தொழிற்சங்கங்களுக்கு அரசு பதிலளித்த விதம் எனக்குத் தெரியும் : பொன்சேகா

அரச ஊழியர்கள் தமது கோரிக்கைகளுக்காகத் தொழிற்சங்கப் போராட்டங்களை முன்னெடுத்தபோது நடைமுறை அரசாங்கம் அவர்களுக்கு பதிலளித்த விதத்தை தான் நன்கறிவதாகவும் தனது தலைமையிலான அரசாங்கம் அமையும் போது தொழிற்சங்கங்களுக்கும் தொழிற்சங்கவாதிகளுக்கும் ஏற்புடைய இடத்தை வழங்குவதாகவும் எதிர்க்கட்சிகளின் சார்பில் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணி ஏற்பாடு செய்திருந்த கூட்டம் நேற்று பிட்டகோட்டேயில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு ஜெனரல் சரத் பொன்சேகா உரை நிகழ்த்துகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
"ஜனநாயகத்தை இல்லாமல் செய்து, குடும்ப அரசியல் நடத்துபவர்களுக்கு எதிராக நாம் போராட வேண்டும். யுத்த வெற்றியை சொல்லிக் கொண்டு முறைசாராத பலத்தை பெற்றுக் கொள்ள முயற்சிப்பவர்களை நாம் கண்டுகொள்ள வேண்டும்" என அவர் மேலும் தெரிவித்தார்.
0 Response to "தொழிற்சங்கங்களுக்கு அரசு பதிலளித்த விதம் எனக்குத் தெரியும் : பொன்சேகா"
แสดงความคิดเห็น