jkr

ஷில்பா ஷெட்டி மீது லண்டன் ஓட்டல் அதிபர் வழக்கு


பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மீது லண்டன் ஐகோர்ட் வழக்கு தொடர்ந்துள்ளது. சமீபத்தில் இங்கிலாந்தில் உள்ள டிபன் பைட்ஸ் என்ற பாஸ்ட் புட் உணவகத்தை, தனது காதலர் ராஜ்குந்த்ராவுடன் இணைந்து விலைக்கு வாங்கி உள்ளார் ஷில்பா. உணவகத்தின் 22 சதவீத பங்கு‌களை ரூ. 45 கோடி கொடுத்து இருவரும் வாங்கி உள்ளனர். ஷில்பா இந்த பங்குகளை வாங்க வேண்டும் என்பதற்காக, குறிப்பிட்ட உணவகத்தை நிறுவியவரான ஜமால் ஹிராணி என்பவரை வலுக்கட்டயமாக வெளியேற்றி உள்ளனர் அவரது பிற பங்குதாரர்கள். இதனையறித்த ஜமால் ஹிராணி, தனது கூட்டாளிகள் தன்னை ஏமாற்றி வெளியேற்றி விட்டதாகவும், இந்த உணவகத்தில் ஷில்பா ஷெட்டி முதலீடு செய்ய வேண்டும் என்பதற்காகவே தன்னை நீக்கி இருப்பதாகவும் கூறியுள்ளார். இதற்காக, ரூ. 11 கோடி நஷ்டஈடு கேட்டு நடிகை ஷில்பா ஷெட்டி மீது தொழிற்சாலை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்த ஹிராணி, தற்போது, ரூ. 45 கோடி நஷ்டஈடு கேட்டு லண்டன் ஐகோர்ட்டில் வழக்கு ‌தொடர்ந்துள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "ஷில்பா ஷெட்டி மீது லண்டன் ஓட்டல் அதிபர் வழக்கு"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates