jkr
แสดงบทความที่มีป้ายกำกับ ஐக்கிய தேசிய முன்னணி แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ ஐக்கிய தேசிய முன்னணி แสดงบทความทั้งหมด

போலி வாக்குறுதிகளை வழங்காதீர்கள் : ஐ.தே.முன்னணிக்கு மல்வத்த பீடாதிபதி அறிவுரை


மக்களின் நலன்கருதி வேறுபட்ட கட்சிகளைச் சேர்ந்த அரசியல் தலைவர்கள் ஒன்று சேர்ந்திருப்பதை வரவேற்கும் அதேவேளை, பொய் வாக்குறுதிகளை வழங்கி மக்களை ஏமாற்றுவதை அரசியல் கட்சிகள் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசிய முன்னணி உறுப்பினர்களுக்கு ஆசி வழங்கிய கண்டி மல்வத்த பீடாதிபதி திப்பட்டுவாவே சித்தார்த்த ஸ்ரீ சுமங்கள தேரர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியினர் தமது கொள்கை விளக்கக் கோவையினை மல்வத்த பீடாதிபதியிடம் இன்று சனிக்கிழமை காலை கையளித்து ஆசிபெற்ற பின்னரே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஆகிய பிரதான கட்சிகள் இணைந்து கொழும்பிலிருந்து வாகனத் தொடரணியாக கண்டிக்குச் சென்றனர்.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க, பிரதித் தலைவர் கரு ஜயசூரிய, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மக்கள் பிரிவுத் தலைவர் மங்கள சமரவீர உள்ளிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.

"மாகாண சபைகளினூடாக மக்களுக்கு உரிய சேவைகள் ஆற்றப்படுவதில்லை என்பதே எனது கருத்தாகும். நாட்டுக்கு நிறைவேற்று அதிகாரமில்லாத மக்கள் பலம் கொண்ட ஆட்சி பொருத்தமாக இருக்கும் என நினைக்கிறேன். இது எனது சொந்த அபிப்பிராயமாகும்.

நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் சேவை செய்வதற்கு அரசியல் தலைவர்கள் எப்போதும் தயாராக இருக்க வேண்டும்" என பீடாதிபதி இதன்போது வேண்டுகோள் விடுத்தார்.

"நாட்டில் மனித உரிமைகளுக்கு இடமில்லை. பொருளாதாரம் நாளுக்கு நாள் அபிவிருத்தியில் குறைந்து வருகிறது. சுதந்திரமான ஜனநாயக நாட்டை கட்டியெழுப்புவதற்காகவே நாம் ஒன்றிணைந்தோம்.

நாட்டின் அபிவிருத்திக்காகவும் மக்களின் வாழ்வாதாரத்தை அதிகரிக்கவும் நாம் தொடர்ந்தும் பாடுபடுவோம்" என ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க அங்கு உரையாற்றுகையில் குறிப்பிட்டார்.

கொழும்பிலிருந்து தொடரணியாகச் சென்ற மேற்படி குழுவினர், இன்று காலை 9.00 மணியளவில் கண்டி தலதா மாளிகைக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர். அதன் பின்னர் மல்வத்த பீடத்துக்குச் சென்றனர்.

கண்டி செல்வ விநாயகர் ஆலயத்திற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டதோடு கண்டி மீரா மக்காம் முஸ்லிம் பள்ளிவாசல், கண்டி மறைமாவட்ட ஆயர் இல்லம் ஆகிய வழிபாட்டுத் தலங்களுக்கும் சென்று அவர்கள் வழிபட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்படும் நிலை!


- ஆர்.சிவகுருநாதன்

ஐக்கிய தேசியக்கட்சி முக்கி முக்கிப் பிரச்சாரம் செய்தும், அதன் ‘ஐக்கிய தேசிய முன்னணி’ கூட்டணியில், ஐக்கிய தேசியக்கட்சி யின் பழைய தோஸ்த்துகளான ரவூப் ஹக்கீம், மங்கள சமரவீர, மனோகணேசன் ஆகியோரைத் தவிர வேறு புதிய முகங்கள் எவரும் இணைந்து கொள்ளவில்லை. சிலவேளைகளில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு போன்ற கட்சிகள் ‘அண்டர்கிரவுண்டாக’ இணைந்திருக்கின்றனரோ தெரியவில்லை!

எதிர்க்கட்சிக் கூட்டணியின் தலைவர்கள் ஆளுக்காள் கைகோர்த்து பேப்பர்களுக்கு ‘போஸ்’ கொடுத்த கையோடு, ஹக்கீமும், மனோகணேசனும் தமிழ் தேசியக்கூட்டமைப்பு சம்பந்தன் கோஷ்டியினரை பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் சந்தித்துப் பேசியுள்ளனர். இந்தமுறை இந்தச் சந்திப்பில் ஆனந்தசங்கரி, சித்தார்த்தன், சிறீதரன் ஆகியோர் கலந்து கொள்ளவில்லை. இந்த மூன்று தலைவர்களின் கட்சிகளின் ஆதரவாளர்கள், தமிழ் தேசியக் கூட்டமைப்பினருடனும், ஐக்கிய தேசியக்கட்சியின் அடிவருடிகளான ஹக்கீம், மனோ கணேசன் ஆகியோருடனும் கூட்டு வைப்பதை அடியோடு எதிர்ப்பதால், அவர்கள் சந்திப்பில் கலந்து கொள்ளாமல் தவிர்த்துக் கொண்டனர் என தலைநகரில் கிசுகிசுக்கப்படுகிறது.

ஆனால் சந்திப்பை நிகழ்த்திய மூன்று கட்சியினரும், ஆனந்தசங்கரி தலைமையிலான மூன்று கட்சி அணியினரையும் எப்படியும் வளைத்துப் பிடிக்க வேண்டும் என முடிவு செய்துள்ளனர். ஏனெனில் ஆனந்தசங்கரி தலைமையிலான குழுவினர் டக்ளஸ் தேவானந்தாவின் ஈ.பி.டீ.பி கட்சியினருடன் முரண்டு நிற்பதால், அவர்களை எப்படியும் வளைத்துப்போட்டு, வடக்கு கிழக்கு தமிழ் பேசும் மக்களின் வாக்குகளை மொத்தமாக எதிர்வரும் தேர்தல்களில் ஐக்கிய தேசியக்கட்சிக்கு தாரைவார்ப்பது தான் இதன் திட்டமாகும். இந்தத் திட்டத்தை மற்றவர்கள் ‘மணந்து’ பிடித்து விடுவார்களோ என்ற பயத்தில், ‘எங்கப்பன் குதிருக்குள் இல்லை’ என்ற கணக்காக தமது கூட்டணி, தேர்தலை நோக்கமாகக் கொண்டது அல்ல என அறிக்கை விடுத்து, தமது உண்மையான நோக்கத்தையும் போட்டு உடைத்துள்ளனர்.

அதன் பின்னர், பாராளுமன்றத்தில் அரசாங்கம் வரவு செலவுத் திட்டத்துக்கு பதிலாக சமர்ப்பித்த இடைக்கால அறிக்கை மீதான வாக்கெடுப்பின் போது, தமிழ் தேசியக்கூட்டமைப்பு எதிர்க்கட்சிகளுடன் இணைந்து அரசாங்கத்துக்கு எதிராக வாக்களித்துள்ளது. இந்த இடைக்கால கணக்கறிக்கையின் நிதி ஒதுக்கீடுகள், வடக்கு கிழக்கில் இடம் பெயர்ந்த மக்களை மீளக்குடியமர்த்துவது, பொருளாதார அபிவிருத்தி செய்வது போன்ற விடயங்களை உள்ளடக்கி இருந்த போதிலும், வழக்கம் போல தமிழ் தேசியக்கூட்டமைப்பு மக்கள் நலனை முன்னிலைப்படுத்தாது, ஐக்கிய தேசியக்கட்சியின் அரசியல் நலன்களுக்காக செயல்பட்டுள்ளது.

தமிழ் தேசியக்கூட்டமைப்பின் இந்தப் போக்கு, அது எந்த திசைவழியில் பயணிக்க முற்படுகின்றது என்பதை கோடுகாட்டி நிற்கின்றது. கடந்த 60 ஆண்டுகளாக இதே ஐக்கிய தேசியக்கட்சி ஆதரவு நிலையை தமிழ் தலைமைகள் பின்பற்றியதால் தான், தமிழ் மக்கள் இன்று எல்லாவற்றையும் இழந்து நிற்கின்றனர் என்ற உண்மையை இன்றைய தமிழ்த்தலைமையும் உணரவோ, மாற்றியமைக்கவோ தயாரில்லை என்பதைத்தான் அவர்களின் தற்போதைய போக்கும் தெளிவுற நிரூபித்து நிற்கிறது.

ஆனால் தமிழ் தேசியக்கூட்டமைப்பு தலைமையின் ஒருபகுதியினரின் இந்த தேசிய விரோதப்போக்கை, தமிழ் தேசியக்கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்களில் பலர் விரும்பவில்லை எனத் தெரியவருகிறது. யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்.சிறீகாந்தா, வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் சிவநாதன் கிஷோர், சிவசக்தி ஆனந்தன் மற்றும் சில கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது தலைமையின் ஐக்கிய தேசியக்கட்சிக்கு ஆதரவான போக்கையும், தேசிய விரோதப் போக்கையும் விரும்பவில்லை எனக் கூறப்படுகிறது. அவர்களைப் பொறுத்த வரையில் இன்றைய அரசாங்கத்துடன் ஒத்துழைத்து, இடம் பெயர்;ந்த மக்களின் மீள்குடியேற்றம், தமிழ் பிரதேசங்களின் பொருளாதார அபிவிருத்தி, இனப்பிரச்சினைக்கு நியாயமான தீர்வு என்பனவற்றை நிறைவேற்ற வேண்டும் என எண்ணுகின்றனர்.

கடந்த காலங்களில் இனிப்பாகப் பேசிவிட்டு, நயவஞ்சகமாக ஏமாற்றிய ஐக்கிய தேசியக்கட்சியை விட, இனப்பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் உள்ள சிக்கல்களை வெளிப்படையாகக் கூறும் இன்றைய அரச தலைமை நம்பகமானது என அந்தப் பாராளுமன்ற உறுப்பினர்கள் எண்ணுகின்றனர். எனவே “சோற்றை விட சுதந்திரம் தான் பெரிது” என்ற தமிழ் தேசியவாதத் தலைமையின் வழமையான வாய்ப்பாட்டை, தமிழ் தேசியக்கூட்டமைப்பிலுள்ள இந்த ‘இளம் துருக்கியர்கள்’ ஏற்கத் தயாரில்லை என நம்பகமாகத் தெரியவருகிறது. அதையும் மீறி தமிழ் தேசியக்கூட்டமைப்பு தலைமை தனது வழமையான பாதையில் பயணிக்குமாக இருந்தால், கூட்டமைப்பில் பிளவு ஏற்படுவது இம்முறை தவிர்க்க முடியாத ஒன்றாக இருக்கும் என பெயர் குறிப்பிட விரும்பாத கொழும்பிலுள்ள அதன் பிரமுகர் ஒருவர் தெரிவித்தார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஐக்கிய தேசிய முன்னணி இன்று கைச்சாத்து


பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையிலான எதிர்க்கட்சிக ளின் பொதுக் கூட்டமைப்பான ஐக்கிய தேசிய முன்னணி இன்று செவ்வாய்க்கிழமை காலை உத்தியோகபூர்வமாக கைச்சாத்திடப்படவுள்ளது. பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் வைத்து முற்பகல் 11.30 மணி வரையிலான சுபநேரத்தில் இதற்கான ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

இந்த எதிர்க்கட்சிகளின் பொதுக் கூட்டமைப்பில் ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஜனநாயக மக்கள் முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பிரிவு, புதிய சிஹல உறுமய உள்ளிட்ட 20 கட்சிகளும், அமைப்புக்களும் கைச்சாத்திட்டுள்ளன.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை இல்லாதொழிப்பது உட்பட 10 அம்ச இணக்கப்பாடுகளை கருத்தில் கொண்டே எதிர்க்கட்சிகளின் பொதுக் கூட்டமைப்பான ஐக்கிய தேசிய முன்னணி உருவாக்கப்படுள்ளது.

இதற்கமைய, ஐக்கிய தேசிய முன்னணி என்ற இந்த புதிய அரசியல் முன்னணி ஆட்சியமைத்ததன் பின்னர் 180 நாட்களுக்குள் நிறைவேற்று அதிகாரத்தை முழுமையாக இரத்துச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும்.

கைச்சாத்திடப்பட்டதன் பின்னர் எதிர்வரும் 13ஆம் திகதி விசேட வாகன பவனி மூலமாக கண்டிக்குச் சென்று, தலதா மாளிகையில் விசேட பூஜை வழிபாடுகளிலும் ஈடுபடவுள்ளனர்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates