jkr

பிரச்சினைகள் ஏற்பட்டபோதும் ஐ.தே.மு ஊர்வலம் தொடர்கிறது: ரவி கருணாநாயக்க


ஐக்கிய தேசிய முன்னணியினரின் ஊர்வலத்தின்போது சில பிரச்சினைகள் ஏற்பட்டபோதும் தாம் தொடர்ந்தும் பயணிப்பதாக ஐக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க எமது இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

கொள்கை விபரக் கோவையை கண்டி அஸ்கிரிய மற்றும் மல்வத்த பௌத்த பீடங்களின் மாகாநாயக்கர்களுக்குக் கையளிப்பதற்காக ஐ.தே. முன்னணியினர் கண்டியை நோக்கி ஊர்வலமாக சென்றுகொண்டிருக்கின்றனர். அந்த ஊர்வலத்தில் சென்ற வாகனங்கள் மீதும் பொதுமக்கள் மீதும் நிட்டம்புவ நகரில் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஐக்கிய தேசிய முன்னணியின் கொள்கை விளக்கக் கோவையினை கண்டி அஸ்கிரிய மற்றும் மல்வத்த பௌத்த பீடங்களைச் சேர்ந்த மகாநாயக்கர்களுக்குக் கையளிப்பதற்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஊர்வலம் சுமார் 250 வாகனங்களுடன் இன்று முற்பகல் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் ஆரம்பமாகியது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவின் தலைவர் மங்கள சமரவீர உள்ளிட்ட முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஊர்வலத்தில் கலந்துகொண்டுள்ளனர்.

ஐக்கிய தேசிய முன்னணியினர் கண்டியில் நாளை விசேட மத வழிபாடுகளில் ஈடுபட்டபின்னர் மகாநாயக்கர்களை சந்திக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "பிரச்சினைகள் ஏற்பட்டபோதும் ஐ.தே.மு ஊர்வலம் தொடர்கிறது: ரவி கருணாநாயக்க"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates