jkr
แสดงบทความที่มีป้ายกำกับ -முதல்வர் கருணாநிதி แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ -முதல்வர் கருணாநிதி แสดงบทความทั้งหมด

2005 தேர்தல் பகிஷ்கரிப்பு விடுதலைப்புலிகளின் அவசர முடிவு-தமிழக முதல்வர் கருணாநிதி


இலங்கையில் 2005ஆம் ஆண்டில் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிக்குமாறு தமிழீழ விடுதலைப்புலிகள் தமிழ் மக்களை கேட்டுக் கொண்டமை ஒரு அவசர முடிவாகும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.கருணாநிதி தெரிவித்துள்ளார்.

இதன் விளைவு, விடுதலைப் புலிகளுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்துவதாக உறுதியளித்திருந்த ரணில் விக்கிரமசிங்கவை மஹிந்த ராஜபக்ஷ தோற்கடிக்க உதவியது என்று தெரிவித்த கருணாநிதி, அதிலிருந்து பேச்சுவார்த்தை முடக்கப்பட்டு விட்டது என்றும் கூறியுள்ளார்.

பகிஷ்கரிப்பு கோரிக்கையை அடுத்து 7 லட்சம் தமிழர்கள் முற்றாக வாக்களிக்காத நிலையில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ ரணில், விக்கிரமசிங்கவை 1 லட்சத்து 81 ஆயிரம் வாக்குளால் வெற்றி பெற்றார். அன்றைய அவசர முடிவின் இன்றைய விளைவு என்ன? இன்று இலங்கை இராணுவத்தினால் விடுதலைப்புலிகள் இயக்கம் தோற்கடிக்கப்பட்டு இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் கொல்லப்பட்டதையும் சுட்டிக்காட்டுவது போல் கருணாநிதி கேள்வி எழுப்பியுள்ளார்.

அத்துடன், தந்தை செல்வாவின் குரலோடு இணைந்து இலங்கை பிரச்சினைக்காக தி.மு.க. நடத்திய அறப்போராட்டங்களும், எடுத்த வாதப்போராட்டங்களும், சட்டமன்ற உறுப்பினர் பதவிகளை தூக்கி எறிந்த நிலைகளையும், இருமுறை ஆட்சியை இழந்த சரித்திர சம்பவங்களையும் தனது அறிக்கையில் நினைவூட்டியுள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கருணாநிதியின் கோரிக்கைக்கு ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் பாராட்டு

தமிழ்நாட்டில் அகதிகளாகத் தங்கியுள்ள ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இலங் கைத் தமிழ் மக்களுக்கு இந்திய பிரஜாவுரிமை வழங்கவேண்டும் என மத்திய அரசாங்கத்தைக் கோரவிருக்கும் தமிழக முதலமைச்சர் கருணாநிதியை, வாழும் கலை மன்றத்தின் தாபகர் ஸ்ரீஸ்ரீ ரவிசங்கர் பாராட்டியுள்ளார். இலங்கை அகதிகள் 1984ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டில் அரசியல் புகலிடம் பெற்றுள்ளார்கள்.

இந்நிலையில், தமிழக முதலமைச்சரின் இந்த முயற்சியானது தமிழ்நாட்டின் மனிதாபிமானத்தை எடுத்துக்காட்டுகிறது. இலங்கை அகதிகளுக்கு இந்தியப் பிரஜாவுரிமை கோரும் வாழும் கலை மன்றம், இந்தக் கோரிக்கையை ஆதரித்து ஒரு இலட்சம் கையெழுத்துக்களைச் சேகரிக்கும் இயக்கம் ஒன்றை ஆரம்பித்துள்ளது. இந்தக் கோரிக்கையை நாங்கள் அரசாங்கத்தின் கவனத்திற்குக் கொண்டுவர இருக்கும் வேளை யில் கருணாநிதி இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.

முதலமைச்சர் இக்கோரிக்கையை முன்னெடுப்பதால் வாழும் கலை மன்றம் கையெழுத்து வேட்டையைக் கைவிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

செப்டெம்பர் மாதம் காஞ்சிபுரத்தில், ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் நடத்திய முப்பெரும் விழாவில் தமிழக முதல்வர், மத்தி அரசுடன் ஆலோசனை நடத்தி இலங்கை அகதிகளுக்கு இந்தியப் பிரஜாவுரிமையைப் பெற்றுக்கொடுக்க வேண்டுமென அவரை வலியுறுத்தும் தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது.

முப்பெரும் விழாவில் உரையாற்றிய கலைஞர் கருணாõநிதி, மத்திய அரசாங்கத் தின் கவனத்திற்கு இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வந்து தமிழ்நாட்டில் முகாம்களிலும், வேறு இடங்களிலும் வாழ்ந்துவரும் ஒரு இலட்சத்திற்கும் அதிகமான இலங்கை அகதிகளுக்கு இந்தியப் பிரஜாவுரிமை பெற்றுக்கொடுக்கப் போவதாக உறுதியளித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இலங்கைத் தமிழர்களை நிரந்தரமாக தமிழகத்தில் குடியமர்த்த முதல்வர் கருணாநிதி வலியுறுத்தியுறுத்தல்


இலங்கையிலிருந்து வந்து 10, 20 ஆண்டுகளாக தமிழகத்தில் தங்கியுள்ள தமிழ் அகதிகளை நிரந்தரமாக தமிழகத்திலேயே குடியமர்த்த செய்ய வேண்டும் என முதல்வர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. காஞ்சிபுரத்தில் நேற்று நடைபெறற அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில் தமிழக முதல்வர் கருணாநிதி உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் அங்கு மேலும் தெரிவித்துள்ளதாவது:.

“இலங்கைத் தமிழர் இங்கு நாம் நாட்டில் அகதிகளாக உள்ளனர். இலங்கையில்முகாம்களில் உள்ள மக்கள் அகதிகளாக பல துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.அவர்களை வெகு விரைவில் அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியமர்த்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு நாம் வலியுறுத்துகிறோம், இதற்காக இந்திய அரசுடன் சேர்ந்து குரல் கொடுத்தும் , வலியுறுத்தியும் வருகிறோம். .

அதே சமயத்தில் தமிழகத்தில் கடந்த 10, 20 ஆண்டுகளாக இலங்கையில் இருந்து அகதிகளாக வந்து குடியேறிய இலங்கை தமிழ் அகதிகளை இந்திய குடியுரிமை சட்டம் மற்றும் ஏனைய சட்டங்களுக்கு உட்பட்டு இங்கு குடியமர்த்த வேண்டும்” என அவர் வலியுறுத்தியுள்ளதாக இந்திய செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

தமிழக மீனவர்கள் தொடர்பில் இலங்கை அரசின் உறுதிமொழிகள் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன -முதல்வர் கருணாநிதி


தமிழக மீனவர்கள் தொடர்பில் இலங்கை அரசு இதுவரை தந்த உறுதிமொழிகள் அனைத்தும் காற்றில் பறக்க விடப்பட்டுள்ளதாக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. இலங்கை கடற்படையின் செயலை தான் வன்மையாக கண்டிப்பதாகவும் அத்தோடு, இதுபோன்ற வன்முறை நிகழ்வுகளுக்கு இப்போதாவது ஒரு முடிவு ஏற்படும்வகையில் மத்தியஅரசு உறுதியான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ளவேண்டும் என்று கேட்டுக்கொள்வதாக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார். மாவட்ட கலெக்டர்கள், உயர் பொலிஸ் அதிகாரிகளின் 2நாள் மாநாடு முதலமைச்சர் கருணாநிதி தலைமையில் நேற்று ஆரம்பமாகியது. இன்று கலெக்டர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் கலந்துகொண்ட 2வதுநாள் மாநாட்டில் கலந்துகொண்டு முதல்வர் பேசுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில் தமிழக மீனவர்கள் 21பேரை இலங்கைக் கடற்படையினர் கடத்திச் சென்றதைக் குறிப்பிட்டு கடுமையாக குற்றம்சாட்டியுள்ளார். ராமேசுவரத்தில் இருந்து புதன்கிழமை அன்று 400க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கச்சத்தீவு அருகே சென்றவேளையில் இலங்கைக் கடற்படையினர் சிறிய கப்பல்களில் வருவதை கண்ட தமிழக மீனவர்களின், படகுகள் அவசரம் அவசரமாக கரைக்குத்திரும்பும் முயற்சியில் ஈடுபட்ட நிலையில் தமிழக மீனவர்களின் படகுகளைச் சுற்றி வளைத்து இறுதியாக 5படகுகளையும், 21 மீனவர்களையும் கைது செய்துள்ளனர். இதுவரை ஏராளமான நிகழ்வுகள் நடந்து, தமிழக மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு நிகழ்வின்போதும், தமிழகஅரசு விடுத்த கோரிக்கையின் அடிப்படையில் மத்தியஅரசு தலையிட்டு, தமிழக மீனவர்களை மீட்டுள்ளதோடு, இலங்கைக் கடற்படையினருக்கு கண்டனமும் தெரிவித்துள்ளது. தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் துன்ப துயரங்களுக்கு உள்ளாக்கப்படுவது குறித்து தமிழகஅரசின் தலையீட்டின் அடிப்படையில், பல்வேறு நிலைகளில் மத்தியஅரசு இலங்கை அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தைகளும் நடத்தியுள்ளது. அப்போதெல்லாம் இலங்கை அரசின்தரப்பில் தரப்பட்ட உறுதிமொழிகள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்படுகின்றன என முதல்வர் கருணாநிதி. தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates