jkr
แสดงบทความที่มีป้ายกำกับ சென்னை แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ சென்னை แสดงบทความทั้งหมด

வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு நிலை - மீண்டும் வருகிறது மழை


சென்னை: வங்கக் கடலில் இலங்கைக்கு அருகே குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாகியிருப்பதால் தமிழகத்தின் கடலோரப் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்தில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் வெளியிட்டுள்ள அறிக்கை...

தமிழகத்தில் இன்று பரவலாக மழை பெய்தது.

அதிகபட்சமாக புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் 7 செமீ மழை பதிவானது.

திருவாரூர், நாக்பட்டனத்தில் தலா 4 செமீ மழையும், திருத்துறைப்பூண்டி 2, மன்னார்குடி, நன்னிலம், வேதாரண்யத்தில் தலா 1 செமீ மழை பெய்தது.

டிசம்பர் 1ம் தேதி வரைக்குமான வானிலை முன்னறிவிப்பு..

கடலோரத் தமிழகம், புதுச்சேரியில் சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யலாம். தமிழகத்தின் உட்புறப் பகுதிகளில் பரவலாக மழை பெய்யும்.

சென்னை நகர் மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் மேமூட்டமாக இருக்கும். சில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புண்டு.

தமிழகம், புதுச்சேரிக்கான 1ம் தேதி காலை வரையிலான வானிலை முன்னறிவிப்பு...

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர், விழுப்புரம், நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

அடுத்த 2 நாட்களில் மழையின் அளவு படிப்படியாக அதிகரிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில்...

சென்னையில் நேற்று முதல் வானம் மேகமூட்டமாக உள்ளது. இரவில் பனி அதிகமாக உள்ளது. பகலிலும் குளிர் காற்று வீசுவதால் மக்கள் சற்று பாதிப்படைந்துள்ளனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

சென்னை விமான நிலையத்துக்கு குண்டு மிரட்டல்


சென்னை: சென்னை [^] விமான நிலையத்திற்கு தொலைபேசி மூலம் வெடிகுண்டு மிரட்டல் [^] விடுத்த மர்ம நபரை போலீசார் தேடிவருகின்றனர்.

மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய கொடூரமான தாக்குதலின் முதலாமாண்டு நிறைவு தினமான நேற்று சென்னை விமான நிலையத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.

இந்நிலையில், விமான நிலையத்திற்கு ஒரு மர்ம நபர் போன் செய்து, விமான நிலையத்தின் மீது வெடிகுண்டு தாக்குதல் நடக்கப்போகிறது என மிரட்டல் விடுத்துவிட்டு, உடனடியாக இணைப்பை துண்டித்துவிட்டார்.

இதனால், கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு, விமான நிலையம் முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு உஷார் நிலையில் இருந்தது. அசம்பாவிதங்கள் ஏதும் நிகழவில்லை.

விமான நிலையத்துக்கு மிரட்டல் விடுத்த மர்மநபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். தொலைபேசி அழைப்பு மூன்று இலக்கம் கொண்ட ஒரு எண்ணில் இருந்து வந்ததை போலீசார் உறுதி செய்துள்ளனர். மேலும் விசாரணை நடந்து வருகிறது.

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

சென்னை வந்த கப்பலில் அணு ஆயுதங்களா?


சென்னை: மால்டாவில் பதிவு செய்யப்பட்ட சரக்குக் கப்பலில் அணு ஆயுதப் பொருட்கள் ஏற்றிச் செல்லப்படுவதாக வந்த தகவலையடுத்து அந்தக் கப்பலை நடுக் கடலில் தடுத்து நிறுத்தி சென்னை க்கு வரவழைத்து தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

கார்லான்ட் என்ற கப்பல் விசாகப்பட்டனத்திலிருந்து வந்து கொண்டிருந்தது. இந்த நிலையில், நேற்று மாலை சென்னை துறைமுகத்திற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில், பேசிய நபர், சம்பந்தப்பட்ட கப்பலில், அணு சக்திப் பொருட்கள் இருப்பதாக கூறினார்.

இதையடுத்து அந்தக் கப்பலைத் தொடர்பு கொண்ட அதிகாரிகள், உடனடியாக சென்னை துறைமுகத்திற்கு வருமாறு உத்தரவிட்டனர்.

மேலும் கடலோரக் காவல் படையினரும் கப்பலை நோக்கி விரைந்தனர். அந்தக் கப்பல் தற்போது சென்னை துறைமுக எல்லைக்குள் வந்துள்ளது.

இதையடுத்து கல்பாக்கம் அணு மின் நிலையத்திலிருந்து நிபுணர்கள் குழுவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர்கள் கப்பலில் முழுமையாக சோதனையிடவுள்ளனர்.

கதிரியக்கப் பொருட்கள் எதுவும் இல்லை என்று உறுதியானவுடன்தான் இந்தக் கப்பல் மீண்டும் கிளம்பிச் செல்ல அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

சென்னை அருகே அமைந்துள்ள புழல் அகதிகள் முகாமை மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்



பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி உறுப்பினர் ஒருவரின் வீட்டுக்குச் சென்று குறை நிறைகளை கேட்டறிந்தார்

தமிழ்நாட்டில் உள்ள இலங்கை அகதிகள் முகாம்கள் அடிப்படை வசதிகள் இல்லாமல் மக்கள் பெரும் அவதியுறுவதாக தமிழக முதல்வரின் கவனதுக்கு கொண்டுவரப்பட்டதை அடுத்து கடந்த 2.11.09 அன்று அவசர அவசரமாக மாவட்ட கலெக்டர்கள், நிதித்துறை அதிகாரிகள் ஆகிரோரை அழைத்து முதல்வர் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் உள்ள அகதிகள் முகாம்களின் வளர்ச்சிக்காக ரூ.12 கோடி முதல் கட்டமாக ஒதுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. “தமிழகத்தில் உள்ள முகாம்களை அமைச்சர்கள்,அதிகாரிகள் ஆய்வு செய்து எதிர்வரும் 10ம் திகதிக்குள் அறிக்கைகளை தனக்கு ஒப்படைக்க வேண்டும்” என தமிழக முதல்வர் உத்தரவிட்டார். அதன் அடிப்படையில் தமிழகத்தில் உள்ள முகாம்;களுக்கு தி.மு.க அமைச்சாகள் அதிகாரிகள் விஜயம் செய்து வருகின்றனர். சென்னை அருகே அமைந்துள்ள புழல் அகதிகள் முகாமிற்கு 3.11.09 அன்று துணைமுதல்வர் மு.க.ஸ்டாலின்,திருவள்ளுர் மாவட்ட கலெக்டர்,மீன்வளத்துறை அமைச்சர்ஏ.கே.பி.சாமி உட்பட பல அதிகாரிகள் சென்று பார்வையிட்டனர் இந்திய-இலங்கை ஒப்பந்தம் ஏற்பட்டு அதனை அமுல்படுத்துவதற்காக பல எதிர்ப்பகளை முறியடித்து அதற்காக பாடுபட்ட ஈழ மக்கள் புரட்சிகரவிடுதலை முன்னணி(பத்மநாபா) உறுப்பினர்கள் பலர் இருபது வருடங்களாக புழல் அகதிகள் தங்கியிருக்கின்றனர். துணை முதல்வர் பத்மநாபா ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி உறுப்பினர் ஒருவரின் வீட்டக்குச் சென்று அவரிடம் குறை,சிறைகளை கேட்டு அறிந்து கொண்டார் முகாமில் உள்ள மக்கள் துணைமுதல்வரிடம் பல கோரிக்கைகளை முன்வைத்து அதனை நிறைவேற்றி தருப்படி கேட்டுக் கொண்டனர். கழிப்பிடவசதி,சுத்தமான குடிநீர்,பிள்கைளின் கல்வி,முகாமினுள் ரேசன் கடை,ஓட்டுனர் உரிமம்,மாத கொடுப்பனவை அதிகரித்தல் போன்ற கோரிக்கைகளை முன்வைத்தனர். “தான் பார்த்தவற்றை,நீங்கள் சொல்லியவற்றை தமிழக முதல்வரிடம் எடுத்துக் கூறுவேன் அவைகள் நிறைவேற்றப்படும்” என மு.க.ஸ்டாலின் கூறினார்..
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஏர் இந்தியா விமானங்களுக்கு மிரட்டல்- விமான நிலையங்கள் உஷார்

சென்னை: ஏர் இந்தியா விமானங்களில் வெடிகுண்டுகள் வைக்கப்பட்டுள்ள என்று கூறி மிரட்டல் வந்ததைத் தொடர்ந்து நாடு முழுவதும் விமான நிலையங்கள் உஷார்படுத்தப்பட்டன. தீவிர சோதனையும் நடைபெற்றது.

மும்பையில் உள்ள ஏர்-இந்தியா அலுவலகத்திற்கு நேற்று ஒரு இ-மெயில் வந்தது. அதில், ஏர்-இந்தியா விமானங்களில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளது. அவை வெடித்துச் சிதறும் என்று மிரட்டப்பட்டிருந்தது.

இதையடுத்து அனைத்து விமான நிலையங்களும் உஷார்படுத்தப்பட்டு வெடிகுண்டு சோதனை, கண்காணிப்புக்கு உத்தரவிடப்பட்டது. பாதுகாப்பும் பலப்படுத்தப்பட்டது.

டெல்லி, மும்பை, சென்னை, கொல்கத்தா, பெங்களூர் , ஹைதராபாத், கொச்சி உள்ளிட்ட உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான நிலையங்களில் விமான நிலைய அதிகாரிகள் கண்காணிப்பு மற்றும் சோதனையை தீவிரப்படுத்தினர்.

சென்னை மீனம்பாக்கம் அண்ணா பன்னாட்டு முனையம், காமராஜர் உள்நாட்டு முனையம் ஆகியவற்றில் இருந்து புறப்பட்டு செல்லும் ஏர்-இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ், ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய விமானங்களில் பயணிகள் பலத்த சோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.

சென்னையில் இருந்து ஏர்-இந்தியா நிறுவனங்களில் இருந்து கொழும்பு, சிங்கப்பூர், கோலாலம்பூர், துபாய், டெல்லி, கொல்கத்தா, மும்பை உள்பட பல்வேறு நகரங்களுக்கு செல்ல கூடிய 37 விமானங்களிலும் அதிகாரிகள் பலகட்ட சோதனை செய்து பயணிகளை அனுப்பி வைத்தனர்.

விமான பயணிகள் அனைத்து விதமான திரவ பொருட்களையும் எடுத்து செல்லவும் தடை விதிக்கப்பட்டது. விமானங்களில் திரவ பொருட்களை எடுத்துச் செல்வதற்கு ஏற்கனவே தடை உள்ளது. திரவ வடிவில் குண்டுகளை எடுத்துச்சென்று வெடிக்கச் செய்ய முடியும் என்பதால் இந்த தடை விதிக்கப்பட்டிருக்கிறது. ஆனஆல் இது சரியான முறையில் நடைமுறையில் இல்லை.

ஆனால் நேற்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த உத்தரவை அதிகாரிகள் தீவிரமாக அமல்படுத்தினர்.

நேற்று நாடு முழுவதும் நடந்த சோதனையில் எங்கும் வெடிகுண்டு கண்டுபிடிக்கப்படவில்லை. இருப்பினும் தொடர்ந்து அதிகாரிகள் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஜெவுக்கு ஒரு நீதி, தினகரனுக்கு ஒரு நீதியா?-திமுக


சென்னை: கொடநாட்டில் விதிகளை மீறி பங்களா கட்டியுள்ள ஜெயலலிதாவுக்கு ஒரு நீதி, நீதிபதி தினகரனுக்கு ஒரு நீதியா என்று திமுக கேள்வி எழுப்பியுள்ளது.

நில ஆக்கிரமிப்பு சர்ச்சையில் சிக்கிய கர்நாடக உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி பி.டி.தினகரனின் பெயரை, உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கான பரிந்துரைப் பட்டியலிலிருந்து நீக்கி விட்டதாக நேற்று செய்திகள் வெளியாகின.

ஆனால் இதை தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் மறுத்துள்ளார்.

இதுகுறித்து டெல்லியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் கூறுகையில், பட்டியலில் இருந்த மற்ற நான்கு நீதிபதிகளை உச்சநீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்று மட்டும்தான் காலேஜியம் கூறியுள்ளது. மற்றபடி, நீதிபதி பி.டி.தினகரன் குறித்து இதுவரை முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை.

இதை வைத்து அவரது பெயர் நீக்கப்பட்டதாக கூற முடியாது, நிச்சயம் கூற முடியாது என்றார்.

முன்னதாக பி.டி.தினகரனுடன் சேர்ந்து பட்டியலில் இடம் பெற்றிருந்த மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம், குஜராத் , பஞ்சாப்-ஹரியாணா உயர்நீதிமன்றங்களின் தலைமை நீதிபதிகளை உச்சநீதிமன்றத்திற்கு நியமிக்க காலேஜியம் அனுமதி அளித்தது நினைவிருக்கலாம்.

இந் நிலையில் இந்த விவகாரத்தில் இதுவரை அமைதி காத்து வந்த திமுக தனது நிலையை தெளிவுபடுத்தியுள்ளது.

அதன் நாளிதழான முரசொலியில் இரு தினங்களுக்கு முன் முதல் பக்கத்தில் அரை பக்க அளவுக்கு வெளிவந்துள்ள கார்ட்டூனில், ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட்டையும், நீதிபதி தினகரன் தரப்பு திருவள்ளூரில் கையகப்படுத்தியுள்ள நிலத்தையும் குறிப்பிட்டு, ''இரண்டு வகையான நியாயமா?.., இது தான் சம நீதியா?'' என்று கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

மேலும் சாஸ்திரங்களில் சூத்திரர்களுக்கும் பிராமணர்களுக்கும் இரண்டு வகையான நீதி கடைபிடிக்கப்படுவதாக பாடிய பாரதியின் வரிகளும் மேற்கோள் காட்டப்பட்டுள்ளன.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

67 பவுண் தங்கம் சென்னை விமான நிலையத்தில் பறிமுதல் : இரு இலங்கையர் மீது விசாரணை


கொழும்பிலிருந்து சென்னைக்குக் கடத்தி வரப்பட்ட 67 பவுண் தங்க நகைகளை சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

இது தொடர்பாக இலங்கை பெண் உட்பட 2 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு கொழும்பிலிருந்து வந்த விமானத்தில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் கண்காணித்தனர்.

அப்போது யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த சுந்தரம் (வயது 37) என்பவரிடம் சந்கேத்தின் பேரில் சுங்க இலாக அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

அப்போது சுந்தரம், அதிகாரிகளிடம் முன்னுக்கு பின் முரணாகப் பேசினார். இதையடுத்து அவரிடம் இருந்த சூட்கேசை அதிகாரிகள் சோதனையிட்ட போது, அதில் எதுவும் இருக்கவில்லை.

சுந்தரத்தை அதிகாரிகள் சோதனையிட்ட போது, கழுத்தில் புத்தம் புதிய தங்கச்சங்கிலி ஒன்றை அணிந்திருந்ததைக் கண்டனர். இது பற்றி கேட்டபோது, சுற்றுலாவாக சென்னைக்கு வந்ததாகவும், இந்தச் சங்கிலியைக் கழுத்தில் அணிந்து கொண்டு விமான நிலையத்தில் உள்ள ஒரு நபரிடம் கொடுத்தால் பணம் தருவதாக ஒருவர் கூறினார் என்றும் அவர் தெரிவித்தார்.

அவர் அணிந்திருந்த சங்கிலியின் எடை 40 பவுண் என்று தெரிய வந்தது.

மேலும் அதே விமானத்தில் வந்த யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தர்ஷினி (35) என்ற பெண் கைகளில் அதிகமான வளையல்களை அணிந்து வந்திருந்தார். சுமார் 27 பவுண் தங்க வளையல்களை இவர் கடத்தி வந்ததை சுங்க இலாகா அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து மொத்தம் 67 பவுண் மதிப்புள்ள சங்கிலி, வளையல் ஆகியவற்றை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இவற்றின் மதிப்பு ரூ.8 லட்சம் ஆகும்.

இது பற்றி தர்ஷினி, சுந்தரம் ஆகியோரிடம் சுங்க இலாகா அதிகாரிகள் தொடர்ந்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates