செய்தியறிக்கை
![]() | ![]() |
பிரிட்டிஷ் நிதி அமைச்சர் அலிஸ்டர் டார்லிங் |
வங்கி மேலாளர்களுக்கான போனஸைக் கட்டுப்படுத்த பிரிட்டன் நடவடிக்கை
வங்கி மேலாளர்களுக்கு வழங்கப்படுகின்ற போனஸ் எனப்படும் ஊக்கத் தொகையின் அளவுகளைக் கட்டுப்படுத்துகிற கடுமையான நடவடிக்கைகளை பிரிட்டன் அறிவித்துள்ளது.
நாற்பதாயிரம் டாலர்களுக்கு மேல் வழங்கப்படுகின்ற அனைத்து ஊக்கத் தொகைகள் மீதும் ஒரே தடவையாக ஐம்பது சதவீத வரி விதிக்கப்படும். இதனை ஊக்கத் தொகைகளை வழங்கும் வங்கிகள் செலுத்த வேண்டும்.
அரசாங்கத்திடம் இருந்து உதவி நிதிகளை பெற்றுவரும் வங்கிகளும்கூட தமது மேலாளர்களுக்கு கணிசமான தொகைகளை ஊக்க சன்மானங்களாக வழங்கத் திட்டமிடுவது குறித்து விமர்சனங்கள் வெளியான நிலையில் அரசாங்கத்தின் இடந்த நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனில் இன்னும் ஒரு சில மாதங்களில் பொதுத் தேர்தல் வரவுள்ள நிலையில் அரசாங்கம் வெளியிட்ட வரவுசெலவு கணக்குக்கு முந்தைய பொருளாதார அறிக்கையில் இந்த வரிவிதிப்பு நடவடிக்கை அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரிட்டனின் ஆண்டு வரவு செலவுக் கணக்கில் காணப்படும் மூவாயிரம் கோடி டாலர் நிதிப் பற்றாக்குறையை அரசாங்கம் எவ்வாறு சமாளிக்கப்போகிறது என்பது பறிய விபரங்களும் இந்த பொருளாதார அறிக்கையில் அடங்கியுள்ளது.
நைஜீரிய பொலிஸார் நூற்றுக்கணக்கான மக்களை கொல்வதாகக் குற்றச்சாட்டு
![]() | ![]() |
நைஜீரிய பொலிஸ் சோதனைச் சாவடி ஒன்று |
தடுத்து வைக்கப்பட்ட நிலையில் மக்கள் சாகும்வரை துன்புறுத்தப்படுவது, வீதிச் சோதனைச் சாவடிகளில் துப்பாக்கிப் பிரயோகம் செய்வது ஆகியவை குறித்த விபரங்களடங்கிய அம்னஸ்டி அறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது.
வியாழனன்று பிபிசியின் புலனாய்வு அறிக்கை ஒன்றில் இனுகு மாநிலத்தில் உள்ள மருத்துவமனை பொலிஸாரால் கொண்டுவரப்பட்ட சடலங்களால் தடுமாறிப்போனதாக கூறப்பட்டது.
இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய நைஜீரிய பொலிஸ் தலைமை அதிகாரி, இமானுவல் ஒஜுக்வு அவர்கள், சட்டத்துக்கு விரோதமான கொலைகள் நைஜீரியாவில் அங்கீகரிக்கப்பட்டவை அல்ல என்றும், மனித உரிமைகளின் அடிப்படையில் சுடுகலன்களளைப் பயன்படுத்த அதிகாரிகளுக்கு பயிற்சியளிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார்.
அயர்லாந்தின் கருக்கலைப்புக்கு எதிரான சட்டத்துக்கு எதிரான வழக்கு
![]() | ![]() |
கருவை உறுதி செய்யும் கருவி |
ஐரோப்பிய மனித உரிமைகள் ஒப்பந்தத்தில் உறுதி வழங்கப்பட்டுள்ள பல ஷரத்துகளை மீறுவதாக யதார்த்தத்தில் கருக்கலைப்புகளைத் தடைசெய்வது போல அமைந்துள்ள அயர்லாந்துச் சட்டங்கள் அமைந்துள்ளன என்று கூறும் அயர்லாந்துப் பெண்கள் மூவர் இந்த வழக்கைத் தொடுத்துள்ளனர்.
இந்தப் பெண்கள் மூவரும் பிரிட்டனுக்குள் வந்து கருக்கலைப்பு செய்துகொண்டவர்கள். கருக்கலைப்புக்காக வெளிநாடு செல்ல வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது தங்களது உடல்நலம், நலவாழ்வு ஆகியவற்றுக்கு ஆபத்தாக முடிந்திருக்க கூடிய விஷயம் என்று இவர்கள் வாதிடுகின்றனர்.
வயிற்றிலுள்ள குழந்தையின் உயிரைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அரசாங்கத்துக்கு உள்ளது என்ற அடிப்படையில் இந்த வழக்கில் தமது சார்பாக வாதிட இரண்டு முன்னணி அரசியல் சட்ட சட்டத்தரணிகளை அயர்லாந்து அரசாங்கம் நியமித்துள்ளது.
காலநிலை மாற்றம் பற்றிய ஒப்பந்தத்தின் தன்மை குறித்து கருத்து வேறுபாடு
![]() | ![]() |
மாநாட்டு வளாகத்தில் எடுக்கப்பட்ட படம் |
காலநிலை மாற்றத்தின் பாதிப்புகளை இலகுவில் எதிர்கொள்ளும் நிலையில் உள்ள நாடுகள் கடுமையான உடன்படிக்கையைக் கோருகின்றன.
அவற்றில் பசுபிக் தீவான துவலு மற்றும் சிறிய தீவு நாடுகள், வறிய ஆப்பிரிக்க நாடுகள் அடங்குகின்றன.
கடுமையான உடன்படிக்கை பொருளாதார பாதிப்புக்கு இடம்செய்துவிடும் என்று அஞ்சுகின்ற இந்தியா, சீனா போன்றவை அதை எதிர்க்கின்றன.
தமது வழமையான கூட்டணி நாடுகளை எதிர்க்கின்ற நிலை ஏற்பட்டாலும் கூட வறிய மற்றும் பாதிப்பை எதிர்கொள்ளும் நாடுகள் கடுமையான ஒப்பந்தத்தை வலியுறுத்தும் என்பதற்கான, இதுவரை காலத்தில் தென்படும் முதலாவது சமிக்ஞை இது என்று பிபிசியின் சுற்றுச்சூழல் நிருபர் கூறுகிறார்.
![]() | ![]() |
போர் நினைவுத்தூபி |
புதுமாத்தளனில் இறந்த படையினருக்கான நினைவுத் தூபியை இலங்கை ஜனாதிபதி திறந்து வைத்தார்
இலங்கை அரசினால் விடுதலைப்புலிகள் தோற்கடிக்கப்பட்டதன் பின்னர் முதற்தடவையாக வன்னிப் பகுதிக்கு விஜயம் செய்த இலங்கை ஜனாதிபதி அங்கு போர் நினைவுத் தூபி ஒன்றை திறந்து வைத்துள்ளார்.
போரினால் இடம்பெயர்ந்தவர்களுக்கான மனிக்பாம் இடைத்தங்கல் முகாமுக்கும் இன்று புதன்கிழமை விஜயம் செய்த ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவர்கள், எதிர்வரும் ஜனவரி 31 ஆம் திகதியுடன் இடம்பெயர்ந்தவர்கள் அனைவரும் மீளக்குடியமர்த்தப்பட்டுவிடுவார்கள் என்பதை மீண்டும் வலியுறுத்தியிருக்கின்றார்.
மடுத் தேவாலயத்திற்கும் முதற்தடவையாகச் சென்ற அவர் அங்கு இடம்பெற்ற விசேட வழிபாட்டில் கலந்து கொண்டார்.
விடுதலைப்புலிகளுக்கும் இராணுவத்தினருக்கும் இடையே இறுதிச் சமர் இடம்பெற்றதாகத் தெரிவிக்கப்படும் முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுமாத்தளன் பகுதிக்குச் சென்ற அவர் அங்கு போரினால் உயிரிழந்த படைவீரர்களுக்கான நினைவுத் தூபி ஒன்றினையும் திறந்து வைத்திருக்கின்றார்.
புதுமாத்தளன் நினைவுத்தூபி, ஆயுத கிளர்ச்சி இறுதியாக முடிவுக்குக் கொண்டுவரப்பட்டதைக் குறிக்குமே ஒழிய, அதனை தமிழர்கள் தோற்கடிக்கப்பட்டதை குறிக்கும் ஒன்றாகக் கொள்ள முடியாது என்று இலங்கை தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதன் குறிப்பிட்டார்.
அதேவேளை, இந்தப் போரில் கொல்லப்பட்ட மக்களை நினைவுகூரும் நினைவிடம் ஒன்றை அமைப்பது குறித்தும் தான் அரசாங்கத்திடம் பரிந்துரைக்கப்போவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதுபற்றிய மேலதிகத் தகவல்களை இன்றைய செய்தியரங்கத்தில் கேட்கலாம்.
டெல்லியில் இலங்கை தூதுக்குழு
![]() | ![]() |
இந்திய வெளியுறவு அமைச்சருடன் கோத்தாபாய மற்றும் பசில் ராஜபக்ஷ ( ஆவணப்படம்) |
இலங்கை ஜனாதிபதியின் செயலர் லலித் வீரதுங்க, பாதுகாப்புச் செயலர் கோத்தாபாய ராஜபஷ, ஜனாதிபதியின் மூத்த ஆலோசகர் பசில் ராஜபக்ஷ ஆகியோர் அந்தக் குழுவில் இடம் பெற்றிருக்கிறார்கள்.
இந்திய வெளியுறவுச் செயலர் நிருபமா ராவ், பாதுகாப்புச் செயலர் பிரதீப் குமார், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே. நாராயணன் ஆகியோரை அந்தக் குழுவினர் வியாழக்கிழமையன்று சந்தித்துப் பேசத் திட்டமிட்டுள்ளனர்.
இலங்கையில் ஆயுதப் போராட்டம் முடிவுற்றிருக்கும் நிலையில், முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை மீள்குடியேற்றம் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. அதுதொடர்பாக பல்வேறு விமர்சனங்கள் எழுப்பப்படுகின்றன.
தமிழ் மக்களின் மறுவாழ்வுக்காக, இந்திய அரசு 500 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்துள்ளது. மேலும் 500 கோடி வழங்கப்படும் என உறுதியளித்துள்ளது. இந்த நிலையில், அங்கு நடைபெறும் மீள்குடியேற்றம் தொடர்பாக இந்தியாவிடம் எடுத்துரைக்கவும், மறுவாழ்வுத் திட்டங்கள் தொடர்பாக விவாதிக்கவும் இலங்கைப் பிரதிநிதிகள் இந்தியா வந்துள்ளதாகத் தெரிகிறது.
குறிப்பாக, இலங்கையில் ஜனவரி இறுதியில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறும் நிலையில், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து முன்னாள் இராணுவத் தளபதி சரத் ஃபொன்சேகா களமிறக்கப்பட்டுள்ள நிலையில், இலங்கைப் பிரதிநிதிகள் இந்தியா வந்துள்ளமை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
கச்சதீவு ஒப்பந்தம் மீறப்படுவதாக கருணாநிதி குற்றச்சாட்டு
![]() | ![]() |
முதல்வர் கருணாநிதி |
கச்சத்தீவு ஒப்பந்தம் முடிந்துபோன ஒன்று, மறு பரிசீலனை செய்யமுடியாது என வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு, கச்சத்தீவு அருகாமையில் மீன்பிடிக்கும் இந்திய மீனவர்களுக்கோ, அங்கே யாத்திரை செல்வதற்கோ எவ்வித இடையூறும் அளிக்கப்படக்கூடாது என்று ஒப்பந்தத்தில் தெளிவாகவே குறிப்பிடப்பட்டிருந்தது, ஆனால் பின்னர் உருவான நெருக்கடி காலகட்டத்தில் அவை குறித்த ஷரத்துக்களை இலங்கை அரசு திரும்பப்பெற்றதாக செய்திகள் வெளியாயின என்று கருணாநிதி கூறினார்.
அத்தகைய செய்திகளை உறுதிப்படுத்தும் வகையில் அண்மை நிகழ்வுகள் இருக்கின்றன, இந்நிலை தொடரக்கூடாது என்றும் அவர் வலியுறுத்தினார்.
'இந்திய அரசபடை- மாவோயிஸ்ட் இடையேயான மோதல்களால் சிறார் கல்வி பாதிப்பு'- ஹியூமன் ரைட்ஸ் வாட்ச்
![]() | ![]() |
இந்திய மாவோயிஸ்டுகள் |
கிராமப்புறங்களில் உள்ள பள்ளிக்கூடங்களை இந்திய அரசாங்கத்தின் அதிகாரத்தின் சின்னமாக பார்க்கும் மாவோயிஸ்ட்டுகள், அவற்றை தாக்குவதை நிறுத்த வேண்டும் என்று அந்த அமைப்பு கோரியுள்ளது.
அரசாங்கப் படைகள் பள்ளிக்கூடங்களில் தளமமைப்பதால், அவை தாக்குதல் இலக்காவதாகக் கூறி, படைகள் பள்ளிக்கூடங்களைத் தாக்குவதை தவிர்க்க வேண்டும் என்றும் அந்த அமைப்பு கேட்டுள்ளது.
0 Response to "செய்தியறிக்கை"
แสดงความคิดเห็น