jkr

மற்றுமொரு தொகுதி மக்கள் கிளிவெட்டிக்கு இன்று அனுப்பி வைப்பு

மூதூர் கிழக்கு உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக மீள் குடியேற்றமின்றி 2006 ஆம் ஆண்டு முதல் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள நலன்புரி நிலையங்களில் தங்கியிருந்த குடும்பங்களில் மற்றுமொரு தொகுதியாக 32 குடும்பங்களைச் சேர்ந்த 109 பேர் இன்று கிளிவெட்டி இடைத்தரிப்பு முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

சத்துருக்கொண்டான் நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்த 25 குடும்பங்களைச் சேர்நத 82 பேரும், ஆலன்குளம் நலன்புரி நிலையத்தில் தங்கியிருந்த 7 குடும்பங்களைச் சேர்ந்த 27 பேரும் என 05 பஸ்களில் வெருகல் ஊடாக அதிகாரிகளினால் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர் என மாவட்ட புனர்வாழ்வுத் திட்ட உதவிப்பணிப்பாளர் ஏ.எல்.எம். சரீப் தெரிவித்தார்.
குறிப்பிட்ட உயர் பாதுகாப்பு வலயம் காரணமாக தமது இருப்பிடங்களை இழந்துள்ள சம்பூர் கிழக்கு, சம்பூர் மேற்கு, கூனித்தீவு மற்றும் கடற்கரைச்சேனை ஆகிய கிராம சேவையாளர் பிரிவுகளைச் சேர்ந்த 1523 குடும்பங்களைச் சேர்ந்த 6074 பேரில் 745 குடும்பங்களைச் சேர்ந்த 2565 பேர் மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 11 முகாம்களிலும் உறவினர்கள், நண்பர்கள் வீடுகளிலும் தங்கியிருந்தனர்.
அதிகாரிகள் தெரிவித்த தகவல்களின் படி,
மட்டக்களப்பு மாவட்டத்தில் இதுவரை பலாச்சோலை, மாவடிவேம்பு, கிரிமுட்டி, ஆரையம்பதி ஆதிவைரவர் கோவிலடி முகாம் சத்துருக்கொண்டான் இலக்கம் -01, 02 பாலமீன்மடு இலக்கம் 01, இலக்கம் 02, சிங்கள மகா வித்தியாலயம் மற்றும் ஆலங்குளம் ஆகிய முகாம்கள் மூடப்பட்டுள்ளன.
8 கட்டங்களில் கடந்த ஜூன் 16ஆம் திகதி முதல் இன்றுவரை 368 குடும்பங்களைச் சேர்ந்த 1330 பேர் இது வரை அங்கு அழைத்துச் செல்லப்பட்டு கிளிவெட்டி, பட்டித்திடல் மற்றும் தில்லாங்கேணி ஆகிய இடங்களில் தற்காலிகமாக குடியமர்த்தப்பட்டுள்ளனர்.
மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஏனைய குடும்பங்களைப் பொறுத்தவரை சாஹிரா வித்தியாலயம நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள 106 குடும்பங்களைச் சேர்ந்த 349 பேரும் எதிர்வரும் 24ஆம் திகதியும்-
கொக்குவில் நலன்புரி நிலையத்தில் தங்கியுள்ள 97 குடும்பங்களைச் சேர்ந்த 321 பேர் 30ஆம் திகதியும் அங்கு அனுப்பி வைக்க உத்தேசிக்கப்பட்டுள்ளதாகக் கூறும் மாவட்ட புனர்வாழ்வுத் திட்ட உதவிப் பணிப்பாளர் ஏ.எல்.எம். சரீப் தெரிவித்தார்.
இதன் பிரகாரம் மூதூர் கிழக்கிலிருந்து இடம் பெயர்ந்தோர் மட்டக்களப்பு மாவட்டத்தில் தங்கியிருந்த அனைத்து நலன்புரி நிலையங்களும் மூடப்பட்டு விடும் என்றும் அவர் குறிப்பிட்டார்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "மற்றுமொரு தொகுதி மக்கள் கிளிவெட்டிக்கு இன்று அனுப்பி வைப்பு"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates