jkr

கணக்கு வாக்கெடுப்பை சமர்ப்பிப்பதற்கு முடிவு -அரசாங்கம் அறிவிப்பு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அரசாங்கம் 2010 ஆம் ஆண்டிற்கென வரவு செலவுத் திட்டத்தை சமர்ப்பிக்காமல் கணக்கு வாக்கெடுப்பை சமர்ப்பிப்பதற்கு முடிவெடித்துள்ளது.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை எம்பிலிப்பிட்டியவில் கூடிய விசேட அமைச்சரவைக் கூட்டத்தின் போதே இந்த முடிவு எட்டப்பட்டதாக நிதி மற்றும் திட்டமிடல் பிரதியமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்தார்.

ஆறாவது பாராளுமன்றத்தின் பதவிக் காலம் ஏப்ரல் மாதத்துடன் நிறைவடைய இருப்பதனால், பொதுத் தேர்தலுக்குப் பின்னர் புதிய அரசாங்கத்தினால் புதிய வரவு செலவுத் திட்டமொன்றைச் சமர்ப்பிக்கும் வகையிலேயே கணக்கு வாக்கெடுப்பு சமர்ப்பிக்கப்பட இருக்கின்றது. புதிய வரவு செலவுத் திட்டத்தைச் சமர்ப்பிக்கும் வரை செலவுகளை மட்டுமே உள்ளடக்கிய வகையிலேயே கணக்கு வாக்கெடுப்பு சமர்ப்பிக்கப்பட இருக்கின்றது. இதற்கான யோசனைகளை பிரதமர் அல்லது சபை முதல்வர் விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "கணக்கு வாக்கெடுப்பை சமர்ப்பிப்பதற்கு முடிவு -அரசாங்கம் அறிவிப்பு"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates