jkr
แสดงบทความที่มีป้ายกำกับ ஜீ.எஸ்.பி. பிளஸ் แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ ஜீ.எஸ்.பி. பிளஸ் แสดงบทความทั้งหมด

ஜிஎஸ்பி பிளஸ் சலுகைத் திட்டம் இடைநிறுத்தம் : ஐரோப்பிய ஒன்றியம்


இலங்கைக்கு இதுவரை காலமும் வழங்கப்பட்டு வந்த ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டத்தைத் தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டம் வழங்குவது தொடர்பிலான ஐரோப்பிய ஒன்றியத்தின் நிபந்தனைகளை இலங்கை மீறியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றிய இணையதளம் சுட்டிக்காட்டியுள்ளது.

இலங்கைக்கு சலுகைத் திட்டத்தை வழங்குவது குறித்த இறுதித் தீர்மானம் எடுப்பதற்கு உறுப்பு நாடுகளுக்கு இரண்டுமாத கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

சலுகைத் திட்டத்தை நீடிப்பதற்கு தேவையான முக்கிய நிபந்தனைகளை இலங்கை பூர்த்தி செய்துள்ளதா என்பது குறித்து ஐரோப்பிய ஒன்றியத்தின் விசாரணைகள் நிறைவடைந்துள்ளதாக ஆணைக்குழுவின் பேச்சாளர் கிறிஸ்டியன் ஹோமான் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக இலங்கை சர்வதேச மனித உரிமைச் சட்ட திட்டங்களுக்கு முக்கியத்துவம் அளித்துள்ளதா என்பது தொடர்பில் ஆராயப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

முக்கிய சில நிபந்தனைகளை இலங்கை பூர்த்தி செய்யத் தவறியுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக இலங்கைக்கான சலுகைத் திட்ட நீடிப்பை இரண்டு மாத காலத்திற்கு இடைநிறுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பில் இலங்கையுடன் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை முன்னெடுக்க ஐரோப்பிய ஒன்றியம் விரும்புவதாகச் சுட்டிக்காட்டப்படுகிறது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இலங்கைக்கு அடுத்தாண்டு நடுப்பகுதியில் ஜீஎஸ்பி கிடைக்கலாம் : ஐரோப்பிய ஒன்றியம்


இலங்கைக்கு எதிர்வரும் 2010ஆம் ஆண்டு நடுப்பகுதியில் ஜீஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை வழங்கப்படலாம் என ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது.

ஐரோப்பிய ஒன்றியத்தின் குற்றப்பத்திரிக்கைக்கு உரிய காரணங்கள் முன்வைக்கப்படும் பட்சத்தில் இந்த சலுகை மேலும் அதிகரிக்கும் சாத்தியம் இருப்பதாக ஐரோப்பிய ஒன்றியத்தின் வர்த்தக பொது பணிப்பகத்தின் பிரதித் தலைவர் பீற்றர் யங் தெரிவித்துள்ளார்.

ஜீஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை இலங்கைக்கு வழங்குவது தடைசெய்யப்படுமானால், அது குறித்து நிறைவேற்றுக் குழு தீர்மானித்து 6 மாதங்களின் பின்னரே அந்த தடை அமுலுக்கு வரும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் படி, இலங்கைக்கு அடுத்து ஆண்டின் நடுப்பகுதி வரையில் இந்தச் சலுகை வழங்கப்படும் என அவரால் விடுக்கப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, ஜீஎஸ்பி பிளஸ் வரிச்சலுகை தடை செய்யப்பட்ட அறிவிப்பு வெளியானாலும், சரியான முனைப்புகளுடன் அரசாங்கம் புதிய முன்மொழிவு ஒன்றை சமர்ப்பித்து, மீண்டும் வரிச்சலுகையை மீளப் பெறுவதற்கு முயற்சிக்க முடியும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

13ஆவது திருத்த சட்டமூலம் முழுமையாக அமுல்படுத்த வேண்டும்-ஐரோப்பிய ஒன்றியம்


இலங்கையில் 13 ஆவது திருத்தச் சட்ட மூலம் முழுமையாக அமுல்படுத்தப்பட வேண்டும் என ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

ஐரோப்பிய பாராளுமன்றத்தில் இன்றைய தினம் சமர்ப்பிக்கப்படவுள்ள இலங்கை தொடர்பான யோசனைத் திட்டத்தில் இந்தப் பரிந்துரை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இலங்கைக்கு ஜீ.எஸ்.பி. பிளஸ் சலுகைத் திட்டம் வழங்குவது தொடர்பான விவாதம் இன்றைய தினம் ஐரோப்பிய பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

தமிழ் மக்களின் நியாயமான தேவைகளைப் பூர்த்தி செய்வதில் இலங்கை அரசாங்கம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டுமென ஐரோப்பிய ஒன்றியம் பரிந்துரை செய்துள்ளது.

கிரமமான முறையில் அதிகாரப் பகிர்வுத் தீர்வுத் திட்டங்கள் முன்வைக்கப்பட வேண்டுமென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.இடைத்தங்கல் முகாம் நிலவரங்கள் குறித்து ஐரோப்பிய ஒன்றியம் சுட்டிக்காட்டியுள்ளது.

சர்வதேச கண்காணிப்பாளர்கள் இன்றி மனித உரிமை நிலவரங்கள் அபிவிருத்தி செய்வதில் பல்வேறு சிக்கல்கள் காணப்படுவதாக ஐரோப்பிய ஒன்றியம் குறிப்பிட்டுள்ளது.

அரசியல் தீர்வுத் திட்டமொன்றை ஏற்படுத்துவதற்கு சகல தமிழ் அரசியல் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனவும் அந்த பரிந்துரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates