jkr
แสดงบทความที่มีป้ายกำกับ விமல் வீரவன்ச แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ விமல் வீரவன்ச แสดงบทความทั้งหมด

மக்கள் பிரதிநிதிகள் விலைகொடுத்து வாங்கப்படுவதாக விமல் வீரவன்ச குற்றச்சாட்டு


மக்கள் பிரதிநிதிகளை எதிர்க்கட்சியினர் விலைகொடுத்து வாங்குவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணியினர் இன்று நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் குறிப்பிட்டார்.

ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிடும் ஜெனரல் சரத் பொன்சேகாவின் குழுவினர் தனக்கு பணம் வழங்கியதாக குறிப்பிட்ட தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் மொஹம்மட் முஸம்மில், அது தொடர்பாக ஆதாரம் இருப்பதாகக் கூறி இறுவட்டுகளையும் ஊடகவியலாளர்களுக்கு மாநாட்டின்போது வழங்கினார்.

முன்னாள் பிரதியமைச்சர் மயோன் முஸ்தபா ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்த ஊடகவியலாளர் மாநாட்டுக்கு வருகை தந்திருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மொஹம்மட் முஸம்மில் இடையில் அங்கிருந்து சென்றார்.

அதன் பின்னர் தேசிய சுதந்திர முன்னணியினர் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஜெனரல் பொன்சேகா வெற்றிபெற்றால் பிரபாகரன் மீண்டும் உயிர்பெறுவார்-வீரவன்ச தெரிவிப்பு;


ஜெனரல் சரத் பொன்சேகாவின் தேசத் துரோக கும்பல் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறுமாயின் மரணித்த புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் மீண்டும் உயிர் பெறும் நிலையே உருவாகும். எனவே, மேலதிகமான இரண்டு இலட்சம் வாக்குகளுக்காக நாட்டை காட்டிக் கொடுக்கும் ஜெனரல் சரத் பொன்சேகாவை பொது மக்கள் புறக்கணிக்க வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச எம்.பி. தெரிவித்தார்..
புலிகள் இயக்கத்தின் ஊதுகுழலாக செயற்பட்ட அமெரிக்கா மற்றும் நோர்வே ஆகிய நாடுகள் இன்று ஜெனரல் சரத் பொன்சேகாவினை வெற்றி பெற வைப்பதற்கு பாரியளவு நிதியினை செலவிட்டு வருகின்றன என்றும் அவர் தெரிவித்தார். தேசிய சுதந்திர முன்னணியின் விசேட செய்தியாளர் மாநாடு நேற்று வெள்ளிக்கிழமை பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையலுவலகத்தில் நடைபெற்றப் போதே விமல் வீரவன்ச எம்.பி. மேற்கண்டவாறு கூறினார். இங்கு அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில் கூறியதாவது,.
ஜெனரல் சரத் பொன்சேகாவின் கூட்டணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு இணைந்ததன் மூலம் தேசத் துரோக கும்பல் தனது பரிபூரண நிலையை அடைந்துள்ளது. பாதுகாப்பு வலயங்கள், இராணுவ முகாம்கள் என்பனவற்றை வடக்கிலிருந்து முற்றாக அகற்றல், சுயாட்சியை ஏற்படுத்தல்,வடக்கையும் கிழக்கையும் மீண்டும் இணைத்தல், சிறையில் உள்ள புலி உறுப்பினர்களை விடுதலை செய்தல் உட்பட பல்வேறு நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு ஜெனரல் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற்றுக் கொண்டுள்ளார்..
இதனையே பிரபாகரனுடன் இணைந்து போர் நிறுத்த ஒப்பந்தம் மூலம் ரணில் விக்கிரமசிங்கவும் செய்தார். தற்போது ஜெனரல் சரத் பொன்சேகாவின் தேசத் துரோக கும்பல் மேற்கொள்ள உள்ள காட்டிக் கொடுப்பை போல இலங்கை அரசியல் வரலாற்றில் வேறொரு சந்தர்ப்பம் அமைந்திருக்காது. புலிகள் இயக்கத்தின் தேவையை பூர்த்தி செய்ய இன்று ஜெனரல் சரத் பொன்சேகா செயற்பட்டு வருகின்றார். இதற்கு சர்வதேச நாடுகள் பின்னணியில் நின்று செயற்படுகின்றன. புலிகளின் சர்வதேச செயற்பாட்டாளர்களில் ஒருவரான ருத்திரகுமார் 2010 ஆம் ஆண்டுக்கான வருட வாழ்த்து செய்தியில் தமது போராட்டம் வேறு வழியில் முன்னெடுக்கப்பட்டு வருவதாக குறிப்பிட்டிருந்தார். தேசப்பற்றை வாய் நிறைய பேசும் ஜே.வி.பி. இன்று புலிகளின் தேவையை பூர்த்தி செய்ய ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு ஆதரவு வழங்கி வருகின்றது. எனவே எதிர்வரும் 26 ஆம் திகதி தவறுதலாகக் கூட அன்னம் சின்னத்திற்கு வாக்களிக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கின்றேன்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

மருமகனின் ஆயுத நிறுவனம் குறித்து சரத் பொன்சேகா பகிரங்க விவாதம் மூலம் விளக்கமளிக்க வேண்டும்: விமல்


மருமகனின் ஆயுத நிறுவனத்தின் ஊடான கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் ஜனாதிபதி வேட்பாளர் சரத் பொன்சேகா, பகிரங்க விவாதமொன்றின் மூலம் நாட்டு மக்களுக்கு விளக்கமளிக்க வேண்டுமென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
முடியுமென்றால் தமது கட்சியுடன் பகிரங்க விவாதமொன்றை நடத்துமாறு விமல் வீரவன்ச, ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு பகிரங்க சவால் விடுத்துள்ளார்.

கட்சிக் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

பகிரங்க விவாதமொன்றில் கலந்து கொள்ளக் கூடிய இயலுமை ஜெனரல் சரத் பொன்சேகாவிடம் காணப்படாவிட்டால், அவரது பிரதிநிதிகளை இந்த விவாதத்திற்கு அனுப்பி வைக்குமாறு விமல் வீரவன்ச சவால் விடுத்துள்ளார்.

இந்த விவாதம் இலங்கையின் சகல இலத்திரனியல் ஊடகங்களின் ஊடாகவும் வெளியிடப்பட வேண்டுமென அவர் குறிப்பிட்டுள்ளார்.

சரத் பொன்சேகாவின் மருமகனின் நிறுவனம் எவ்வாறு ஆயுதக் கொள்வனவில் ஈடுபட்டது, கொடுக்கல் வாங்கல்களின் மூலம் எவ்வளவு பணம் திரட்டப்பட்டது போன்ற விடயங்கள் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு வார காலத்திற்குள் தமது சவாலுக்கு உரிய பதில் கிடைக்காவிட்டால், சரத் பொன்சேகாவின் மருமகனுக்குச் சொந்தமான ஆயுத நிறுவனம் தொடர்பான தகவல்கள் நாட்டு மக்களுக்கு அம்பலப்படுத்தப்படும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஜெனரல் சரத்துக்கு எதிராக சட்ட நடவடிக்கை : விமல் வீரவன்ச தெரிவிப்பு


பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு எதிராக பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்திய ஓய்வு பெற்ற இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இன்று தெரிவித்தார்.

தமது அமைச்சில் இன்று காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு விமல் வீரவன்ச மேலும் கூறுகையில்,

"நேற்று வெளியாகிய ஆங்கில வார இதழ் ஒன்றில் ஜெனரல் சரத் பொன்சேகா ஆதாரமற்ற பொய்க் குற்றச்சாட்டுகளை பாதுகாப்புச் செயலாளர் மீது சுமத்தியுள்ளார்.

இது தொடர்பில் அரசாங்க உயர் மட்ட அதிகாரிகளுடன் கலந்துறையாடப்பட்டு சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்படும். இந்த விவகாரம் தொடர்பில் விசாரணை செய்யும் பொறுப்பு இரகசியப் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்படும்" என்றார்.

40 வருடங்களுக்கும் மேலாக பாதுகாப்புப் படையில் சேவை புரிந்துள்ள அவர், இராணுவ சம்பிரதாயங்களை மீறிச் செயற்பட்டு வருகிறார் என்றும் அவர் குற்றஞ்சுமத்தினார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates