மீள்குடியமர்வுக்காக மட்டக்களப்பு வந்தவர்கள் பொலிஸாரால் மீள் பதிவு

வவுனியா இடைத்தங்கல் முகாம்களிலிருந்து மட்டக்களப்பு மாவட்டத்திற்கு மீள் குடியேற்றத்திற்காக அழைத்து வரப்பட்ட குடும்பங்கள் சில பிரதேசங்களில் பொலிஸாரால் மீள் பதிவு செய்யப்பட்டு வருகின்றன.
885 குடும்பங்களைச் சேர்ந்த 2454 பேர் கடந்த ஒக்டோபர் மாதம் 23 ஆம் திகதி வரை மீள் குடியேற்றத்திற்காக அழைத்து வரப்பட்டு இருப்பிடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மாவட்ட புனர்வாழ்வு செயலக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸ் நிலைய பிரிவு ரீதியாக இக்குடும்பங்கள் தற்போது மீள் பதிவு செய்யப்பட்டு வருவதாக கூறப்படும் நிலையில் காத்தான்குடி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மண்முனை வடக்கு மற்றும் ஆரையம்பதி பிரதேச செயலகப் பிரிவுகளில் தங்கியுள்ள 48 குடும்பங்களைச் சேர்ந்த 212 பேர் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு மீள் பதிவு மேற்கொள்ளப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
0 Response to "மீள்குடியமர்வுக்காக மட்டக்களப்பு வந்தவர்கள் பொலிஸாரால் மீள் பதிவு"
แสดงความคิดเห็น