இலங்கைக்கான பயணக் கட்டுப்பாடுகளை அமெரிக்கா-ஜப்பான் தளர்த்தின

வடக்கு கிழக்கு மாகாணங்களுக்கு செல்வது ஆபத்தாக அமையக் கூடும் என அமெரிக்க மற்றும் ஜப்பான் அரசாங்கம் இதுவரையில் தமது நாட்டு பிரஜைகளுக்கு விதித்திருந்த பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியுள்ளன.
இலங்கையின், வடக்கு கிழக்கிற்கான பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டுள்ளதாக அறிவித்துள்ள இலங்கைக்கான அமெரிக்க இராஜாங்க திணைக்களம் மற்றும் ஜப்பானிய தூதரகம் என்பன ,"கிழக்கு மாகாணத்திற்கான பயணங்கள் தொடர்பில் அவதானம் செலுத்தி பயணிக்க வேண்டும். வட மாகாணத்திற்கான பயணங்கள் தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்''.என குறிப்பிட்டுள்ளன.
இதுவரை காலமும் அமெரிக்கா மற்றும் ஜப்பான் வடக்கு கிழக்கு மாகாணத்திற்கான பயணங்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
0 Response to "இலங்கைக்கான பயணக் கட்டுப்பாடுகளை அமெரிக்கா-ஜப்பான் தளர்த்தின"
แสดงความคิดเห็น