jkr

புனரமைக்கப்பட்ட இரு பாடசாலைகள் மூதூரில் திறப்பு


அமெரிக்காவின் இலங்கைக்கான தூதுவர் எம்.எஸ் பற்றீசியா புட்னிஸ் கடந்த 10 ஆம் திகதி மூதுரில் புனரமைக்கப்பட்ட இரண்டு பாடசாலைகளை உத்தியோகபூர்வமாகத் திறந்து வைத்தார்.

இப்பாடசாலைகள் ஏற்கனவே சேதமான நிலையில் காணப்பட்டன. இதையடுத்து இவற்றை அமெரிக்காவின் சர்வதேச அபிவிருத்தி சபை, யுத்த முரண்பாடுகளால் பாதிக்கப்பட்டிருந்த பிரதேசங்களை மீள் புனரமைக்கும் திட்டத்தின் கீழ் மிகவிரைவாக புனரமைத்தது.

திருகோணமலையில் உள்ள அம்மன் நகர், அரப்பா நகர் ஆகிய இடங்களைச் சேர்ந்த பாடசாலைகளையே அமெரிக்க தூதுவர் திறந்து வைத்தார்.

அதேவேளை திருகோணமலையில் ஐந்து பாடசலைகளும், மட்டகளப்பு மாவட்டத்தில் இரண்டு பாடசலைகளும், வைத்தியசாலை ஒன்றும் அமெரிக்க நிதியுதவியில் புனரமைக்கப்படவுள்ளன.

மேலும் இது குறித்து தூதுவர் கருத்து தெரிவிக்கையில்,

"திருகோணமலையில் உள்ள பாடசாலைகள் நீண்ட காலமாகப் புனரமைக்கப்படவில்லை.எனவே தான் அமெரிக்க அபிவிருத்திச் சபையின் நிதி உதவியின் கீழ் இவை புனரமைக்கப்பட்டன.

இதன்மூலம் இங்குள்ள எதிர்கால சமுகத்தினர் சிறந்த கல்விப் பயனைப் பெற்றுக் கொள்ள முடியும். இதே போன்று மட்டக்களப்பில் புனரமைக்கப்படாத ஏனைய கட்டிடங்களும் மிக விரைவில் புனரமைக்கப்படும்" எனத் தெரிவித்தார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "புனரமைக்கப்பட்ட இரு பாடசாலைகள் மூதூரில் திறப்பு"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates