பொன்சேகாவுக்கு மேலதிகப் பாதுகாப்பு : லக்ஷ்மன் ஹுணுகல்ல

ஓய்வுபெற்ற முன்னாள் கூட்டுப்படைகளின் பிரதானி சரத் பொன்சேகாவுக்கு மேலதிக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹ{ணுகல்ல தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில், சரத் பொன்சேகாவின் பாதுகாப்பு குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.
உயர்தரத்திலான இராணுவ அதிகாரி ஒருவர் ஓய்வுபெற்றதும் அவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பை விட மேலதிகமான பாதுகாப்பை சரத் பொன்சேகாவுக்கு வழங்கியுள்ளதாகவும், அவரது வேண்டுகோளுக்கிணங்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் ஹுணுகல்ல மேலும் தெரிவித்தார்
0 Response to "பொன்சேகாவுக்கு மேலதிகப் பாதுகாப்பு : லக்ஷ்மன் ஹுணுகல்ல"
แสดงความคิดเห็น