jkr
แสดงบทความที่มีป้ายกำกับ பிரதமர் மன்மோகன் சிங் แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ பிரதமர் மன்மோகன் சிங் แสดงบทความทั้งหมด

பிரதமர் மன்மோகன் செல்லவிருந்த விமானத்தில் விபத்து


பிரதமர் மன்மோகன் சிங் செல்லவிருந்த விமானம் விமான நிலையத்திலேயே விபத்தில் சிக்கியது. பிரதமர் விமானத்தில் அமராததினால் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த சம்பவத்தினால் டெல்லி விமானநிலையத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

டென்மார்க்கில் நடைபெற்றுவரும் பருவநிலை குறித்த கோபன்ஹேகன் மாநாட்டில் பங்கேற்க இன்று மதியம் பிரதமர் மன்மோகன்சிங் டெல்லி விமான நிலையம் வந்தார். இந்நிலையில் அவர் செல்லவிருந்து விமானம் தீடீரென விபத்தில் சிக்கியது.

பிரதமர் செல்லவிருந்த விமானத்தின் மீது ஓடுபாதையில் சென்று கொண்டிருந்த டேங்கர் வாகனம் எதிர்பாராதவிதமாக மோதியது. இந்த விபத்தின்; காரணமாக விமானத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. விபத்து நடைபெற்ற போது பிரதமர் மன்மோகன் சிங் விமானத்தில் இல்லாததினால் பெரும் பாதிப்பு தவிர்க்கப்பட்டது.

இந்த சம்பவத்தனால் பிரதமர் மன்மோகன் சிங்கின் பயணம் தாமதமானது, அவரின் கோபன்ஹேகன் பயண திட்டத்திலும் மாற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. பிரதமரின் விமானத்தின் மீது டேங்கர் வாகனம் மோதிய விபத்து தற்செயலாக நடைபெற்றதா? அல்லது ஏதேனும் சதி காரணமா? என்று உயர்மட்ட விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்த விபத்து சம்பவத்தினால் டெல்லி விமானநிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

அதிபர் பாரக் ஒபாமா வைத்த விருந்து மிகச் சிறப்பானது.


போர்ட் ஆப் ஸ்பெயின்: அதிபர் பாரக் ஒபாமா வைத்த விருந்து மிகச் சிறப்பானது. வித்தியாசமானது. நான் சென்ற விருந்துகளிலேயே மிகச் சிறந்தது இதுதான் என்று பிரதமர் மன்மோகன் சிங் பாராட்டித் தள்ளியுள்ளார்.

அரசு முறைப் பயணமாக அமெரிக்கா வந்த மன்மோகன் சிங்குக்கு, அதிபர் ஒபாமா டின்னர் வைத்துக் கெளரவித்தார். இதில் 300க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இசைப் புயல் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்டோரும் கலந்து கொண்டனர்.

அறுசுவை விருந்து, கலை நிகழ்ச்சிகள், பாடல்கள், ஆடல்கள் என அமர்க்களப்படுத்தி விட்டனர் ஒபாமா தம்பதியினர்.

இந்த நிலையில் போர்ட் ஆப் ஸ்பெயின் வந்த மன்மோகன் சிங்குக்கு அங்குள்ள இந்தியத் தூதரகம் வரவேற்பு அளித்தது. அப்போது மன்மோகன் சிங் பேசுகையில், வெள்ளை மாளிகை விருந்து நிகழ்ச்சி மிகவும் சிறப்பானது, வித்தியாசமானது. மிகவும் ஆடம்பரமாக ஏற்பாடு செய்திருந்தனர். பிரமிக்க வைத்து விட்டனர். அந்த சூழலும், சாப்பாடும் மிகச் சிறப்பானவை.

நான் சந்தித்த விருந்துகளிலேயே மிகவும் சிறந்தது இது என்று கூறலாம். அந்த அளவுக்கு அதிபர் ஒபாமாவும், அவரது மனைவி மிஷல் ஒபாமாவும் ஏற்பாடு செய்திருந்தனர். இதுவரை நான் இப்படி ஒரு விருந்தில் கலந்து கொண்டதில்லை.

அமெரிக்காவின் அனைத்து சமூகத்தையும் சேர்ந்த பல்வேறு பிரபலங்கள் அதில் கலந்து கொண்டது சிறப்பு வாய்ந்தது. அனைவரையும் ஒரே இடத்தில் என்னால் சந்திக்க முடிந்தது மிகுந்த மகிழ்ச்சியைத் தந்தது. அவர்களில் பலர் இந்திய வம்சாவளியினர் என்பதை என்னைப் பெருமை கொள்ளச் செய்தது என்று புகழ்ந்து தள்ளியுள்ளார் பிரதமர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

அமெரிக்காவில் மன்மோகன்சிங்:இன்று ஒபாமாவுடன் சந்திப்பு


இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் ஞாயிறன்று உத்தியோகபூர்வமாக அமெரிக்கா போய்ச் சேர்ந்தார்.

அவருக்கு வெகுவிமரிசையான முறையில் மேரிலாந்தில் உள்ள ஆண்ட்ரூஸ் விமானப்படைத் தளத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று செவ்வாய்க்கிழமை அவர் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவை சந்தித்துப் பேசுகிறார்.

ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்துக்கு வந்து சேர்ந்த பிரதமர் மன்மோகன், அவரது மனைவி குருசரண் கெயூர், அரசு அதிகாரிகள் அடங்கிய குழுவுக்கு இந்திய வம்சாவளி அமெரிக்கத் தொழிலதிபர்கள், குழந்தைகள் அன்பான வரவேற்பு அளித்தனர். அமெரிக்காவுக்கான இந்தியத்தூதர் மீரா சங்கர் உள்ளிட்டோர் அவர்களை முறைப்படி வரவேற்றார்.

அதன்பின்னர் பிரதமர் உள்ளிட்டோர் அடங்கிய குழு விலார்ட் இன்டர்கொன்டினென்டல் ஹோட்டலுக்குப் புறப்பட்டனர். இந்த ஹோட்டல் அதிபர் மாளிகைக்கு அருகில் உள்ளது.

இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்குப் புறப்படும் முன் பேசிய மன்மோகன் சிங், தான் மேற்கொள்ளும் அமெரிக்கப் பயணத்தின் முக்கியத்துவம் பற்றி விரிவாக எடுத்துக் கூறினார்.

இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான உறவு மூலமே பயங்கரவாதம், பருவநிலை மாற்றம், உலக பொருளாதார தேக்க நிலை போன்ற பிரச்னைகளை எதிர்த்து நின்று போராட முடியும் என்றும் குறிப்பிட்டார்.

பிரதமரின் உத்தியோகபூர்வ பயணம் இன்று தொடங்குகிறது. வெள்ளைமாளிகைக்கு செவ்வாய்க்கிழமைசெல்லும் தரும் பிரதமரை அதிபர் ஒபாமாவும் அவரது மனைவி மிஷேலும் நேரில் வரவேற்பார்கள்.

அந்நிகழ்வில் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க பிரதமருக்கு வரவேற்பு அளிக்கப்படும்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

அடுத்தாண்டில் 7% பொருளாதார வளர்ச்சி எட்டப்படும்- பிரதமர் நம்பிக்கை


டெல்லி: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 6.5 சதவீதமாக இருக்கும். அடுத்த ஆண்டில் இது 7 சதவீத வளர்ச்சியை எட்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அடுத்தாண்டு பருவ மழை பொய்க்காமல் இருந்தால்தான் 7 சதவீத வளர்ச்சியை எட்ட முடியும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று இந்திய பொருளாதார மாநாடு நடந்தது. அதைத் தொடங்கி வைத்து பிரதமர் பேசுகையில், உலகப் பொருளாதார சீர்குலைவை இந்தியா திறம்பட சமாளிக்க முடிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பிற நாடுகளை விட இந்தியா இந்த விஷயத்தில் சிறப்பாக செயல்பட்டது.

நடப்பு நிதியாண்டில் நாம் பருவமழை பொய்த்தது, விவசாய வளர்ச்சிக் குறைவு ஆகியவை காரணமாக பல மோசமான விளைவுகளை சந்திக்க நேர்ந்தது. இந்த நிதியாண்டில் இந்தியா வின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும்.

அதேசமயம், பொருளாதாரம் ஏற்றப் பாதைக்குத் திரும்பி வருவதற்கான அறிகுறிகள் சிறப்பாக உள்ளன. மேலும், அடுத்த ஆண்டு பருவ மழை பொய்க்காமல் இருந்தால், நம்மால் 7 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட வளர்ச்சியை காண முடியும் என்றார் சிங்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கண்ணிவெடிகள் அகற்றும் பணியை துரிதப்படுத்த இந்திய நிபுணர்கள்குழு-பிரதமர் மன்மோகன் சிங் தெரிவிப்பு


வன்னியில் நிலக் கண்ணிவெடிகள் அகற்றும் நடவடிக்கைகளை துரிதப்படுத்தும் வகையில், நிபுணர்கள் குழுவொன்றை அனுப்புமாறு பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனிக்கு இந்திய பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை வழங்கியுள்ளார். வடக்கில் யுத்த நடவடிக்கைகள் இடம்பெற்ற மன்னார், கிளிநொச்சி, முல்லைத் தீவு ஆகிய மாவட்டங்களில் இருந்து இடம்பெயர்ந்த மக்களை மீளக் குடியேற்ற அங்கு நிலக் கண்ணிவெடிகள் தடையாக இருப்பதையடுத்து அவற்றை துரிதமாக அப்புறப்படுத்தும் வகையிலேயே, நிபுணர்கள் குழுவொன்றை அனுப்ப பிரதமர் உத்தரவிட்டுள்ளார்.

இத்தகவலை தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.பி.தங்கபாலு தெரிவித்துள்ளார். இலங்கைக்கு அண்மையில் விஜயம் செய்த தமிழக பாராளுமன்ற குழுவினர் கடந்தவாரம் பிரதமர் மன்மோகன் சிங்கை புதுடில்லியில் சந்தித்து பேசினார்கள்.

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.பி.தங்கபாலு தலைமையில் திராவிட முன்னேற்றக் கழக பாராளுமன்ற உறுப்பினர்கள் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர். எனினும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் இச்சந்திப்பில் கலந்து கொள்ளவில்லை. மேலும் இக்குழுவினர் முதல்வர் கருணாநிதியிடம் சமர்ப்பித்த அறிக்கையை ஒத்த மற்றுமொரு அறிக்கையை பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி ஆகியோரிடம் கையளித்தனர்.

இதில் இலங்கையில், பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களுக்கு இந்தியா புனரமைப்புப் பணிகளுக்கு உதவ வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இடம்பெயர்ந்தவர்களின் 50 ஆயிரம் பேரை மீள் குடியமர்த்த ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இணக்கம் தெரிவித்துள்ளதாக தெரிவித்த கே.பி. தங்கபாலு அங்கு நிலக் கண்ணிவெடிகளை அகற்றுவதிலுள்ள தாமதமே மீள் குடியேற்றப்பணிகள் தாமதமடைய காரணமென எடுத்துக் கூறியுள்ளார். இச்சந்திப்பைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங் நிலக் கணணிவெடிகளை அகற்றும் வகையில் நிபுணர்கள் குழுவொன்றை இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு பாதுகாப்பு அமைச்சர் ஏ.கே.அந்தோனிக்கு உத்தரவிட்டார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இந்திய எல்லையில் சீனா முழு ஒத்துழைப்பு : 'ஆசியான்' மாநாட்டில் முடிவு


எல்லையில் பதற்றத்தைத் தணிக்க இரு நாடுகளும் ஒத்துழைப்பது என்று இந்தியாவும் சீனாவும் ஒப்புக்கொண்டுள்ளன. இத் தகவலை பிரதமர் மன்மோகன் சிங் தெரிவித்தார்.

தென் கிழக்கு ஆசிய நாடுகள் அமைப்பின் (ஆசியான்) 15ஆவது உச்சி மாநாடு தாய்லாந்தில் கடந்த வெள்ளிக்கிழமை ஆர்ரம்பமாகி ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

இந்த மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மன்மோகன் சிங், சீனப் பிரதமர் வென் ஜியாபாவோ இருவரும் சனிக்கிழமை சந்தித்துப் பேசினர்.

சீனாவை ஒட்டி உள்ள அருணாசலப் பிரதேசத்துக்கு பிரதமர் மன்மோகன் சிங் சென்றதற்கு எதிர்ப்புத் தெரிவித்தது, எல்லையில் சீன இராணுவம் அத்துமீறியது போன்றவற்றால் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே உறவில் விரிசல் ஏற்பட்டு பதற்றம் நிலவுகிறது.

இந்த நிலையில், மன்மோகன் - ஜியாபாவோ சந்தித்துப் பேசியது முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்பட்டது.

இதற்கிடையே, இந்தியா திரும்பும் முன் பிரதமர் மன்மோகன் சிங் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது சீனப் பிரதமர் வென் ஜியாபாவோவுடன் நடத்திய பேச்சுவார்த்தை விவரங்களை வெளியிட்டு அவர் கூறியது:

"எல்லைப் பிரச்சினை, இரு நாடுகளிடையே ஓடும் நதிநீர்ப் பிரச்னை, திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமாவுக்கு சீனாவின் ஆட்சேபம் ஆகிய பல்வேறு பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதித்தோம். நான் எனது கருத்துகளை வெளிப்படையாகவும் ஆக்கப்பூர்வமாகவும் எடுத்துரைத்தேன்.

ராஜீய முறையிலும் ஒத்துழைப்பு உணர்வோடும் இப் பிரச்சினைகளை அணுகுவது என்று ஒப்புக்கொண்டோம்.

குறிப்பாக, இந்தியா - சீனா இடையிலான எல்லைப் பிரச்னை மிகவும் சிக்கலானது. இது தொடர்பாக அண்மையில் ஏற்பட்டுள்ள பதற்றத்தைத் தணிக்க இரு நாடுகளும் ஒத்துழைக்க வேண்டும்.

இரு நாடுகளுக்கு இடையே உள்ள வேறுபாடுகள் உறவுக்குத் தடையாக இருக்கக் கூடாது என்று இருதரப்பிலும் ஒப்புக்கொள்ளப்பட்டது.

இரு நாடுகளுக்கும் இடையே ஏற்படும் கருத்து வேறுபாடுகளைப் பேச்சுவார்த்தை மூலம் தீர்த்துக் கொள்ள முடியும் என்பதையும் அரசியல் ரீதியான நம்பிக்கை மற்றும் புரிந்துணர்வை ஏற்படுத்த உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதையும் இருவரும் ஏற்றுக்கொண்டோம்.

சீன வெளியுறவு அமைச்சர் யாங் ஜியசி திங்கட்கிழமை பெங்களூர் வருகிறார். இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவுடன் அவர் பேச்சுவார்த்தை நடத்துவார். அப்போது இரு நாடுகளுக்கு இடையே உள்ள அனைத்துப் பிரச்சினைகள் குறித்தும் இருவரும் விரிவாக விவாதிப்பார்கள்.

தலாய் லாமா விருந்தாளி

திபெத்திய ஆன்மிகத் தலைவர் தலாய் லாமா இந்தியாவின் கௌரவ விருந்தாளி. மேலும் ஒரு மதத் தலைவர். அந்த அடிப்படையில்தான் அவரை இந்தியா அணுகுகிறது.

அதேநேரத்தில் இந்தியாவில் உள்ள திபெத்திய அகதிகள் சீனாவுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம். ஒலிம்பிக் போட்டியின்போது திபெத்திய அகதிகளுக்கு எதிராக இந்தியா எடுத்த நடவடிக்கைகளே அதற்கு சாட்சி என்று சீனப் பிரதமரிடம் சுட்டிக்காட்டினேன்.

இரு நாடுகளுகும் இடையே ஓடும் நதிநீர் பிரச்சினை, பிரம்மபுத்திரா நதியில் சீனா அணை கட்டும் பிரச்சினை ஆகியவை குறித்தும் இருவரும் விவாதித்தோம். நதி நீர்ப் பிரச்சினை குறித்து ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ள இரு நாட்டு நிபுணர் குழு தொடர்ந்து விவாதிக்கும்."

இவ்வாறு பிரதமர் மன்மோகன் தெரிவித்தார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates