jkr

அமெ. உட்சந்தை மோசடி : மேலும் எண்மர் மீது வழக்குப் பதிவு


ராஜ் ராஜரட்னத்தின் உட்சந்தை மோசடி தொடர்பில் மேலும் 8 பேர் மீது அமெரிக்கப் புலனாய்வுத்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையில், இது தொடர்பில் ராஜ் ராஜரட்னத்தின் மீது 13 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

பங்குச் சந்தைத் தகவல்களை வழங்கியதன் ஊடாக உட்சந்தை மோசடியில் ஈடுபட்டு தமது பங்குக்கு 25 மில்லியன் டொலர்களை லாபமாக ஈட்டியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.

இதனை அமெரிக்க பாதுகாப்பு மற்றும் பங்கு பரிவர்த்தனை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, அவரும் அவருடன் கைது செய்யப்பட்ட மேலும் 5 பேரும் இன்று பிணை விடுகைக்காக நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில் அமெரிக்க புலனாய்வுத் துறையினர் நேற்று மேலும் 8 பேரை உட்சந்தை மோசடி தொடர்பில் கைது செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது இந்த வழக்கு மீதான விசாரணைகள் மேலும் விரிவுப் படுத்தப்பட்டுள்ளதாக, அமெரிக்க வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "அமெ. உட்சந்தை மோசடி : மேலும் எண்மர் மீது வழக்குப் பதிவு"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates