170 இலங்கை மீனவர் இந்தியச் சிறைகளில்!

இலங்கை மீனவர்கள்170 பேர் கைது செய்யப்பட்டு இந்தியச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளதாகத் தெரிய வருகிறது.
இந்தியக் கடல் எல்லைக்குள் அத்துமீறிப் பிரவேசித்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்றொழில் திணைக்களம் கூறுகிறது.
இவர்கள் அந்தமான் தீவு, விசாகப்பட்டினம்,சென்னை ஆகிய சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அந்தமான், விசாகப்பட்டினம் சிறைகளில் மாத்திரம் 100க்கும் அதிகமானவர்கள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் இவர்கள் தொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் கூறுகிறது. இவர்களை வெகு விரைவில் நாட்டுக்கு அழைத்துவர முடியுமென நம்பப்படுகிறது.
இந்தியச் சிறைகளிலுள்ள சகல இலங்கை மீனவர்களையும் விடுவிப்பது தொடர்பாக இராஜதந்திர மட்டத்திலான நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாகவும் கடற்றொழில் திணைக்களம் கூறுகிறது.
0 Response to "170 இலங்கை மீனவர் இந்தியச் சிறைகளில்!"
แสดงความคิดเห็น