jkr
แสดงบทความที่มีป้ายกำกับ சரத் பொன்சேகா แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ சரத் பொன்சேகா แสดงบทความทั้งหมด

யுத்தம் முடியமுன் முடிவடைந்து விட்டதாக கூறி, ஜனாதிபதி விமான ஓடுபாதையை முத்தமிட்டார்: சரத் பொன்சேகா


யுத்தம் முடிவடைவதற்கு முன்னரே யுத்தம் முடிவடைந்து விட்டதாக கூறி ஜனாதிபதி விமான ஓடுபாதையை முத்திட்மிட்டுவிட்டதாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். அத்தமது ஜாதகத்தை மஹிந்த ராஜபக்சவே அதிக தடவை பார்த்திருப்பதாகவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் நாளை மறுநாள் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தாம் 10 வீத மேலதிக வாக்குகளால் வெற்றிப்பெறப்போவதாக பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். எனினும், யாழ்ப்பாணம் உட்பட்ட நாடளாவிய ரீதியில், வாக்கு மோசடிகள் ஏற்படுத்தப்படக்கூடிய ஏதுநிலைகள் தோற்றுவிக்கப்பட்டுள்ளமை குறித்து அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார். குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கு அண்மையில் இராணுவ அதிகாரிகள் சிலர் இடமாற்றம செய்யப்பட்டமை இந்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இராணுவ வாழ்க்கையில் உயரதிகாரிகளின் கட்டளைகளை நிறைவேற்றும் பண்புகளே அதிகமாக காணப்படுகின்றன. எனினும் அரசியல் வாழ்க்கையில் அது மாறிக்காணப்படுகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சொல்வதையெல்லாம் இலங்கை மக்கள் நம்புகிறார்களா என்பது கேள்விக்குரியதாகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ராஜபக்ச ஏற்கனவே இந்த தேர்தலில் தோல்வி ஏற்படப்போகிறது என்ற சந்தேகத்தில் உள்ளார். எனவேதான் அவர், வாக்குப்பெட்டிக் கொள்ளைகளில் ஈடுபட முயற்சிக்கிறார் எனக் குறிப்பிட்டுள்ள சரத் பொன்சேகா, நாட்டின் 85 வீத மக்கள் நாளை மறுதினம் நடைபெறவுள்ள தேர்தலில் வாக்களித்தால் தாம் 55 வீத வாக்குகளையும் மஹிந்த ராஜபக்ச 45 வீத வாக்குகளையும் பெறக்கூடிய வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் பொறுப்பாக இருந்த இராணுவக் கட்டளையதிகாரி தேர்தல் தினத்தன்று பங்களாதேஸுக்கு அனுப்பப்படவுள்ளார்.

அதேநேரம் தமிழீழ விடுதலைப்புலிகளுடன் தொடர்புடையவர் எனக்கூறி கொள்ளுப்பிட்டியில் கைது செய்யப்பட்ட அதிகாரி ஒருவர், இவர் பாதுகாப்பு செயலாளாரின் வலதுகையாக செயற்படுபவர். இந்தநிலையில் கிளிநொச்சியில் பொறுப்பாக உள்ள இவரை யாழ்ப்பாணத்தின் கடமைகளையும் பொறுப்பேற்குமாறு கேட்கப்பட்டுள்ளது.

வடமராட்சிக்கு பொறுப்பாகவிருக்கும் படையதிகாரி, கொழும்புக்கு உடனடியாக மாற்றம் பெற்றுள்ளார்.

இவையாவும் அரசாங்கம் தேர்தலில் வாக்குமோசடிகளில் ஈடுபடப்போவதை சுட்டி நிற்பதாக சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார்.

தாம் ஒரு நியாயமான அரசியல்வாதியாக நடந்துக்கொள்ள முனைவதாக குறிப்பிட்டுள்ள அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் தாம் பின்னிற்கப்போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார். தாம் ஆட்சிக்கு வந்ததும் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்று அங்கு இலங்கைக்கு எதிராக சுமத்தப்பட்டுள்ள மனித உரிமை மீறல்கள் மற்றும் போர் குற்றச்சாட்டுக்கள் என்பவை தொடர்பில் உரிய விளக்கங்களை வழங்கப்போவதாக தெரிவித்துள்ளார் சரத்பொன்சேகா.

மஹிந்த ராஜபக்சவுக்கு எவ்வாறு யுத்தம் மேற்கொள்ளப்பட்டது என்பது தெரியாது. அவர் தமது ( மம பப்புவ தெனவா) இதயத்தை தருவதாக கூறினாலும் போர் எவ்வாறு நடத்தப்பட்டது என்பது தெரிந்திருந்தால், போர் குற்றச்சாட்;டுகளுக்கு உரிய முறையில் விளக்கமளித்து இலங்கையின் பெயருக்கு ஏற்பட்டுள்ள களங்கத்தை போக்கியிருக்கலாம். ஆனால் அதனை அவர் செய்யவில்லை. இந்தநிலையில் அதனை உரியமுறையில் கையாண்டு இலங்கைக்கு கிடைக்கவேண்டிய ஜிஎஸ்பி பிளஸ் ஆடைக்கோட்டா சலுகையை பெற்றுக்கொடுக்கப்போவதாக குறிப்பிட்டுள்ளார்.

தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் வாய்மூலமான சில விடயங்கள் ஏற்றுக்கொள்ள்ப்பட்டுள்ளன. ஊழல்களை ஒழித்தல், சம உரிமை, இனங்களுக்கு இடையில் இணக்கத்தை ஏற்படுத்துதல், போன்ற விடயங்களில் தமக்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையில் இணக்கங்கள் ஏற்பட்டுள்ளன. எனினும் மஹிந்த ராஜபக்ச, இதனை பயங்கரமானதாக காட்டி, இனங்களுக்கு இடையிலான உறவை பிரச்சினைக்கு உள்ளாக்கப்பார்க்கிறார் என சரத் பொன்சேகா குற்றம் சுமத்தியுள்ளார்.

தமக்கு வழங்கப்பட்டுள்ள தபால் மூல வாக்களிப்பின் போது படையினர் மற்றும் பொலிஸ் தரப்பில் இருந்து 80 வீதமான வாக்குகள் அளிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்ட அவர், அதில் மின்னேரிய முகாமில் அளிக்கப்பட்ட 195 வாக்குகளில் தமக்கு 192 வாக்குகள் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார். 51 வது படைப்பிரிவில் அளிக்கப்பட்ட 82 வாக்குகளில் தமக்கு 72 வாக்குகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

யுத்தம் முடிவடைவதற்கு இரண்டு மூன்று இருக்கும் வேளையிலேயே இலங்கைக்கு ஜோர்தானில் இருந்து வந்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, களத்தில் இருந்த கட்டளைத் தளபதி சவேந்திர சில்வாவை தொடர்புகொண்டு யுத்தம் முடிவடைந்து விட்டதா எனக் கேட்டுள்ளார். அதற்கு அவர், இன்னும் இரண்டு நாட்கள் எடுக்கும் எனப் பதிலளித்துள்ளார்.

இந்தநிலையிலேயே ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சயுத்தம் முடிவடைந்து நாட்டை மீட்டுவிட்டதாக, விமான ஓடு பாதையை முத்தமிட்டதாக சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

தமது ஜாதக நிலைமைகள் நன்றாக இருப்பதாக கூறியுள்ள சரத் பொன்சேகா, தம்மை விட தமது ஜாதகத்தை மஹிந்த ராஜபக்சவே அதிகமாக பார்த்திருப்பதாக தெரிவித்துள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

படையினர் நியாயமாகவே செயற்படுவதாக பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா தெரிவிப்பு


மேலிருந்து கீழாக நாட்டை தாம் அபிவிருத்தி நிர்வாகத்தின் கீழ் கொண்டு வரவிருப்பதாகவும், ஜனாதிபதி – பிரதமர் – அமைச்சரவை என்ற அடிப்படையில் நாட்டை நிர்மாணிக்கவிருப்பதாகவும் எதிர்க்கட்சி பொது வேட்பாளர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மதவாச்சியில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

முதலில் ஜனாதிபதி, உதாரண புருசனாக இருக்கவேண்டும் பின்னர் பிரதமரும் உதாரணமாக திகழவேண்டும், அதேபோலவே அமைச்சரவை உறுப்பினர்களும் உதாரணமாக இருக்கவேண்டும் என பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

இதன் போதே நாட்டு மக்களுக்கு சிறந்த முன்மாதிரியை தோற்றுவிக்கமுடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரசியல் தலையீடுகள் அற்ற நிர்வாகம் மேற்கொள்ளப்படுவதன் ஊடாக, ஊழலற்ற அரசியலை மேற்கொள்ளமுடியும் என்றும் சரத் பொன்சேகா குறிப்பிட்டுள்ளார்.

இதற்கிடையில் தாம் மக்களுக்கு வழங்கிய உறுதி மொழிகள் தற்போதும் மக்களுக்கு கிடைக்கப்பெற்று வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸ் அதிகாரிகளினால் தவறுகள் நிகழாமல் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 90 சதவீதம் அவர்கள் நியாயமாகவே செயற்படுகின்றனர்.

இராணுவ வீரர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள், தவறு செய்யாமல் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாம் உறுதியளித்தது போன்ற நாடு தற்போதே மக்களின் கைகளில் கிடைக்க ஆரம்பித்துள்ளதாகவும், அதன் ஆரம்பமே தற்போது வெளிக்காட்டப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் பொலிஸாரின் சிறந்த நிர்வாகம், நீதியான தன்மை, நீதி காப்பாற்றப்படல் என்பன இப்போது ஆரம்பித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இறுதிப்போரில் 30 ஆயிரத்திற்கு மேற்பட்ட படையினர் பலி; 36 ஆயிரம் வீரர்கள் அங்கவீனர்களாயினர்: சரத் பொன்சேகா


இறுதிப்போரில் முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட படையினர் உயிரிழந்துள்ளதாக சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். நேற்று முன்னாள் சனிக்கிழமை மாத்தளையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றிய போது இத்தகவலை வெளியிட்டுள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,

தற்போது மகிந்த ராஜபக்ச அரசு போர் வெற்றியினை விற்று அரச தலைவர் தேர்தலில் வெல்வதற்கு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

நாட்டில் இனமொழி பேதங்களை ஒழித்து மக்கள் அனைவருக்கம் சம உரிமைகளை பெற்றுக்கொடுத்து மக்களது தனித்தன்மையினை பாதுகாக்க தொடர்ந்தும் உழைப்பதாக சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

தற்போது இலங்கை அரசு தமது சொந்த இலாபத்திற்காகவும் ஆட்சியின் பதவிகளை தக்க வைப்பதற்காகவும் தென்பகுதி சிங்கள மக்களையும் வடபகுதி தமிழ் மக்களையும் ஒருவருக்கெருவர் எதிரிகளாக உருவாக்கும் சதிகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

வன்னியின் இறுதிக்கட்ட போரில் முப்பதாயிரத்திற்கு மேற்பட்ட சிங்கள இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாகவும் முப்பத்தியாறாயிரத்திற்கு மேற்பட்ட படைவீரர்கள் அங்கவீனர்கள் ஆக்கப்பட்டுள்ளதாகவும் சரத் பொன்சேகா மேலும் தெரிவித்துள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

தான் ஜனாதிபதியானால்....பொன்சேகா ஒப்பமிட்டு சம்பந்தனிடம் கையளித்துள்ள ஆவணம்


ஜனாதிபதியாகத் தாம் தெரிவு செய்யப்படும் பட்சத்தில் தற்போது நடைமுறையிலுள்ள அவசரகாலச் சட்டத்தைத் தாம் நீக்குவார் என எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கு உறுதியளித்து கைச்சாத்திட்டு, சம்பந்தனிடம் கையளித்துள்ள ஆவணத்தில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
சரத் பொன்சேகா தான் கைச்சாத்திட்டுத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனிடம் கையளித்துள்ள அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளவை வருமாறு:

1. சிவில் நிர்வாகத்தையும் இயல்பு நிலையையும் ஏற்படுத்துதல்:

I. கிராமசேவையாளர் அலுவலகம் முதற்கொண்டு அனைத்து சிவில் நிர்வாகக் கட்டமைப்புகளையும் மீள ஏற்படுத்துதல் இராணுவ, பொலிஸ் மற்றும் அரசியல் தலையீடுகளிலிருந்து விடுவித்தல்.

II. ஒவ்வொரு பிரதேசத்திற்கும் அதன் பிரதேச செயலாளர் தலைமையிலான குழுவொன்று அமைக்கப்படும்.

இக்குழுவில் ஜனாதிபதியால் நியமிக்கப்படுபவர் பிரதேச செயலாளர்கள்
ஏனைய அதிகாரிகள் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அவர்களது பிரதிநிதிகள் உள்ளூர் அதிகார சபைகளின் பிரதிநிதிகள் நீதித்துறை அதிகாரிகள் பாதுகாப்புப் படையினர், அதன் தளபதிகள் வடக்குக் கிழக்கிற்கான அதிகாரிகள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் மற்றும் அதிகாரிகள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் இடம்பெறுவர்.

இவர்கள் ஒருமாத காலத்திற்குள் உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாட்டுத் திட்டமொன்றை உருவாக்குவர். இதில் ஏற்படும் முன்னேற்றம் குறித்த மாதாந்த அறிக்கைகள் ஜனாதிபதி, அமைச்சரவை மற்றும் நாடாளுமன்றிற்குச் சமர்பிக்கப்படும். இதில் ஏற்படும் முன்னேற்றத்தைக் கண்காணித்து அது நடைமுறைப்படுத்தப்படுவதை உறுதிசெய்வதற்காக ஜனாதிபதியின் கீழ் செயலகமொன்று அமைக்கப்படும்.

III. உடனடியாக ஜனாதிபதி செயலணியொன்றை அமைத்தல்.

IV. தேசியப் பாதுகாப்பைக் கருத்தில் எடுத்த பின்னர், பாதுகாப்புப் படையினரைக் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் மாத்திரம் நிறுத்துதல். பாதுகாப்புப் படையினரை மீள நிறுத்தும் போது உயர் பாதுகாப்பு வலயங்களை அகற்றுதல்.

V. பாதுகாப்புப் படையினர் மற்றும் பொலிஸாரின் தலையீடு இன்றி அனைவரும் நடமாடுவதற்கான சுதந்திரத்தை உறுதி செய்தல்.

VI. தமிழ் பேசக்கூடிய பொலிஸாரை சாத்தியமான அளவிற்குப் பணியில் ஈடுபடுத்தல்.

2. துணை இராணுவக் குழுவினர் மற்றும் ஆயுதக் குழுக்களைத் தடைசெய்தல்.

I. அனைத்துத் துணை இராணுவக் குழுவினரையும் ஆயுதமேந்திய குழுவினரையும் உடனடியாகக் கலைத்தல்.

II. பொதுமக்கள் வாழும் பகுதிகளை ஆயுதங்கள் அற்ற பகுதிகளாக்குதல்.

III. படையினர், பொலிஸாரைத் தவிர அனுமதிப்பத்திரம் வைத்துள்ளவர்கள் மாத்திரம் துப்பாக்கிகளை வைத்திருக்க அனுமதிக்கப்படுவர்.

3. இடம்பெயர்ந்த மக்களை மீள்குடியேற்றுதல், புனர்வாழ்வளித்தல்.

I. நிலக்கண்ணி வெடிகளை அகற்றும் பிரிவினர் ஊடாக இந்த நடவடிக்கையைத் துரிதப்படுத்தல்.

II. இடம்பெயர்ந்த மக்கள் தமது சொந்த இடங்களுக்கு அனுப்பப்படுவர். வீடுகள் அழிக்கப்பட்டவர்களுக்கு வேறு தங்குமிடங்கள் வழங்கப்படும். மேலும் தம்மை மீளக்கட்டியெழுப்பவும், வாழ்வாதாரத்தை மீண்டும் ஏற்படுத்தவும் நிதியுதவி வழங்கப்படும்.

III. அத்தியாவசிய உணவு வழங்கப்படும். மருத்துவ நிலையங்கள், வைத்தியசாலைகள், பாடசாலைகள் போன்ற சமூக உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தப்படும்.

4. நிலமும் விவசாயமும்

I. தற்போது பாதுகாப்புப் படையினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள அனைத்துத் தனியார் நிலங்களும் உரியவர்களிடம் மீள ஒப்படைக்கப்படும்.

II. மேலே குறிப்பிடப்பட்ட குழுக்கள் இதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளும்.

III. கட்டடங்களுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான நஷ்டஈட்டை அரசு வழங்குவதற்கான திட்டமொன்றைக் குழு முன்வைக்கும்.

* பின்வரும் குழுவினர் தொடர்பாக ஆராய்ந்து நீதியான, சட்டரீதியான தீர்வு காணப்படும்.

(அ) அரசிற்கு உரிய காணிகளிலிருந்து வெளியேற்றப்பட்டவர்கள்.

(ஆ) அரச காணிகளில் இருப்பதற்கு உரித்திருந்தும் உரிமை மறுக்கப்பட்டவர்கள்.

(இ) அரச காணிகளை சட்ட விரோதமாக ஆக்கிரமித்தவர்கள்.

(ஈ) அரச காணிகளைக் கண்மூடித்தனமாக பாரதீனப்படுத்தல் நிறுத்தப்படும். இதுவரை இடம்பெற்றவைகள் குறித்து மீள ஆராயப்படும். அத்தகைய பாரதீன நடவடிக்கை நிறுத்தப்படும்.

அரச காணிகள் வெளியாருக்குப் பாரதீனப்படுத்தப்பட்ட விடயத்தில் வெளிப்படையாக மேற்கொள்ளப்படாத சகலருக்கும் சம வாய்ப்பை வழங்காத மக்களால் தெரிவுசெய்யப்பட்ட அந்தந்தப்பகுதி பிரதிநிதிகளுடன் உரிய ஆலோசனை மேற்கொள்ளப்படாத தேவையற்ற ஊழல் இடம்பெற்ற காணிக் கையளிப்பு விடயங்களிலேயே இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படும்.

5. மீன்பிடித்துறை

I. மீன் பிடிப்பதற்கான முழுமையான உரிமை வழங்கப்படும்.

II. பாதுகாப்பை உறுதிசெய்வதற்காக மீன்பிடித் தொழில்துறையைச் சேர்ந்தவர்கள் மற்றும் கடற்படையைச் சேர்ந்தவர்களை உள்ளடக்கிய குழு அமைக்கப்படும்.

6. வியாபார, வர்த்தகம்

I. பயணிகள் செல்வதற்கும் பொருள்கள், விவசாயம், மீன்பிடித்துறைப் பொருட்கள் கொண்டுசெல்வதற்குமான சகல கட்டுப்பாடுகளும் நீக்கப்படும்.

II. கப்பம் பெறுபவர்களுக்கு எதிராகக் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

7. போக்குவரத்து

I. ரயில் சேவை, யாழ். குடாநாட்டிற்குள் எவ்வித தாமதமுமின்றி மீள ஏற்படுத்தப்படும்.

II. கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்திற்கான சகல தடைகளும் அகற்றப்படும். இவற்றிற்கான கட்டணங்களும் குறைக்கப்படும்.

III. பருத்தித்துறையிலிருந்து திருகோணமலை வரை தனியார் துறையினரின் ஒத்துழைப்புடன் புதிய ரயில் பாதை அமைக்கப்படும்.

8. விசேட நிவாரணத் திட்டங்கள்

I. யுத்தத்தின் போது கொல்லப்பட்டவர்களில் தங்கியிருப்பவர்களுக்கு

II. யுத்தம் காரணமாக அங்கவீனர்களானவர்களுக்கு விசேட நிவாரணத்திட்டம் முன்னெடுக்கப்படும்.

9. தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள்

I. குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்கான ஆதாரமில்லாமல் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் அனைவரும் ஒருமாதத்திற்குள் விடுவிக்கப்படுவர்.

II. யுத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்களுக்குப் பொதுமன்னிப்பு அடிப்படையில் புனர்வாழ்வளித்தல்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

பதவிக்கு வந்தால் பாதுகாப்பு வலயங்களை நீக்குவேன்: யாழ்ப்பாணத்தில் சரத் பொன்சேகா

யாழ்ப்பாணத்தில் கடத்தப்பட்டோர் மற்றும் காணாமல் போனோர் தொடர்பில், எதிர்வரும் ஜனவரி 27 ஆம் திகதிக்கு பின்னர், விசாரணைக்குழுக்கள் அமைக்கப்பட்டு உரிய விசாரணைகள் முன்னெடுக்கப்படும் என எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று மாலை இடம்பெற்ற ஊடக சந்திப்பில் உரையாற்றிய அவர், நிரந்தரமாக காணாமல் போயிருப்போர் தொடர்பில் நட்டஈடுகள் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

அதேநேரம் யுத்தத்தின் முன்னரும் பின்னரும் பலர் கைது செய்யப்பட்டும் காணாமல் போயுமுள்ளனர். இவர்கள் பெயர், விபரங்கள் வெளியிடப்படும் என தெரிவித்த அவர், சரணடைந்த நிலையில் தமிழீழ விடுதலைப்புலிகள் எனக் கருதப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள் தொடர்பில் உரிய நடவடிக்கைகள் விரைவுபடுத்தப்படும் என குறிப்பிட்டார்.

யுத்தம் முடிவடைந்த நிலையில் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்பட்டுள்ள அதியுயர் பாதுகாப்பு வலயங்களை வைத்திருப்பதனால் எவ்வித பயன்களும் இல்லை. எனவே தாம் ஆட்சிக்கு வந்தால் அந்த பாதுகாப்பு வலயங்கள் நீக்கப்படும். பலாலி அதியுயர் பாதுகாப்பு வலயத்தின் பல இடங்களிலும் விவசாய நடவடிக்கைகளுக்கு உரிய வகை செய்யப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இடம்பெயர்ந்துள்ள மக்கள் தொடர்பில் கருத்துரைத்த அவர், வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து மீண்டும் குடியமர்த்தப்படுகின்ற மக்களுக்காக வெளிநாட்டு உதவிகள் கிடைக்கின்ற போதும் அவர்களின் அடிப்படை வசதிகளைக்கூட அரசாங்கம் செய்துகொடுக்கவில்லை என குற்றம் சுமத்தினார்.

இதேவேளை.இந்த ஊடக மாநாட்டில் உரையாற்றிய ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், வன்னி யுத்தத்தின் போது, மக்களால் வங்கிகளில் அடகு வைக்கப்பட்ட பல கோடி ரூபாய் பெறுமதியான நகைகள் மீட்கப்பட்டன. இவை உரியவர்களின் அடையாளங்களுடன் இருக்கின்ற போதும் அவற்றை ஏன் இன்னும் அரசாங்கம் உரியவர்களிடம் ஒப்படைக்கவில்லை எனக்கேள்வி எழுப்பினார்.

யாழ்ப்பாண மக்கள் தெற்கில் ஒரு ஆட்சி மாற்றம் வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கு முன்னதாக யாழ்ப்பாண வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்ற காணாமல் போனோர் மற்றும் கடத்தப்பட்டோரின் உறவினர்களுடனான சந்திப்பின் போது நூற்றுக்கணக்கான உறவினர்கள், கதறி அழுத காட்சியை காணமுடிந்ததாக யாழ்ப்பாண தகவல்கள் தெரிவிக்கின்றன.

Print Send Feedback
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கண்ணிவெடி அகற்றப்படாத இடங்களிலேயே மக்கள் மீள் குடியமர்த்தப்படுகின்றனர் : சரத் பொன்சேகா குற்றச்சாட்டு


உள்ளக இடப்பெயர்வுக்கு உள்ளான மக்கள் நிலக்கண்ணி வெடிகள் அகற்றப்படாத இடங்களிலேயே குடியமர்த்தப்பட்டு வருவதாக எதிர்கட்சிப் பொது வேட்பாளர் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை கந்தளாயில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்தினை தெரிவித்துள்ளார்.

முன்னதாக இடம்பெயர்ந்த மக்களை, நிலக்கண்ணி வெடிகளைக் காரணம் காட்டி குடியமர்த்தாது வந்த அரசாங்கம், தற்போது அதனைப் பொருட்படுத்தாது குடியமர்த்தி வருகிறது.

இது அரசாங்கத்தின் அப்பட்டமான தேர்தல் பிரசாரம் என அவர் இதன் போது குற்றம் சுமத்தினார்.

இதேவேளை அரசாங்கத்தினால் இதுவரையில் குடியமர்த்தப்பட்ட மக்கள் அனைவரும், தமக்கான அடிப்படை உட்கட்டுமான வசதிகள் எவையும் இன்றி இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அரசாங்கம் முன்னதாக அறிவித்த வகையில் எதிர்வரும் ஜனவரி 31ம் திகதிக்கு முன்னதாக இடம்பெயர்ந்த மக்களை மீள் குடியேற்றுவதற்கான எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், திட்டமிட்டப்படி ஜனவரி 31ம் திகதிக்கு முன்னதாக அரசாங்கம் இடம்பெயர்ந்த மக்கள் அனைவரையும் மீள் குடியமர்த்தும் என மனித உரிமைகள் அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

இதற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

மாபெரும் யுத்தவீரர் சேதத் துரோகியானார்.. -ஹெலஉறுமய பொன்சேகா மீது சாடல்


அரசின் மீது சர்வதேச நாடுகள் யுத்தக்குற்ற விசாரணைகள் நடத்துவதற்கு தேவையான தகவல்கள் மற்றும் ஆதாரங்கள் அனைத்தையும் ஜெனரல் சரத்பொன்சேகா சர்வதேசத்துக்கு பெற்றுக் கொடுத்து விட்டார் என்று ஜாதிக ஹெல உறுமய நேற்று முன்தினம் குற்றம் சாட்டியுள்ளது. மகாவலி கேந்திர நிலையத்தில் நேற்றுமுன்தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக் கொண்டு உரையாற்றிய ஜாதிக ஹெல உறுமயயின் செயலாளர் ரிசாந்த வர்ணகுலசூரிய இதுதொடர்பாக மேலும் தெரிவிக்கையில் இவ்வருடம் டிசம்பர் மாதம் 13ம் திகதி இந்நாட்டின் நற்பெயருக்கு களங்கம் ஏற்பட்ட நாளாகும். அந்நாள் தான் எதிர்கட்சிகளின் பொதுவேட்பாளர் சரத்பொன்சேகா எமது படையினரையும் யுத்தவெற்றியையும் காட்டிக் கொடுத்தார் யுத்தக்களத்தில் படையினரின் சரணடைய வந்த புலித்தலைவர்களை சுட்டுக்கொல்ல பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ உத்தரவிட்டார் என்று பொன்சேகா 13ம் திகதி சண்டே லீடர் பத்திரிகைக்கு தெரிவித்திருந்தார். இதன்மூலம் வரலாற்றில் இலங்கைக்கு எதிராக என்றுமில்லாதவாறு பாரிய துரோகம் இழைக்கப்பட்டிருக்கிறது இது பெரும் காட்டிக்கொடுப்பு இக்கூற்று புலி ஆதரவாளர்களுக்கும் சர்வதேசத்திற்கும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இலங்கை அரசு மீது யுத்தக்குற்ற விசாரணையை நடத்துவதற்கு ஆதாரங்களைத் தேடிக் கொண்டிருந்த சர்வதேசத்துக்கு பொன்சேகா அனைத்து தகவல்களையும் பெற்றுக் கொடுத்து விட்டார் பெரும் யுத்தவீரரான பொன்சேகா இப்போது பெரும் தேசத்துரோகியாக மாறியுள்ளார். இந்த சரத் பொன்சேகாவால் ஒருபோதும் வெற்றிபெற முடியாது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் வெற்றி உறுதியாகி விட்டது. ஜனவரி மாதம் 26ம் திகதிக்கு பின்னர் ஐக்கிய தேசிய கட்சிக்கும் ஜே.வி.பிக்கும் அரசியல் நடத்தவே முடியாமல் போய்விடும் என்றார்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

'பிரபாகரனைக் கொன்றவன் நான்" - சரத் பொன்சேகா


சரத் பொன்சேகா அமெரிக்காவின் நோக்கத்தை நிறைவேற்றத் தொடங்கியிருக்கின்றார்.மகிந்த ராஜபக்சவிற்கு எதிராகவும், கோத்தபாய ராஜபக்சவிற்கு எதிராகவும் சாட்சியங்களைப் பெறுவதற்கு சரத் பொன்சேகா சரியான ஆள் என்று கணக்குப் போட்ட அமெரிக்கா, அவரிடமிருந்து சாட்சியத்தைப் பெற முயற்சித்தது. அவர் அமெரிக்காவிற்கு கடந்த மாதம் சென்றிருந்தபோது அவரிடம் சாட்சியத்தைப் பதிவுசெய்ய முயன்றது.

அவர் சாட்சியமளிக்காமலே அவசரம் அவசரமாக நாட்டிற்கு திருப்பி அழைக்கப்பட்டார். ஒரு ஓய்வுபெற்ற ராணுவத் தளபதியாக மட்டும் இருந்துகொண்டு மகிந்த மீதான குற்றச்சாட்டுக்களை சுமத்துவதைவிட அவரது அரசியல் எதிரியாக- ஒரு அரசியல்வாதியாக இருந்துகொண்டு குற்றம்சுமத்துவது நல்லது என்று கணக்குப்போட்ட அமெரிக்கா, அவரை அரசியல்வாதியாக மாற்றியது.

இன்று அவர் மகிந்த மீது விடுக்கும் குற்றச்சாட்டுக்கள் ஒரு எதிர்தரப்பு அரசியல்வாதியாக இருந்துகொண்டு தொடுக்கும் அரசியல் குற்றச்சாட்டுக்களாகிவிடுகின்றன. யார் இந்த சரத் பொன்சேகா? சரத் பொன்சேகா பற்றியும், அவரது தமிழ் மக்கள் மீதான படுகொலைகள் குறித்தும் தெரியாத தமிழர்கள் இருக்கமுடியாது. யாழ்ப்பாணத்தில் நூற்றுக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் படுகொலை செய்யப்பட்டு செம்மணி மயானப்பகுதியில் புதைக்கப்பட்ட வரலாற்றை தமிழ் மக்கள் இலகுவில் மறந்திருக்கமாட்டார்கள்.

அறுநூறுக்கும் அதிகமான அப்பாவித் தமிழர்களை செம்மணியில் புதைத்த பெருமைக்குரிய சிங்கள படையதிகாரி வேறுயாருமல்ல, சாட்சாத் இந்த சரத் பொன்சேகாவேதான். அந்த ஒருயொரு தகுதிதான் அவரை இராணுவத்தளபதியாக மாற்றியது. புலிகளுக்கு எதிரான யுத்தம் தீவிரமடையும்போது அப்பாவி தமிழ் மக்களும் பலியாகவேண்டிவரும் என்பது அனைத்து தரப்பினருக்கும் புரிந்திருந்தது.

அவ்வாறு அப்பாவி தமிழ்மக்கள் பலியாகின்றபோது, யுத்தத்தை விழிநடத்துகின்ற தளபதி, யுத்தத்தை தொடர்வதற்கு தயக்கம்காட்டலாம். ஆனால் சரத் பொன்சேகா தளபதியாக இருந்தால், அப்பாவிகள் பலியாவது கண்டு அவர் சஞ்சலமடையப்போவதில்லை. இதனை நன்கு தெரிந்து வைத்திருந்ததால்தான் அவரை தளபதி ஆக்கினார் கோத்தபாய.

யாழ்ப்பாணத்தில் சரத் பொன்சேகா தமிழ்மக்களை கொன்றுகுவித்த காலங்களில் சாதாரண மேஜர் தர அதிகாரியாக வடமராட்சியில் பணியாற்றிய கோத்தபாய, சரத் பொன்சேகா பற்றி தெரிந்து வைத்திருந்ததால் அவரை தளபதியாக்கினார்.

கடந்த ஜுலை மாதம் பத்தாம் திகதி யுத்த வெற்றிக்காக சரத் பொன்சேகாவுக்கு அம்பலாங்கொடையில் பாராட்டுவிழா நடாத்தப்பட்டது. அங்கு உரையாற்றிய அப்போதைய ராணுவத்தளபதி சரத் பொன்சேகா பின்வருமாறு கூறினார். நான் படை வீரர் என்ற வகையில் அவ்வப்போது தேவையான உத்தரவுகளை பிறப்பித்து யுத்தத்தை வெற்றிகொண்டேன்.

படை வீரர்களிடம் சரணடைய வரும் எவரையும் ஒன்றும் செய்ய வேண்டாம் என எனக்கு உத்தரவு வழங்கப்பட்டிருந்தது. குளிர் அறையிலிருந்து சொல்பவர்களின் உத்தரவை நான் ஏற்கவில்லை என்றார். அதாவது, புலிகளின் முக்கிய தலைவர்களான நடேசன், புலித்தேவன் உட்பட்ட சில தலைவர்கள் தாம் சரணடைய விரும்புவதை நோர்வே ஊடாக பசில் ராஜபக்சவிற்கு தெரிவித்தனர். அவர்களை வெள்ளைக்கொடிகளை ஏந்தியவாறு வந்து படையினரிடம் சரணடையுமாறு பசில் கூறியிருந்தார். ஆனால் அவ்வாறு அவர்கள் சரணடைந்தபோது படையினர் அவர்களை சுட்டுக்கொன்றதாக அப்போது புலிகள் குற்றம்சாட்டியிருந்தனர்.அதாவது, குளிர் அறையிலிருந்து பசில் விடுத்த உத்தரவை சரத் பொன்சேகா ஏற்கவில்லை. அவர் தனது படைத் தளபதிக்கு அவர்களை சுட்டுக்கொல்லுமாறு உத்தவிட்டிருந்தார்.

இதே சரத் பொன்சேகா கடந்த ஞாயிறன்று வெளியான ஆங்கிலப் பத்திரிகை ஒன்றிற்கு வழங்கிய பேட்டியில் பாதுகாப்பு செயலர் கோத்ததபாயவின் உத்தரவின்பேரில் சவேந்தர் சில்வா என்ற அதிகாரியே புலித் தலைவர்களை சுட்டுக்கொன்றதாக கூறியிருக்கிறார்.

ராணுவத்தளபதியாக இருந்தபோது தானே சுட்டுக்கொன்றதாக கூறிய அவர், இப்போது அரசியல்வாதியாக மாறியபின்னர் இவ்வாறு கூறுவது ஏன்? ஒன்று தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக. மற்றயது அமெரிக்காவிற்கு வழங்கும் சாட்சியமாக..... ஒரே கல்லில் இரண்டு மாங்காய்களை விழுத்த முனைகின்றார் சரத்.

யுத்தம் கடைசிக் கட்டத்தில் இருந்த மே 16ம் திகதியில் சரத் பொன்சேகா சீனாவில் இருந்தார். எனவே கடைசிக்கட்ட யுத்தத்தில் அவர் பங்கேற்கவில்லை என்று சிலர் அவர் மீது குற்றச்சாட்டை சுமத்தியபோது, அவர் தெளிவாக்க கூறினார்.நான் சீனாவுக்கு அப்போது போயிருக்காவிட்டாhல் நாட்டிற்கு பாரிய நட்டம் ஏற்பட்டிருக்கும். ஆனால் நான் சீனாவில் இருந்தபோதும் யுத்தத்தை நானே அங்கிருந்தவாறு வழிநடத்திக்கொண்டிருந்தேன்.

ஆக, நடேசன் போன்றவர்கள் சுட்டுக்கொல்லப்பட்டபோதும், சரத் பொன்சேகாதான் தனது படையினருக்கு உத்தரவுகளை விடுத்துக்கொண்டிருந்தார். தான் தேர்தலில் போட்டியிடப்போவதாக அறிவிப்பதற்காக கூட்டியிருந்த பத்திரிகையாளர் மாநாட்டில் சரத் பொன்சேகா மிகத் தெளிவாக ஒரு விடயத்தை கூறினார்.

2008ம் ஆண்டு மாவீரர் தின வைபவங்களின்போது நான் கூறினேன். அடுத்த மாவீரர் தின வைபவத்தில் கலந்துகொள்ள பிரபாகரன் இருக்கமாட்டார் என்று கூறியிருந்தேன். நான் கூறியவாறு 2009ம் ஆண்டு மாவீரர் தினத்திற்கு ஆறு மாதங்களுக்கு முன்னரே பிரபாகரனைக் கொன்றுவிட்டேன். இது தேர்தல் அறிவிப்பை வெளியிட்ட பத்திரிகையாளர் மாநாட்டில் அவர் வெளியிட்ட தகவல்.

ஆக, புலிகளின் தலைவர் பிரபாகரனைக் கொன்றவர், நடேசன் போன்ற முக்கிய தலைவர்களை கொன்றவர் சரத் nhபன்சேகா.இன்று தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறுவதற்காக அவர் என்னதான் கூறினாலும், தமிழ் மக்கள் ஏமாளிகள் அல்ல
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

வெற்றி பெற்றதும் அரசாங்க ஊழியர்களின் சம்பளம் 10 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்படும்- ஜெனரல் பொன்சேகா


உழைக்கும் வர்க்கத்தினரின் நிலைமைகளை நன்கு அறிவேன். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றதன் பின்னர் அரச ஊழியர்களின் சம்பளம் 10 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்படும். அதேபோல் தனியார் துறை மற்றும் தோட்டத் தொழிலாளர் விடயத்திலும் கூடுதல் கவனம் செலுத்தப்படுவதுடன் ஓய்வூதியர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான நிவாரணங்கள் வழங்கப்படும் என்று எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார். யுத்தத்தின் வெற்றி தனக்கே உரியது என்றும் தானே மன்னன் என்றும் கூறிக் கொண்டு பொது மக்கள் முகம் சுழிக்கும் அளவுக்கு கட் அவுட்களை வைப்பதில் பயனில்லை. இது மக்கள் சேவையல்ல.

இந்த நிலையை மாற்றியமைப்பதுடன் விடுதலை பெற்ற நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்துவதே எனது பணி என்றும் அவர் கூறினார். ஐக்கிய தேசியக் கட்சி தலைமையிலான தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள், ஜெனரல் சரத் பொன்சேகாவை ஆதரித்து ஏற்பாடு செய்திருந்த நிகழ்வு கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே ஜெனரல் சரத் பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்தார். கட்சியின் பிரதித் தவிசாளரும் தேசிய ஊழியர் சங்கத் தலைவருமான காமினி ஜயவிக்கிரம பெரேரா எம்.பி. தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதித் தலைவர் கரு ஜயசூரிய, சிரேஷ்ட உபதலைவர் ஜோன் அமரதுங்க, பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, பாலித்த ரங்கே பண்டார, விஜேதாச ராஜபக்ஷ உள்ளிட்ட எம்.பி.க்கள் மாகாண சபை, பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தொழிற்சங்கப் பிரதிநிதிகள் கலந்து கொண்டிருந்தனர்.

ஜெனரல் சரத் பொன்சேகா இங்கு தொடர்ந்தும் உரையாற்றுகையில் கூறியதாவது:

நாட்டின் ஜனநாயகத்துக்கு தொழிற்சங்கம் அவசியமானது என்பதில் நான் நம்பிக்கை கொண்டுள்ளேன். கடந்த காலங்களில் தொழிற்சங்கங்கள் எந்தளவுக்கு அச்சுறுத்தப்பட்டன; ஒடுக்கப்பட்டன என்பதையும் அதேபோல் அந்த சங்கங்களின் கோரிக்கைகள் மறுக்கப்பட்ட விடயங்களையும் நான் அறிவேன். உழைக்கும் வர்க்கத்தினரின் உரிமைகளை பெற்றுக் கொடுப்பதில் பின்நிற்கக் கூடாது. இந்நாட்டில் உண்மையான ஜனநாயகம் இல்லை என்பதாலேயே இவ்வாறான சிக்கல்கள் எழுகின்றன.

எனவே தான் நான் மக்கள் செல்வாக்கினால் ஜனாதிபதியானதும் எனது முதற் பணியாக நாட்டில் இல்லாது செய்யப்பட்டுள்ள ஜனநாயகத்தை மீண்டும் ஸ்தாபித்து எல்லோராலும் ஏற்றுக்கொள்ளக் கூடிய நல்லாட்சியொன்றை உறுதிப்படுத்துவதற்கு தீர்மானித்திருக்கிறேன். இன்னும் ஒன்றரை வருடங்கள் இராணுவ சேவையில் நீடித்துக் கொண்டும் சொகுசாகவும் இருந்திருக்க என்னால் முடியும். ஆனால், அதனை நான் விரும்பவில்லை. மீட்டெடுக்கப்பட்ட இந்நாட்டில் நிர்வாம் சரியில்லை. அதன் போக்கு தெளிவில்லை. யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தொடர்பில் சீரான வேலைத் திட்டங்கள் இல்லை. இதனைப் பார்த்துக் கொண்டிருக்க என்னால் சகிக்கவில்லை. இந்த நிலைமைகளை மாற்றியமைக்க வேண்டும் என்பதாலேயே நான் அரசியல் பாதையில் அடிவைத்தேன்.

நாட்டின் தற்போதைய நிலைமைக்கு நிறைவேற்று அதிகாரமே முழுக் காரணமாகும். அந்த அதிகாரத்தை வைத்துக் கொண்டு நீதியையும் ஜனநாயகத்தையும் எதிர்பார்க்க முடியாது. எனவே, இந்த மோசமான அதிகாரம் இல்லாதொழிக்கப்பட வேண்டும். நான் ஜனாதிபதியானதன் பின்னர் அதனை நிறைவேற்றிக் காட்டுவேன் என்று உறுதியளிக்கிறேன்.

நிறைவேற்று அதிகாரம் இல்லாதொழிக்கப்பட்டதுடன், எனது பணி முடிந்து விடாது. அதன் பின்னர் நாட்டில் சிறந்ததொரு நிர்வாகம் உருவாக்கப்பட வேண்டும்.

17வது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தி சுயாதீன ஆணைக்குழுக்களை நியமிப்பதற்கு தேவையான உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். இராணுவம் மற்றும் பொலிஸ் துறை அரசியல் மயப்படுத்தலுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். அந்த வகையில் நீதியான தேர்தல்களை நடத்துவதுடன் ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து நடைபெறவிருக்கும் பொதுத் தேர்தலை சுதந்திரமானதும் நீதியானதுமாக நடத்தி அதன் மூலம் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்று அரசியலமைப்புச் சபையை நியமிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன், அமையவிருக்கும் புதிய அரசாங்கம் எவ்வாறான பணிகளை மேற்கொள்கின்றது என்பதை அவதானிப்பதற்கும் அதில் ஆலோசணைகளை தெரிவிப்பதற்கான அதிகாரங்களையும் நிறைவேற்று அதிகாரமற்ற ஜனாதிபதிக்கு வழங்குவதற்கான நடவடிக்கையும் அவசியமானது. ஏனெனில் மக்களின் வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் நான் சுகபோகங்களுடன் மாத்திரம் இருப்பதற்கு தயாரில்லை. மக்களுக்கு சேவை செய்வதற்கான தேவை எனக்கும் இருக்கின்றது.இதன் மூலம் அச்சம், சந்தேகம்ற வகையிலான எதிர்கால சந்ததியினருக்கு ஏற்ற இலங்கையைக் கட்டியெழுப்புவதற்கு எல்லா வகையான நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும்.யுத்தம் நிறைவடைந்து விட்டது. ஆனால், அதன் வெற்றி தனக்கே உரியது என்று உரிமை கொண்டாடுபவர்கள் நாடு முழுதும் கட்அவுட்களை வைத்துக் கொண்டிருக்கின்றனர். இதனைப் பார்த்து மக்கள் முகம் சுழிக்கின்றனர். இந்நாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்களின் நிலைமைகள் தொடர்பில் உண்மையான அக்கறை இன்றைய நிர்வாகத்திடம் இல்லை. இடம்பெயர்ந்த மக்களின் பிரச்சினைகள் வாழ்வியல் விடயங்களிலும் அதோபோல் கிழக்கில் வாழ்கின்ற முஸ்லிம்களின் பிரச்சினைகள் தொடர்பிலும் எந்த விதமான தீர்வுகளும் அரசிடம் இல்லை என்பது தெளிவாகியுள்ளது. ஆனால் சேறுபூசும் நடவடிக்கைகள் மாத்திரம் சரியாக நடைபெறுகின்றன.

உழைக்கும் வர்க்கத்தினரின், குறைந்த வருமானம் பெறுவோரின் நிலைமைகள் கவனிக்கப்படவில்லை. இன்றைய வாழ்க்கைச் செலவு மிகவும் அதிகமானது. அதற்கேற்றாற் போல் வருமானம் கிடையாது. எனவே, அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைந்தது 10 ஆயிரம் ரூபாவில் அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளேன். அதேபோல் தனியார் துறை இன்று பாரிய வீழ்ச்சி கண்டுள்ளது. தொழில் இழப்புக்கள், நிறுவனங்கள் மூடப்படுதல் மற்றும் நிறுவனங்கள் நட்டமடைதல் ஆகியவற்றுக்கு இலஞ்சமே முக்கிய காரணமாகும். இதனை ஒழிப்பதன் மூலம் தனியார் துறை ஊக்குவிப்பதுடன் நிவாரணங்களையும் வழங்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதுடன், தனியார் துறை ஊழியர்கள் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் சம்பள விடயத்திலும் ஆராய்ந்து கவனம் செலுத்தப்படும். நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் கல்வித்துறை வளர்ச்சியை சமப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுப்பதுடன் வேலையற்ற பட்டதாரிகளின் வேலைவாய்ப்பும் உறுதிப்படுத்தப்படும். கட்சி பேதமற்ற வகையில் எமது சேவை சகலருக்கும் போய்ச் சேரும் என்பது உறுதியாகும். எனவே, இவ்வாறான குறைபாடுகள் நீங்கப்பெற்று நாட்டைக் கட்டியெழுப்புவதற்கு பொதுமக்களாகிய உங்களது ஆதரவை கோருகின்றேன். அன்னப்பறவை சின்னத்துக்கு வாக்களித்து என்னை வெற்றிபெறச் செய்யுமாறும் உங்களிடம் கேட்டுக் கொள்கிறேன். எனது இராணுவ சேவையின் போது கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றினேன். அதேபோல் தற்போது என்னால் வழங்கப்படுகின்ற வாக்குறுதிகளும் நிச்சயமாக நிறைவேற்றப்படும்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

புலிகள் என்னைத் தாக்கும் சாத்தியம் உள்ளது : ஜெனரல் சரத்


விடுதலைப் புலிகள் தம் மீது தாக்குதல் நடத்தக் கூடிய சாத்தியம் உள்ளது என்று முன்னாள் இராணுவத்தளபதியும், ஜனாதிபதி தேர்தல் எதிரணிகளின் பொது வேட்பாளருமான ஜெனரல் சரத் பொன்சேகா அச்சம் வெளியிட்டுள்ளதாக ஏஎப்பி செய்தி வெளியிட்டுள்ளது.

அச்செய்தியில் சரத் வெளியிட்டுள்ளதாவது:

"யுத்தம் நிறைவடைந்துள்ள போதிலும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட விடுதலைப் புலி உறுப்பினர்கள் உயிர் தப்பியிருக்கக் கூடும். குறித்த விடுதலைப் புலி உறுப்பினர்கள் இடம்பெயர் மக்களுடன் சேர்ந்திருக்க வாய்ப்பு உண்டு.

விடுதலைப் புலிகளின் சிரேஷ்ட உறுப்பினர்கள் கொல்லப்பட்ட போதிலும், சில தற்கொலை குண்டுதாரிகள் எஞ்சியிருக்கின்றனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சர்வதேச வலையமைப்பு இன்னமும் உறுதியாகவே காணப்படுகின்றது.

எனது உயிருக்கு அச்சுறுத்தல் காணப்படுகிறது. யுத்த வெற்றிக்கு நாமே காரணம் என படையினரும், பொலிஸாரும் நம்புகின்றனர்.

கடந்த காலங்களில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட முக்கிய வேட்பாளர்கள் மீது புலிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர்".

இவ்வாறு அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

தொழிற்சங்கங்களுக்கு அரசு பதிலளித்த விதம் எனக்குத் தெரியும் : பொன்சேகா


அரச ஊழியர்கள் தமது கோரிக்கைகளுக்காகத் தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுத்தபோது நடைமுறை அரசாங்கம் அவர்களுக்கு பதிலளித்த விதத்தை தான் நன்கறிவதாகவும் தனது தலைமையிலான அரசாங்கம் அமையும் போது தொழிற்சங்கங்களுக்கும் தொழிற்சங்கவாதிகளுக்கும் ஏற்புடைய இடத்தை வழங்குவதாகவும் எதிர்க்கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணி ஏற்பாடு செய்திருந்த கூட்டம் நேற்று பிட்டகோட்டேயில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு ஜெனரல் சரத் பொன்சேகா உரை நிகழ்த்துகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

"ஜனநாயகத்தை இல்லாமல் செய்து, குடும்ப அரசியல் நடத்துபவர்களுக்கு எதிராக நாம் போராட வேண்டும். யுத்த வெற்றியை சொல்லிக் கொண்டு முறைசாராத பலத்தை பெற்றுக் கொள்ள முயற்சிப்பவர்களை நாம் கண்டுகொள்ள வேண்டும்" என அவர் மேலும் தெரிவித்தார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஐ.தே.க விசேட கூட்டத்தில் சரத் பொன்சேகா முதன்முறையாக பங்கேற்பு


ஐக்கிய தேசியக் கட்சியின் விசேட கூட்டத்தில் முதன்முறையாக முன்னாள் கூட்டுப்படைகளின் பிரதானியும் எதிர்க்கட்சிகளின் பிரதான ஜனாதிபதி வேட்பாளருமான சரத் பொன்சேகா கலந்துகொள்ளவுள்ளார்.

இக்கூட்டம் எதிர்வரும் 5ஆம் திகதி சனிக்கிழமை வத்தளை நகரசபை மண்டபத்தில் நடைபெறவுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் பேச்சாளரும் காலி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கயந்த கருணாதிலக்க எமது இணையத்தளத்துக்கு தெரிவித்தார்.

ஜனாதிபதித் தேர்தலின் பொருட்டு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் தலைமையில் இக்கூட்டத்தினை ஏற்பாடு செய்துள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி ஆகிய பிரதான எதிர்க்கட்சிகள் ஜெனரல் சரத் பொன்சேகாவை தமது பொது வேட்பாளராக ஏற்றுக் கொண்டதையடுத்து ஐ.தே.கட்சியின் பொதுக்கூட்ட மேடையில் முதன்முறையாக அவர் உரையாற்றவுள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இடம்பெயர்ந்த தமிழ் மக்களை உபசரித்த முறை பற்றி திருப்தி கொள்ளவில்லை -ஜெனரல் சரத்பொன்சேகா


இடம்பெயர்ந்த தமிழ் மக்களை அரசாங்கம் உபசரித்த முறையையிட்டு தாம் திருப்தி கொள்ளவில்லை என முன்னாள் முப்படைகளின் பிரதானி சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார். பல்வேறு தியாகங்களை மேற்கொண்டு மீட்கப்பட்ட சுமார் 3லட்சம் மக்களும் விரைவில் நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு சொந்த இடங்களில் குடியமர்த்தப்பட வேண்டுமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதற்கிடையில் தாம் ஆட்சிக்கு வந்தால் பொதுமக்களின் நலன்கருதியே சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்வதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நாட்டிலிருந்து நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறையை இல்லாது செய்யவிருப்பதாகவும், அத்துடன் அரசியலமைப்பு சபையொன்றையும் உருவாக்கவிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளர். கடந்தகால யுத்த வெற்றிக்கு அரசியல் தலைமையும், இராணுவத்தினர் மற்றம் பொதுமக்களின் ஒன்றிணைந்த பங்களிப்பே காரணமென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த தேர்தலில் அன்னப்பறவை சின்னத்தில் போட்டியிடுவதாக கூறிய அவர், எந்த அரசியல் கட்சியின்கீழ் போட்டியிடுவேன் என்பதை பின்னர் அறிவிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

அழுத்தங்கள் விடுக்கப்பட்ட போது மோதலை நிறுத்த முடியாத கட்டம்:சரத் பொன்சேகா


மோதல்களை நிறுத்துமாறு இந்தியா அழுத்தங்களை கொடுத்த வேளை, இராணுவத்தினர் விடுதலை புலிகளுடனான் மோதலில், மோதல்களை நிறுத்த முடியாத ஒரு கட்டத்தை அடைந்திருந்தனர் எனத் தெரிவித்தார் சரத் பொன்சேகா.

விடுதலை புலிகளுடனான மோதல்களை நிறுத்துமாறு இந்தியா உட்ப பல்வேறு தரப்பினரால் விடுக்கபட்ட அழுத்தங்களையும் தாண்டி மோதல்கள் தொடர்ந்தது குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

எதிர்வரும் ஜனாதிபத் தேர்தலில் பொது வேட்பாளராக 'அன்னம்' சின்னத்தில் தான் போட்டியிடவுள்ளதாக ஜெனரல் சரத் பொன்சேகா இன்று உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளார். எனினும் புதிதாக பதிவு செய்யப்பட்ட ஒரு கட்சியின் கீழ் தனது ஜனாதிபதி ஆட்சி நிலவுமெனவும் அவர் தெரிவித்தார். ஜனாதிபதி வேட்பாளராக இன்று இடம்பெற்ற முதலாவது ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனை அறிவித்துள்ளார்.

இதன் போது தான் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படும் பட்சத்தில் நிறைவேற்றும் வேலைத்திட்டங்கள் தொடர்பான கொள்கைகளை இதன் போது சரத் பொன்சேகா வெளியிட்டார்.

அங்கு அவர் உரையாற்றுகையில் ,நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழிப்பதற்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் மக்கள் உதவ வேண்டும் எனக் கோரிக்கை விடுத்த அவர் விடுதலை புலிகளுடனான் யுத்த வெற்றி அரசியல் தலைமைத்துவமும் காரணம் எனவும் தெரிவித்தார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,"பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளைப் பெற்று அரசியலமைப்பை மாற்றுவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பேன். எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மாத்திரமன்றி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கின்ற பெரும்பாலான உறுப்பினர்கள் ஆதரவு வழங்க தயாராகவுள்ளனர். " எனத் தெரிவித்தார்.

மேலும்,நாட்டையும் மக்களையும் சர்வாதிகார ஆட்சியில் இருந்து மீட்கவே முன்வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

தேர்தல் குறித்த முடிவை பொன்சேகா நாளை உத்தியோகபூர்வமாக அறிவிப்பார்


ஓய்வுபெற்ற கூட்டுப்படைகளின் பிரதானி சரத் பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை எதிர்த்துக் களமிறங்குவது தொடர்பான தமது முடிவை உத்தியோகபூர்வமாக நாளை ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கவுள்ளதாக நம்பத் தகுந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

எதிர்வரும் 2010 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 26 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தலை நடத்துவதாக தேர்தல்கள் திணைக்களம் அறிவித்துள்ளது.

ஜெனரல் சரத் பொன்சேகா பொது வேட்பாளராக களமிறங்குவது குறித்து பெரும்பாலும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் அவர் உத்தியோகபூர்வமாக தனது முடிவினை இன்னமும் அறிவிக்கவில்லை.

பிரதான எதிர்க்கட்சியுடன் கூட்டுக் கட்சிகளின் இணைப்பாகவுள்ள ஐக்கிய தேசிய முன்னணி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியன சரத் பொன்சேகாவை ஆதரிப்பதென ஏற்கனவே தீர்மானித்துள்ளன.

இந்நிலையில் நாளை முற்பகல் 11.00 மணியளவில் சரத் பொன்சேகா தனது முடிவை உத்தியோகபூர்வமாக அறிவிக்கவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

நடைமுறை அரசாங்கம் மக்கள் நலனில் அக்கறை கொள்ளவில்லை என்றும் யுத்தத்தினால் பெற்றுக் கொள்ளப்பட்ட வெற்றி தவறாக பயன்படுத்தப்படுவதாக சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை மாலை தேசிய சட்டத்தரணிகள் சங்கத்தின் கூட்டமொன்றில் கலந்து கொண்டு பேசிய போதே சரத் பொன்சேகா இக்கருத்தைத் தெரிவித்துள்ளார்.

நாட்டுக்காக சேவை செய்யத் தயாராக இருப்பதாகவும் நிறைவேற்று அதிகார முறையை ஒழிப்பதே தனது பிரதான இலக்கு என்றும் அவர் அங்கு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

வாழ்க்கையில் எந்தவொரு விடயத்திலும் நான் இதுவரை தோற்றதில்லை ஓரிரு தினங்களில் முடிவை அறிவிப்பேன் என்கிறார் பொன்சேகா


ஜனாதிபதி தேர்தல் தொடர்பிலான நிலைப்பாடு குறித்த அறிவிப்பினை நாட்டின் பிரதான கட்சிகள் வெளியிட்டதன் பின்னர் என்னுடைய நிலைப்பாடு என்ன என்பது தொடர்பில் இன்னும் ஓரிரு தினங்களில் அறிவிப்பேன் என்று கூட்டுப்படைகளின் முன்னாள் பிரதம அதிகாரிஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்தார். கொழும்பு, தாஜ் சமுத்திரா ஹோட்டலில் நேற்று முற்பகல் இடம்பெற்ற வைபவமொன்றில் கலந்துகொண்டு வெளியேறிய ஜெனரல் சரத் பொன்சேகாவை வழிமறித்த ஊடகவியலாளர்கள் சிலர் கேட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் பட்சத்தில் நீங்கள் வெற்றி பெறுவீர்களா என்று அங்கு ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஜெனரல் சரத் பொன்சேகா, எனது வாழ்நாளில் இதுவரை எந்தவொரு விடயத்திலும் நான் தோல்வி கண்டதேயில்லை என்றும் கூறினார்.

இது தொடர்பில் ஜெனரல் சரத் பொன்சேகா அங்கு மேலும் கூறியதாவது :

ஜனாதிபதித் தேர்தலை எதிர்ப்பார்த்திருந்த நாட்டின் பிரதான கட்சிகள் இந்தத் தேர்தலில் போட்டியிடும் தமது பிரதான வேட்பாளர்கள் தொடர்பிலான கட்சிகளின் நிலைப்பாடுகளை இந்த நாட்களில் வெளியிட்டு வருகின்றனர். அவர்கள் அவர்களுடைய நிலைப்பாடகள் தொடர்பில் அறிவித்ததன் பின்னர் நான் என்னுடைய நிலைப்பாடு தொடர்பில் அறிவிப்பேன். அதற்கு இன்னும் ஓரிரு நாட்கள் தேவைப்படுகின்றன.

நான் இதுவரையில் எந்தவொரு விடயத்திலும் தோல்வி கண்டதேயில்லை. என்னுடைய எதிர்கால தீர்மானம் குறித்து நான் இன்னமும் அறிவிக்கவில்லை. அதனை அறிவிக்க எனக்கு இன்னும் ஓரிரு தினங்கள் தேவைப்படுகின்றன. அதுவரையில் காத்திருக்குமாறு உங்கள் அனைவரிடமும் வேண்டுகோள் விடுக்கின்றேன்.

எது எவ்வாறெனினும் பொதுமக்களின் தேவைகளை முன்னெடுப்பதற்கு என்னுடைய ஒத்துழைப்பினை அயராது வழங்குவேன். பொதுமக்கள் என்னிடம் எதையாவது எதிர்ப்பார்ப்பார்களாயின் அதனால் அவர்களுக்கு நன்மை கிடைக்குமாயின் அதற்காக என்னுடைய முழுமையான ஒத்துழைப்பை வழங்குவேன். அது தொடர்பில் கூடிய கவனம் செலுத்தி உரிய தீர்மானத்தினை வெகு விரைவில் எடுப்பேன் என்று உறுதியளிக்கிறேன்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

சரத்பொன்சேகா ஐ.தே.முன்னணியில் இணைந்து ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடிவு?


முன்னாள் இராணுவ தளபதி சரத்பொன்சேகா ஐக்கிய தேசிய முன்னணியுடன் இணைந்து ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக போட்டியிட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் எமக்கு இத்தகவலை உறுதிப்படுத்தினார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

மனித உரிமைகளை நிலைநாட்டுவதற்கு அர்ப்பணிப்புடன் செயற்படுவேன்- ஜெனரல் சரத் பொன்சேகா


தாய்நாடு இழந்துவரும் ஜனநாயகம், மனித உரிமைகள், ஊடக சுதந்திரம், சமூக சமநிலை மற்றும் இன ஒற்றுமை என்பவற்றை பாதுகாப்பதற்கு உயிரைப் பணயம் வைத்தேனும் அர்ப்பணிப்புடன் செயற்படுவேன் என்று முன்னாள் இராணுவத் தளபதியும் கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியுமான ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு பிரிவுகளை சேர்ந்தவர்களின் எதிர்கால முன்னேற்றம் கருதி அவர்களுடன் நிழலாக இருப்பேன் என்றும் அவர் வாக்குறுதியளித்துள்ளார். கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி பதவியிலிருந்து ஓய்வுபெற்றதையடுத்து இராணுவ வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தவர்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே ஜெனரல் சரத் பொன்சேகா மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அதில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது:

தாய் நாட்டுக்கு எதிராக நிலவிவந்த 30 வருட கால பயங்கரவாத்தை முற்றாக அழிப்பதற்கு இராணுவத்தினர் பாரிய பங்களிப்பை செய்துள்ளனர். எனவே, அவர்கள் அனைவரும் இந்த வெற்றியின் பங்காளிகளாவர். உண்மையான தொழில்சார் இராணுவ வீரர்களாக யுத்தத்தை எதிர்கொண்டதன் விளைவாகவே பயங்கரவாதத்தை வெற்றி கொள்ள முடிந்தது. இந்த கம்பீரதன்மையை தொடர்ந்து இராணுவத்துக்குள் தக்கவைத்து கொண்டிருக்க வேண்டும். எந்தவொருவரும் இராணுவத்தின் கௌரவத்துக்கு களங்கம் விளைவிப்பதற்கு இடமளிக்கக்கூடாது. யுத்தத்தை வெற்றிகொண்டு தாய்நாட்டை காப்பாற்றிய இராணுவ வீரர்களை சிலர் தூற்றுவதற்கு முற்படுகின்றபோதிலும் யுத்த வெற்றியின் உண்மையான பங்காளர்கள் தாமே என்பதை இராணுவ வீரர்கள் நினைவில் வைத்திருக்க வேண்டியது அவசியமாகும்.

கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி பதவியிலிருந்து விலகிக்கொண்டதன் காரணமாகவே 30 வருட கால பயங்கரவாதத்துக்கெதிரான யுத்தத்தை குறுகிய காலத்துக்குள் முடிவுக்குக் கொண்டுவருவதற்கு பங்காற்றிய இராணுவ வீரர்களுக்கு நன்றி செலுத்துகின்ற அதேவேளை, வீரர்களின் நலன்புரி விடயங்களை மேம்படுத்துவதற்கும் என்னால் முடியாது போயுள்ளது.

கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரியாக சேவையாற்றிய மிகக் குறுகிய காலத்தில் இதற்கான சந்தர்ப்பம் கிடைக்காமல் போனதையிட்டு கவலையடைகிறேன். எனது 40 வருட கால சேவையின் நிறைவை முன்னிட்டு நடைபெற்ற உத்தியோகபூர்வ நிகழ்வில் முப்படைத் தளபதிகளுக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் கலந்துகொள்ள சந்தர்ப்பம் கிடைக்காமை காரணத்தால் இந்தக் கடிதம் இராணுவ வீரர்களுக்கு உரையாற்றக்கிடைத்த காரணியாக அமைந்துள்ளது.

எனது உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் ஆராய்ந்து பாதுகாப்புக்குக்கு 100 வீரர்களையாவது பெற்றுத்தருமாறு விடுக்கப்பட்ட கோரிக்கை கவனத்தில் கொள்ளப்படாத அதேவேளை, தற்போது மெய்ப்பாதுகாவலர்களின் எண்ணிக்கை 25 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இது குறித்து தொடர்ச்சியாக விடுக்கப்பட்ட கோரிக்கையின் பிரகாரம் 60 பாதுகாப்பு வீரர்களையும் 3 வாகனங்களையும் வழங்குவதாக கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஓய்வு பெற்றதையடுத்து உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து உடனடியாக வெளியேறுமாறும் உயர்மட்டத்திலிருந்து உத்தரவு கிடைத்துள்ளது. தற்போது வாடகை வீடொன்றை பெற்றுக்கொள்வதற்கும் பல இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

பொன்சேகாவுக்கு மேலதிகப் பாதுகாப்பு : லக்ஷ்மன் ஹுணுகல்ல


ஓய்வுபெற்ற முன்னாள் கூட்டுப்படைகளின் பிரதானி சரத் பொன்சேகாவுக்கு மேலதிக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகத் தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹ{ணுகல்ல தெரிவித்தார்.

ஜனாதிபதி செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில், சரத் பொன்சேகாவின் பாதுகாப்பு குறித்து ஊடகவியலாளர் ஒருவர் கேட்ட கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

உயர்தரத்திலான இராணுவ அதிகாரி ஒருவர் ஓய்வுபெற்றதும் அவருக்கு வழங்கப்படும் பாதுகாப்பை விட மேலதிகமான பாதுகாப்பை சரத் பொன்சேகாவுக்கு வழங்கியுள்ளதாகவும், அவரது வேண்டுகோளுக்கிணங்கவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாகவும் ஹுணுகல்ல மேலும் தெரிவித்தார்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

சரத் பொன்சேகாவைக் கொலை செய்ய முயற்சி : அரசு மறுப்பு


கூட்டுப்படைகளின் பிரதானியாகக் கடமைபுரிந்து ஓய்வுபெற்ற சரத் பொன்சேகாவை கொலை செய்ய அரசு முயற்சிப்பதாக வெளியிடப்படும் தகவல்களில் எதுவித உண்மையும் இல்லை என்றும் இந்த செய்தி தொடர்பான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அரசாங்கம் இன்று வெள்ளிக்கிழமை அறிவித்துள்ளது.

அனர்த்த முகாமைத்துவ மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு ஜனாதிபதி செயலகத்தில் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் மாநாட்டில், தேசிய பாதுகாப்புக்கான ஊடக மத்திய நிலையத்தின் பணிப்பாளர் லக்ஷ்மன் ஹுணுகல்ல இக்கருத்தினை வெளியிட்டார்.

சரத் பொன்சேகாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாக மக்கள் விடுதலை முன்னணி ஆதரவான 'லங்கா புவத்' பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தி தொடர்பாக கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.

"சரத் பொன்சேகாவைக் கொலை செய்யும் முயற்சி நடைபெற்று வருவதாகப் பத்திரிகையில் செய்தி வெளியாகியுள்ளது. அதற்கு அரசாங்கத்துடன் தொடர்பிருப்பதாக நேரடியாகச் சுட்டிக் காட்டப்பட்டுள்ளமையானது பாரதூரமான விடயமாகும். ஆகையால் இதனை தீர விசாரிக்க வேண்டியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ பொலிஸ் மா அதிபருக்கும் புலனாய்வுப் பிரிவினருக்கும் இது தொடர்பான உத்தரவினை பிறப்பித்துள்ளார். இது தொடர்பாகக் குறிப்பிட்ட பத்திரிகை ஆசிரியரின் விளக்கமும் தேவைப்படுகின்றது.

அவ்வாறானதொரு செய்தி தமக்குக் கிடைக்குமிடத்து, அவர் உடனடியாகப் பொலிஸாருக்கு அறிவித்திருக்க வேண்டும்" என அவர் மேலும் தெரிவித்தார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates