ராஜரட்ணத்திற்கு எதிராக ஐ. அமெ. பெடரல் யூரி சபை குற்றப்பத்திரிகைத் தாக்கல்

நிதி மோசடிகள் பலவற்றுடன் தொடர்புடையவர் எனக் குற்றம் சுமத்தப்பட்ட நிலையில் கைது செய்யப்பட்ட கோடீஸ்வர வர்த்தகரான ராஜ் ராஜரட்ணத்திற்கு எதிராக ஐக்கிய அமெரிக்க பெடரல் யூரி சபை குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்துள்ளது.
அவருக்கு எதிராக 17 குற்றச்சாட்டுகளை முன்வைத்து 36 பக்கங்களுடனான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பங்கு பத்திர மோசடி, நிதி ரீதியான சூழ்ச்சி ஆகியன அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள பிரதான குற்றச்சாட்டுக்களாகும்.
அத்துடன், கெலியான் நிறுவனத்துடன் 21 மில்லியன் அமெரிக்க டொலர்கள் பெறுமதியான ஹெஜிங் ஒப்பந்தத்தை மேற்கொண்டு அந்தரங்க கொடுக்கல் வாங்கல்களை அவர் மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை, அமெரிக்க நீதிமன்றம் ஒன்றின் முன்னிலையில் விசாரிக்கப்படும் பாரிய நிதி மோசடி வழக்காக இது கருதப்படுகிறது.
கடந்த அக்டோபர் மாதம் அமெரிக்க பெடரல் பொலிஸார் ராஜ் ராஜரட்ணத்தைக் கைது செய்த நிலையில், நீதிமன்ற அனுமதிக்கிணங்க அவரின் தொலைபேசி கலந்துரையாடல்களும் இரகசியமான முறையில் செவிமடுக்கப்பட்டனஎன்க் கூறப்படுகின்றது.
0 Response to "ராஜரட்ணத்திற்கு எதிராக ஐ. அமெ. பெடரல் யூரி சபை குற்றப்பத்திரிகைத் தாக்கல்"
แสดงความคิดเห็น