுள்ளது. 'எல்கிராஸ்' அனுப்பும் திட்டத்தின் செலவு 100 மில்லியன் டொலர் என்பது குறிப்பிடத்தக்கது.

2020ஆவது ஆண்டில் மீண்டும் நிலவுக்கு மனிதர்களை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. அதுதொடர்பான முக்கியத் தகவல்களுக்கும் இந்த 'எல்கிராஸ்' திட்டம் உதவும்.

'எல்கிராஸ்' செயற்கைக் கோள், ஜூன் 18ஆம் திகதி விண்ணில் செலுத்தப்பட்டது.

ஷெபர்டிங் ரொக்கெட்டில், அறிவியல் சார்ந்த அதி நவீன சாதனங்களும், நவீன கெமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. இந்த இரு ரொக்கெட்டுக்கள் மூலமும் நாசாவுக்கு பல்வேறு தகவல்கள் அனுப்பப்படவுள்ளன. அதை ஆய்வு செய்து நிலவின் தளத்தில் தண்ணீர் இருப்பது குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளது நாசா.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates