jkr

இந்தியா 726ரன்களுக்கு டிக்ளேர்!


மும்பை கிரிக்கெட் போட்டியில் இந்தியா 726ரன்களுக்கு டிக்ளேர் செய்தது. இந்திய, இலங்கை அணிகளுக்கிடையிலான 3வது மற்றும் இறுதி டெஸ்ட் கிரிக்கெட் போட்டி மும்பையில் நடைபெற்றுவருகிறது.

மும்பை பிராபோர்ன் மைதானத்தில் நடைபெற்றுவரும் இந்தபோட்டியில்.
டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்ங்கை தேர்ந்தெடுத்த முதல் இன்னிங்சில் 393 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அடுத்து ஆடத்ததொடங்கிய இந்திய அணி சற்று முன்பு வரை 3விக்கெட் இழப்பிற்கு 497ரன்கள் எடுத்துள்ளது.

தொடக்க ஆட்டக்கரார் முரளி விஜய் 87 ரன்கள்எடுத்திருந்தபோது ஆட்டமிழந்தார். சேவாக் அபாரமாக ஆடி இரட்டை சதம் அடித்தார். 3வது சதத்திற்கு 16 ரன்கள் இருந்த நிலையில் நேற்றைய ஆட்டம் நிறைவடைந்தது. மூன்றாவது நாள் ஆட்டத்தில் 16ரன்கள் எடுத்தால் முச்சதம் என்ற நிலையில் ஆடத்தொடங்கிய சேவாக் 293 ரன்கள்எடுத்திருந்த நிலையில் முத்தையா முரளிதரனின் பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் மூன்று முச்சதங்கள் அடித்த முதல் வீரர் என்ற அரியசாதனையை சேவாக் தவறவிட்டார்.

தொடர்ந்து திராவிடும் 74 ரன்களில் ஆட்டமிழந்தார். தெண்டுல்கர் 53ரன்களுடனும், லட்சுமணன் 62 ரன்களுடனும், யுவராஜ்சிங் 23 ரன்களுடனும், ஆட்டமிழந்தனர். டோனி நிதானமாக ஆடி சதம் அடித்தார். இந்தியா 726 ரன்கள் எடுத்திருந்த நிலையில டிக்ளேர் செய்தது. அடுத்து இரண்டாவது இன்னிங்சை ஆடத்தொடங்கிய இலங்கை ஆட்ட நேர இறுதியில் விக்கெட் இழப்பின்றி 11ரன்கள் எடுத்துள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "இந்தியா 726ரன்களுக்கு டிக்ளேர்!"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates