jkr
แสดงบทความที่มีป้ายกำกับ இந்தோனேஷிய கடற்படையினர் แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ இந்தோனேஷிய கடற்படையினர் แสดงบทความทั้งหมด

இந்தோனேசிய கடற்பரப்பில் உள்ள இலங்கை அகதிகள் நால்வர் கைது


இந்தோனேசிய கடற்பரப்பில் உள்ள இலங்கை அகதிகளில் நான் பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்தோனேசிய தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்கள் நான்கு பேரும் வைத்திய சிகிச்சைப் பெறுவதற்கு சென்றிருந்த வேளையிலேயே கைது செய்யப்படருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவர்களுடன், அவர்களுக்கு வைத்தியம் பார்த்த வைத்தியரும் கைதுச் செய்யப்பட்டடிருந்த பொழுதிலும் விசாரணைகளின் பின்னர் குறித்த வைத்தியர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கைதான நான்கு பேரில் இரண்டு பேருக்கு ஐக்கிய நாடுகள் சபையின் அகதி அந்தஸ்த்துக்கான அட்டை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும் கைதான நான்கு பேரையும் நிரந்தரமாக இந்தோனேசிய சிறையில் தடுத்து வைக்கவிருப்பதாக கடறபடையினர் அச்சுறுத்திவருகின்றனர்.

இதற்கிடையில், அகதிகள் பாதுகாப்பு தரப்பினர் இந்த சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

இந்தோனேசிய கடற்பரப்பில் உள்ள இலங்கை அகதிகள் உடனடியாக குடியமர்த்தப்பட வேண்டும் எனவே எதிர்பார்க்கின்றனரே தவிர, அவர்கள் கைது செய்யப்படும் அளவுக்கு தேச பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவர்கள் இல்லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஓசியன் விக்கிங் கப்பலுக்கு மேலும் ஒருவார கால அவகாசம்


இலங்கை அகதிகள் 78 பேருடன் தமது கடற்பரப்பில் தரித்திருக்கும் ஓசியன் விக்கிங் கப்பலை மேலும் ஒரு வார காலத்திற்கு தரித்திருக்க இந்தோனேஷியா நேற்று அனுமதி வழங்கியுள்ளது.

முன்னதாக நேற்று 6 ஆம் திகதி வெள்ளிக்கிழமையுடன் இலங்கை அகதிகள் 78 பேருடன் தரித்திருக்கும் இந்த கப்பல் தமது கடற்பரப்பில் இருந்து வெளியேற வேண்டும் என இந்தோனேஷியா உத்தரவிட்டிருந்தது.

இந்நிலையில் முறுகலைத் தீர்க்க இந்தோனேஷியாவுக்கும் அவுஸ்திரேலியாவுக்கும் இடையில் பேச்சுவார்த்தைகளும் நடைபெற்று வருகின்றன.

இலங்கையிலிருந்து கடந்த மாத நடுப்பகுதியில் அவுஸ்திரேலியாவுக்குச் சென்ற இந்தக் கப்பல் அனர்த்தத்திற்கு உள்ளாகவிருந்த வேளையில் இந்தோனேஷிய கடற்பரப்பில் வைத்து அவுஸ்திரேலிய கடற்படையினர் காப்பாற்றினர்.

இதனையடுத்து இந்தக் கப்பலில் உள்ளோரை ஆஸி. பொறுப்பேற்பதா? அல்லது இந்தோனேஷியா பொறுப்பேற்பதா?- என்ற முறுகல் தொடர்ந்து வருகிறது.

இது அவுஸ்திரேலிய கடற்படையினரே காப்பாற்றினர் என்பதால் அதனை அவுஸ்திரேலியாவே பொறுப்பேற்க வேண்டும் என இந்தோனேஷியா கூறி வருகிறது.

எனினும் இந்தோனேஷிய கடற்பரப்பில் வைத்துக் காப்பாற்றப்பட்டமையால், இந்தோனேஷியாவை நோக்கிச் செல்லுமாறு இந்த கப்பலுக்கு அவுஸ்திரேலியா அண்மையில் உத்தரவிட்டது.

இதன் அடிப்படையிலேயே இந்தக் கப்பல் தற்போது இந்தோனேஷியக் கடற்பரப்பில் தரித்து நிற்கிறது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

சட்டவிரோத குடியேற்றவாசிகளை இந்தோனேசியாவில் இருந்து திருப்பியழைக்க ஏற்பாடு


இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 260 இலங்கையர்களையும் விடுதலை செய்து இலங்கைக்கு திருப்பி அழைத்து வருதவற்கான முயற்சிகளை வெளிவிவகார அமைச்சு மேற்கொண்டுள்ளதாக தெரிய வருகிறது. இவர்கள் குறித்து சர்வதேச புலம்பெயர் அமைப்புடன் பேச்சு நடத்தி வருவதாகவும் குறித்த இலங்கையர்கள் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது. கடந்த ஞாயிற்றுக்கிழமை இவர்கள் அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்டவேளை இவர்களை இந்தோனேசியா கடற்படை மறித்து வைத்துள்ளது மேலும் இவர்கள் தமிழில் உரையாற்றும் போது கைதான 260பேரும் இலங்கையர்கள் என இதுவரை உறுதிப்படுத்தப் படவில்லை என வெளிவிவகார அமைச்சு உயரதிகாரி ஒருவர் தெரிவித்தார். எனினும் இந்தோனேசியாவிலுள்ள இலங்கை தூதரகத்தினூடாக இவர்கள் பற்றிய விபரங்களை திரட்டவும் இவர்களை விடுவிக்கவும் தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

அவுஸ்திரேலியா இன்றேல், வேறு எங்காவது அனுப்புங்கள் : 9 வயது இலங்கை சிறுமி கோரிக்கை

வீடியோ இணைக்கபட்டுள்ளது
எங்களை உங்களது பிள்ளைகள் போல நினைத்துக் கொள்ளுங்கள். தயவு செய்து எங்களையும், எங்களது உயிர்களையும் காப்பாற்றுங்கள். எங்களால் இலங்கையில் வாழவே முடியாது. அவுஸ்திரேலியா இல்லாவிட்டால் கூட பரவாயில்லை, வேறு எந்த நாட்டுக்காவது எங்களை அனுப்பி விடுங்கள்" என இந்தோனேசியாவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள படகில் தவித்துக் கொண்டிருக்கும் 9 வயது தமிழ்ச் சிறுமி உருக்கமுடன் கேட்டுள்ளார்.

இலங்கையிலிருந்து பெருமளவில் பணம் கொடுத்து மலேசியா சென்று அங்கிருந்து சிறிய கப்பல் மூலம் 300 பேர் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றுள்ளனர்.ஆனால் அவர்களை இந்தோனேஷிய கடற்படையினர் தடுத்து தற்போது மேற்கு ஜாவா தீவுக்கு கொண்டு சென்றுள்ளனர்.

இவர்களை தற்போது கப்பலிலிருந்து இறக்க கடற்படையினர் முயற்சித்து வருகின்ற போதிலும் தங்களை கப்பலிலிருந்து அப்புறப்படுத்த முயன்றால், காஸ் சிலிண்டர்களை வெடிக்க வைத்துத் தற்கொலைசெய்து கொள்வோம் என தமிழர்கள் கூறி வருவதால் கடற்படையினர் என்ன செய்வது என்று தெரியாமல் நிற்கின்றனர்.

இந்த நிலையில் தங்களது உயிர்களையும், தங்களையும் காப்பாற்றுமாறும், புகலிடம் அளிக்க வேண்டும் என்றும் கோரி தமிழர்கள் உருக்கமான கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அந்தக் கப்பலில் உள்ள 9 வயது சிறுமி பிருந்தா கதறியபடி விடுத்துள்ள உருக்கமான கோரிக்கையை ஆஸ்திரேலியாவின் ஏ.பி.சி .டிவி ஒளிபரப்பியுள்ளது.

சிறுமி பிருந்தா,

" உலக அரசுகளே, உங்களது கதவுகளை எங்களுக்காகத் திறந்து வையுங்கள். தயவு செய்து எங்களையும், எங்களது உயிர்களையும் காப்பாற்றுங்கள். நாங்கள் உங்களது பிள்ளைகள். தயவு செய்து, எங்களைப் பற்றி நினைத்துப் பாருங்கள்.

ஐயா, தயவு செய்து எங்கேயாவது எங்களை அழைத்துச் செல்லுங்கள். அது அவுஸ்திரேலியாவாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. எங்களை ஆதரிக்கும் எந்த நாடாக இருந்தாலும் பரவாயில்லை. எங்களால் இலங்கையில் வாழவே முடியாது" என்று கண்களில் நீர் வழிய உருக்கமாக கூறியுள்ளார்.

மிகவும் சிறிய கப்பலில் 290 பேர் அடைபட்டுள்ளனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் அவர்கள் அதில் அடைபட்டுத் தவித்துக் கொண்டிருக்கின்றனர்.

இதற்கிடையே, அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவில் இதுபோல புகலிடம் கோரி வருவோருக்காக செய்யப்பட்டுள்ள வசதிகள் தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளன. 1200 பேர் மட்டுமே தங்கக் கூடிய வசதி முன்பு இருந்தது. தற்போது மேலும் 280 தற்காலிக படுக்கைகள் போடப்பட்டுள்ளன. இதன் மூலம் 1400 பேருக்கும் மேல் தங்கக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அஸ்திரேலியாவுக்குச் சட்டவிரோதமாக அகதிகளாக வருவோர் இங்கு அனுப்பப்பட்டு முறையான விசாரணைக்குப் பின்னர் புகலிடம் கோருவதற்கான காரணங்கள் முறையாக இருந்தால் அவுஸ்திரேலியாவுக்கு அனுப்பப்படுகின்றனர்.

தற்போது இந்தத் தடுப்பு முகாமில் ஆட்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து மேலும் பல தற்காலிக தங்குமிடங்களை ஏற்படுத்துவது குறித்து அவுஸ்திரேலிய அரசு பரிசீலித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கடந்த ஜனவரி மாதம் முதல் 1650 இற்கு மேற்பட்ட இலங்கையர்கள் இங்கு வந்துள்ளனர். இவர்களில் 1305 பேர் தற்போது இத்தீவில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates