jkr
แสดงบทความที่มีป้ายกำกับ (கவிதை) แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ (கவிதை) แสดงบทความทั้งหมด

விளக்கேற்றிய நண்பனுக்கு.....

Photobucket வீட்டின் முகப்பில்
வரவேற்பு அறையில்
ஒருபுறம் எனது திருமணப்படம்.,
மறுபுறம் அவனது திருஉருவப்படம்.

'எனது உயிர் நண்பனவன்
என்னுடன் இருக்கும் வரையில்
எனக்கொரு கவலை இல்லை
இனியொரு உவலை இல்லை

கானல்வரியாய் தெரிந்த என்கனவை
நாணல்திரியாய் எரிந்த என்நினைவை
நிழலாய் மாறஇருந்த என்வாழ்வை
நிஜமாய் மாற்றிக் காட்டியவன் அவன்

மொய் எழுதி வாழ்த்தி விட்டு
பொய் முகத்தோடு ஏக்கம் சுமந்து
திரும்பும் எனக்கும் வாழ்க்கையில்
திருமணம் என்ற ஒன்றைத்
திருவிழாவாக நடத்தியவனுக்கு
என் வாழ்நநாள் முழுதும்
நன்றிக் கடன் பட்டிருப்பேன்

அன்று
பெண்பார்க்கும் படலத்தில்
மணமகனின் நண்பனாய்
மிக நெருக்கத்தில் அவன்

"மாப்பிள்ளை கருப்புதான்,
....ஆனாலும் பரவாயில்லை"

"மாப்பிள்ளை குட்டைதான்,
....ஆனலும் மட்டம் இல்லை"

"மாப்பிள்ளை ஒல்லிதான்,
....ஆனாலும் பல்லிபோல இலலை"

"சுறுசுறுப்பு கம்மிதான்,
....ஆனலும் துருதுருப்புதான்"

"பல்லு ரெண்டும் எடுப்புதான்
....ஆனாலும் பளபளப்புதான்"

அருகில் அவனும் சொங்கிபோல
....தூங்கிக் கொண்டே இருந்தான்
அதனால் நானும் - அங்கே
....தூக்கலாகவேத் தெரிந்தேன்

எந்த வில்லங்கமும் இன்றியே
எல்லா விவகாரமும் முடிந்ததினிதே'

பெருமையோடு நண்பன் அவனுக்கு
உரிமையோடு வணக்கம் வைக்கிறேன்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

நட்புடன் நண்பனுக்கு !!


உள்ளத்தின் ஒளியில்
உண்டான வெளிச்சத்தில்
உருவங்களின் ஆட்டம் - அதிலே
உன்னுடைய தோற்றம்


எத்தனை நாட்கள் நண்பா
எண்ணத்தின் பூக்கள்
எங்கள் மனங்களில்
எப்படி எல்லாம் விரிந்தன ?


முத்தென நினைவுகளை
பொத்தியே வைத்தேன் மனச்சிப்பியினுள்
முத்தியே வெடித்தன இன்று
சுத்தியே வந்தன ஞாபகங்கள்


அன்புக் கம்பள விரிப்பில்
அன்று நாம் நடந்த வனப்பு
இன்று நினைக்கையில் கனவடா
இன்ப அலைகளின் துடிப்படா


இளமையெனும் ஊஞ்சலில்
கபடமில்லாமல் நாமாடிய வேளைகள்
இனியரு பொழுது வாராதா
இதயத்தின் ஏக்கங்கள் தீராதா ?


நினைவு என்னும் மை கொண்டு
நாமெழுதிய நட்பெனும் புத்தகம்
கனவென்னும் நூலகத்தில் இன்று
காலமாகிப் போனதுவோ நண்பா !


வானத்தில் வலம் வரும் வெண்ணிலவு
வீ£சும் காற்றோடு கலந்த நம் நினைவுகளை
பூசிக் கொண்டு சென்று கோவில் வீதியில்
பொன்னொளியாய் தெளித்திடுமா?


குருமணலில் நாம் பதித்த சுவடுகள்
குருதி சொரிந்த நம் மண்ணில்
செந்நிறப் பதிவுகளாய் பதிந்து
செப்பிடுமோ நமது நட்பின் ஆழத்தை


எதோ என்னை அறியாமல்
என் நண்பன் உன் நினைவுகள்
என்னுள்லத்தில் குதித்துக் கும்மாளமொட
ஏட்டில் வடித்து விட்டேன் கவிதையாக


அன்புடன்
சக்தி
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

பெண்ணின் மனது பெரிய கடல்


பெண்ணின் மனது பெரிய கடல்


பெண்ணின் மனது பெரிய கடல்
ஆணின் மனதோ சிறிய தீவு

கடலலைகள் எப்போதும்
தீவினை அணைத்துக்கொண்டிருக்கும்
ஆனால் அது அணைப்பு அல்ல
அந்த அலைகள் அணைப்பது போல்
நடித்துக்கொண்டிருக்கின்றன.
என்றோ ஒரு நாள் கடல் பெருக்கெடுக்கும்
அன்று அந்த அலைகள்
அந்த தீவினை ஆக்கிரமித்துக்கொள்ளும்.

அப்படி தான் பெண்.
நன்றாகா பேசுவாள்
இனிக்க இனிக்க கதை சொல்வாள்.
இனிமையாக சிரிப்பாள்.
இளைமையின் உணர்ச்சிகளை தூண்டுவாள்
இயல்பான வாழ்க்கையை கெடுப்பாள்
அவள் இல்லாவிட்டால் வெறுமை என உணரவைப்பாள்
வேளை தவறாமல் உன்னிடம் வருவாள்
அழகாய் இருப்பாள்
அணையா விளக்காய் இருப்பேன்
ஒளிதருவேன்
ஒற்றுமையாய் இருப்பேன்.
நீ சொல்வதே வேதவாக்கு
சொல்வதை செய்வேன்
எள் என்றால் எண்ணெய்யாய் இருப்பேன்.
நான் வேறு நீ வேறு அல்ல
என கதைவசனம் சொல்வாள்
புதுமை பெண்ணாய் நானிருப்பேன்
பூமியாய் உன்னை தாங்கிடுவேன் என
புதுமையாக பேசுவாள்
பூரிப்பாய் இருக்கும்
ஆனால்
இப்படி இருப்பவள்
கடைசியில் ஒரு நாள்
பூகம்பம் போல்
சட்டென
காலை வாரிவிடுவாள்.
குழியினுள் விழுந்தவன்
அன்று தொட்டு
குற்றுயிரும் குலையுயிரும் தான்.

இப்படியும் நடக்கும்
அலையின் தாக்கத்தால்
தண்ணீரில் கொஞ்சம் கொஞ்சமாக
குட்டி தீவு மூழ்கி கொண்டிருக்கும்
கடைசியில் ஒரு நாள்
முற்றாகா அது அழிந்துவிடும்.
ஆனால் அலைகள் தொடர்ந்து
அடுத்த தீவை நோக்கியோ
தரையை நோக்கியோ
நகர்ந்து கொண்டிருக்கும்.
அப்படி தான் இதுவும்
ஒரு பெண்ணின் தாக்கத்தால்
ஒரு ஆண் குடி மகன் ஆகிறான்
அன்று தொட்டு அவன்
கொஞ்சம் கொஞ்சமாக
குடியால், புகையால்
தவறான பழக்கவழக்கங்களால்
அழியத்தொடங்குகிறான்
கடைசியில் ஒரு நாள்
இவனும் அழிந்து போகிறான்
ஆனால் பெண்
மீண்டும் ஒரு ஆணை நோக்கி
தன் பார்வைகளை திருப்புகிறாள்
அதனை பார்த்து அவன் மயங்க
அன்று தொடங்கிகிறது
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இறப்புக்களின் அர்த்தங்கள்…. ஏன் இந்த இறப்பு?? (கவிதை)


இதய சுத்தியுள்ள மனிதர்களே
இயல்பாக சிந்திப்போம்….வாரீர்
இரத்தக்கறைகள் வேண்டாம்…. இறந்த
இறப்புக்களின் அர்த்தங்கள் என்ன?
இயற்கைதனை நேசிப்பதனால்
இறமைகளை மதிப்போம்
இறைவனை துதித்திடும் மனிதர்களே..இறந்த
இறப்புக்களின் அர்த்தங்கள் என்ன?..
இதயத்தை நேசிக்கும் மனிதர்களே
இறக்கைகள் பறிபோனதால்..
இருப்பதை வைத்து இப்போ
இன்பமாய் வாழ எண்ணும் மனிதர்களே..இறந்த
இறப்புக்களின் அர்த்தங்கள் என்ன?..
இணைந்த கைகளை துண்டித்து
இரத்த கறைகளை கண்டு கழித்து
இன்னல்பட்ட மக்களை மறந்து
இசைந்து பாட எண்ணும் மனிதர்களே .இறந்த
இறப்புக்களின் அர்த்தங்கள் என்ன?

இத்தனை தியாகங்கள் எதற்க்கு
இறப்புக்கள் எதற்க்கு தற்பொழுது
இழத்து மூடிபருவக் கனவு கண்பதற்காகவா?
இகழ்ச்சியுடன் சிரிக்கும் மனிதர்களே..இறந்த
இறப்புக்களின் அர்த்தங்கள் என்ன?

இடுகாட்டில் சாம்பலான மகனையும் கணவரையும்
இழந்து கண்ணில் ஈரம் கசிந்த தாய்மார்களுக்கு
இரகசியமில்லாமல் நாம் கூறும் ஆறுதல்..?
இரண்டு முகம் கொண்ட மனிதர்களே..இறந்த
இறப்புக்களின் அர்த்தங்கள் என்ன?

இரக்கமில்லாத செயல்கள் நம்மிடையே
இரவு பகல் அறியா பார்வைகள்
இருப்பை மட்டும் சிந்திக்கும்
இதயம் கருகிப்போன மனிதர்களே.. இறந்த
இறப்புக்களின் அர்த்தங்கள் என்ன?

இருட்டுக்குள் வாழ்ந்த மக்களை
இரட்டிப்பு இருளிற்குள் வீழ்திவிட்டு
இதமாய் கதைகள் பேசி வாழ்ந்திடும்
இரக்கமற்ற புத்திமான்களே….. இறந்த
இறப்புக்களின் அர்த்தங்கள் என்ன?

இரசாயன கலவை கொடுத்து மக்களின்
இரத்தோட்டத்தை உடலில் நிறுத்த
இருமாப்புக் கொண்டு கங்கனம் கட்டும்
இரட்டை வேடம் போடும் கனவான்களே….. இறந்த
இறப்புக்களின் அர்த்தங்கள் என்ன?

இறைவனை வைத்து பணம் சம்பாதித்த
இ(க)றைத் தொண்டர்கள் நீங்கள்..
இரைதேடும் பறவைகளை காட்டி தற்போது
இடுப்பில் ஒர் உண்டியல் கட்டி
இசைத்தட்டுகளில் தேவாரம் திருவாசகம் பாடி
இழிவான காரியம்செய்யும் மானுடர்களே… இறந்த
இறப்புக்களின் அர்த்தங்கள் என்ன?

இலட்சம் இரண்டரை ஆகிப்போன
இழப்புக்கள்.. இறுமாப்புக் கொள்ள வேண்டாம்
இலட்சியமில்லா இழப்புக்கள்..
இயற்கைதனை அழிக்கும் ஆயுதம் வேண்டாம்
இரையாக மனிதப் பலிகளை பறிகொடுக்காமல்
இலட்சியவேட்கை என்னவென்று சிந்திப்போம்… இறந்த
இறப்புக்களின் அர்த்தங்கள் என்ன???

கிளியின் ஒர் கிராமத்து நாயகன்.. வவிதரன்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates