jkr
แสดงบทความที่มีป้ายกำกับ இலங்கை แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ இலங்கை แสดงบทความทั้งหมด

ஆயுதமேந்திய விமானம் கொழும்புக்கு வரவில்லை- இலங்கை மறுப்பு


கனரக ஆயுதங்களுடன் தாய்லாந்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள விமானம் கொழும்பை நோக்கி வந்தது என்று வெளியான செய்திகளுக்கு தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் லக்ஷ்மன் ஹுலுகல்ல மறுப்பு தெரிவித்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

தாய்லாந்து விமான நிலையத்தில் எரிபொருள் நிரப்புவதற்காக தரித்து நின்ற விமானம் வடகொரியாவிலிருந்து பெருமளவிலான கனரக ஆயுதங்களுடன் கொழும்பு நோக்கி சென்று கொண்டிருந்தது என்று தாய் அதிகாரிகளை மேற்கோள்காட்டி தாய் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. விமானம் தரையிறங்கியதும் தாய் அதிகாரிகள் சந்தேகத்தின் பேரில் அதனை சோதனையிட்ட போது அதனில் பெரும் தொகையான கனரக ஆயுதங்கள் இருக்கக் காணப்பட்டன.

விமான பணியாளர்கள் ஆயுதங்களை ஏற்றிச் செல்லும் உண்மையான இடத்தை மறைப்பதற்காக இலங்கைக்கு செல்வதாக பொய் கூறியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

அமெரிக்க அறிக்கைக்கு டிசம்பரில் இலங்கையின் பதில் அறிக்கை

Flag Sri-Lanka animated gif 240x180இலங்கையில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச் செயல்கள் குறித்து அமெரிக்கா வெளியிட்ட அறிக்கை பற்றி விசாரணை செய்ய ஜனõதிபதி மஹிந்தராஜபக்ஷ நியமித்த விசாரணைக்குழு அடுத்த மாதம் அதன் அறிக்கையை சமர்ப்பிக்க இருக்கிறது. டிசம்பர் மாத முடிவில் மேற்படி அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விசாரணைக் குழுவிடம் உத்தரவிட்டுள்ளதாக மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவை மேற்கோள்காட்டி அரச தொலைக்காட்சி செய்தி வெளியிட்டது.

அமெரிக்க பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட யுத்தக் குற்றச் செயல்கள் பற்றிய அறிக்கை, கொழும்பிலுள்ள அமெரிக்க தூதுவராலயம் சேகரித்த ஊடக அறிக்கைகள் மற்றும் தகவல்கள் உட்பட பல்வேறு வட்டாரங்களிலிருந்து பெறப்பட்ட தரவுகள் ஆகியவற்றை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்டுள்ளது.இலங்கை அரசாங்கத்திடம் அமெரிக்காவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதும் அறிக்கையில் அடங்கியிருப்பவை பற்றி விசாரிக்க ஜனாதிபதி ராஜபக்ஷ குழு ஒன்றை நியமித்திருந்தார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

பிரதமர் , வெளிவிவகார அமைச்சர் மேற்கிந்திய தீவு பயணம்


பொதுநலவாய அமைப்பின் 21ஆவது மாநாட்டில் (CHOGM) கலந்துகொள்வதற்காக பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்கவும் வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகமவும் மேற்கிந்திய தீவுகளுக்கான விஜயம் ஒன்றை மேற்கொள்கின்றனர்.

பொதுநலவாய அமைப்பின் 21 ஆவது மாநாடு டிரினிடாட்டொபாகோவில் இன்று ஆரம்பமாகிறது. இம்மாநாட்டில் இலங்கை சார்பாக இவர்கள் இருவரும் கலந்துகொள்கின்றனர்.

மாநாட்டில் பங்குபற்றுவதற்காக அமைச்சர் போகொல்லாகம இன்று காலை மேற்கிந்தியதீவுக்கு புறப்பட்டுச் செல்வதாக வெளிவிவகார அமைச்சு நேற்றுத் தெரிவித்தது.

பொதுநலவாய அமைப்பின் 60 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு நடைபெறும் மாநாட்டில் காலநிலை மாற்றம், சர்வதேச பொருளாதாரம் மற்றும் அகதிகள் விவகாரம் உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பாக ஆராயப்படவுள்ளன.

பிரதமர் ரட்ணசிறி விக்கிரமநாயக்க எதிர்வரும் 27 ஆம் திகதி முதல் 29 ஆம் திகதி வரையான இறுதி மூன்று நாட்களும் மாநாட்டில் கலந்துகொள்வாரென்று வெளிவிவகார அமைச்சு தெரிவித்தது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

பெற்றோலிய கூட்டுத்தாபனம், நீர்பாசன சபை ஊழியர்களின் போராட்டமும் முடிவு



இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் மற்றும் நீர்ப்பாசன சபை ஊழியர்களும் தமது தொழிற்சங்க நடவடிக்கையினை இன்றுடன் கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.

எனினும் எதிர்காலத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளதாகவும் அறிவித்துள்ளனர்.

அதேவேளை இலங்கை மின்சார சபை ஊழியர்கள் தமது கோரிக்கைகள் நிறைவேறும் வரை தொழிற்சங்க நடவடிக்கைகளை தொடரப்போவதாக அறிவித்துள்ளனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கியூபா - அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர்கள் இலங்கை விஜயம்


கியூபா பிரதி வெளிவிவகார அமைச்சர் மார்க்கோ டொபிரஸ் கஸ்ரோ இலங்கை வந்துள்ளார். நேற்று மாலை இலங்கை வந்தடைந்த கியூபா பிரதி வெளிவிவகார அமைச்சர் இன்று முற்பகல் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை சந்தித்து கலந்துரையாடினார்.

இச்சந்திப்பின் போது, இரு நாட்டு உறவுகளையும் மேலும் பலப்படுத்தும் வகையில் உடன்படிக்கை ஒன்றும் கைச்சாத்திடப்பட்டுள்ளது.

அதேவேளை அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் ஸ்மித் ஒருநாள் உத்தியோக பூர்வ விஜயம்மொன்றை மேற்கொண்டு இன்று அதிகாலை இலங்கை வந்தடைந்தார்.வெளிவிவகார அமைச்சரின் அழைப்பை ஏற்று இலங்கை வந்துள்ள அவர், ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, வெளிவிவகார அமைச்சர் மற்றும் பல அதிகாரிகளைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.

இச்சந்திப்புக்களின் போது இருநாட்டு உறவுகளைப் பலப்படுத்துவது மற்றும் சட்ட விரோத குடியேற்ற வாசிகள் குறித்து கலந்துரையாடப்படவுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

நாட்டைவிட்டு வெளியேறுகிறார் நிஷாந்த முத்துஹெட்டிகம


ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் தென்மாகாண சபைக்கு தெரிவு செய்யப்பட்ட நிஷாந்த முத்துஹெட்டிகம நாட்டை விட்டு வெளியேறுவதற்காக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ளார் என சற்று முன்னர் கிடைத்த செய்தி ஒன்று தெரிவிக்கின்றது.

அங்கிருந்து அவர் கருத்து தெரிவித்த போது,

நாட்டை விட்டு வெளியேற வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. இருப்பினும் நாட்டை விட்டு வெளியேறத் தீர்மானித்து விட்டேன். சுதந்திரமாக வாழ்வதற்காகவே நான் நாட்டை விட்டு வெளியேறுகின்றேன். இது வரை வாழ்ந்த அரசியல் வாழ்க்கை போதும்" என்று தெரிவித்தார்.

இவர் லண்டன் செல்கிறார் எனவும் அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இலங்கை ரஷ்ய உறவுகள் வலுவடைந்துள்ளன.


இலங்கைக்குத் தொடர்ந்தும் ஒத்துழைப்புக்களை வழங்குவதற்கு ரஷ்யா தயாராகவுள்ளதாகவும் இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர உறவுகள் மிகவும் வலுவடைந்து காணப்படுவதாகவும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி வி லெவ்ரேர் தெரிவித்துள்ளார்.

குறுகிய கால விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கைக்கு வந்துள்ள ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் தலைமையிலான உயர்மட்டக் குழுவினர் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை நேற்றைய தினம் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடாத்தியமையைத் தொடர்ந்து ஊடகவியலாளர் சந்திப்பினை மேற்கொண்டனர். இதன்போது கருத்துத் தெரிவித்த ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சர்வதேச அழுத்தங்களுக்கோ அல்லது குற்றச்சாட்டுகளுக்கோ முகம் கொடுக்கும் ஆற்றல் இலங்கைக்கு உள்ளது. இலங்கையின் நீதித்துறை மிகவும் ஒழுங்கான முறையில் செயற்பட்டு வருகின்றது. இதனைப் பயன்படுத்தி எந்தவொரு பிரச்சினைகளுக்கும் முகம் கொடுக்க முடியும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும் நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கும் விடயத்தில் ரஷ்யா இலங்கைக்கு எப்போதும் ஆதரவு வழங்கி வந்துள்ளது. பயங்கரவாதத்தை ஒழித்து நாட்டில் சுமூகமான நிலையை ஏற்படுத்தும் நோக்கிலேயே ரஷ்யா அரசாங்கம் இலங்கைக்கு பூரண ஒத்துழைப்புக்களை வழங்கி வந்தது. தேசிய ரீதியான ஒருமைப்பாடு நல்லிணக்கம் போன்ற நடைமுறைச்சாத்தியமான முடிவுகளை ரஷ்யா இந்த ஒத்துழைப்புக்களின் மூலம் எதிர்பார்ப்பதாகத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இலங்கையின் வடக்கில் கண்ணிவெடிகளை அகற்றும் நடவடிக்கைகளில் ரஷ்ய அரசாங்கம் தமது ஒத்துழைப்புக்களை வழங்கி வருவதுடன் மிதிவெடிகளை அகற்றும் விடயத்தில் அனுபவம் வாய்ந்த குழுவொன்றையும் அனுப்பவுள்ளதாகவும் ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் சேர்ஜி வி லெவ்ரேர் தெரிவித்துள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

மருந்து - தடுப்பூசி தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் : அரச மருத்துவர்கள்


மருந்துப் பொருள் பிரச்சினை தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென அரசாங்க மருத்துவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மருந்துப் பொருள் மற்றும் தடுப்பூசிகளில் காணப்பட்ட குறைபாடுகளினால் அண்மையில் சில உயிரிழப்பு சம்பவங்கள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்தச் சம்பவங்களுக்கு மருத்துவர்களின் கவனயீனமே காரணம் என சுகாதார அமைச்சு சுட்டிக்காட்டியிருந்தது.

எனினும், சுகாதார அமைச்சின் தூர நோக்கற்றச் செயல்களே இவ்வாறான உயிரிழப்புக்களுக்கு காரணம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, தரமற்ற மருந்து மற்றும் தடுப்பூசி இறக்குமதி தொடர்பில் உரிய விசாரணைகள் நடத்தப்பட வேண்டியதன் அவசியத்தை மருத்துவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும் அண்மைய நாட்களில் இடம்பெற்ற உயிரிழப்பு சம்பவங்கள் மற்றும் மருந்துப் பொருள் இறக்குமதி தொடர்பில் விசாரணை நடத்தப்பட வேண்டுமென மருத்துவர்கள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

அதேவேளை, இலங்கையில் இரண்டு பாடசாலை சிறுமிகள் கொல்லப்பட காரணமாக அமைந்த ரூபெல்லா ஊசி மருந்து தயாரிக்கும், இந்தியாவின் ட்ரம் இன்சிடியூட் நிறுவனத்திற்கு எதிராக விசாரணை நடத்த உலக சுகாதார அமைப்பு தீர்மானித்துள்ளது.

ஜெனிவாவில் உள்ள உலக சுகாதார அமைப்பு தனது உயர் மட்ட அதிகாரிகளை, நிறுவனம் அமைந்துள்ள இந்தியாவின் பூனே நகருக்கு அனுப்ப திட்டமிட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வாவின் கோரிக்கையின் அடிப்படையில் இந்த விசாரணை நடத்தப்பட உள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

மனித உரிமை-பாதுகாப்பு தொடர்பில் இலங்கை-ரஷ்யா இடையில் ஒப்பந்தம் இன்று கைச்சாத்து


இலங்கை, ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் ஒன்று கைசாத்திடப்பட்டுள்ளது. இலங்கையில் யுத்த சூழலையடுத்துத் தற்போது அமைதி நிலவுகிறது.

இந்தச் சூழ்நிலையில் இன்னுமொரு பயங்கரவாதம் உருவாகாமலும் மனித உரிமை பாதுகாப்பையும் நோக்கமாகக் கொண்டே இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இன்று இது தொடர்பாக இடம்பெற்ற வைபவத்தில் இலங்கை வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லகம தெரிவித்தார்.

மேற்படி வைபவம் இன்று காலை வெளிவிவகார அமைச்சு அலுவலகத்தில் இடம்பெற்றது.

இரு நாடுகளுக்குமிடையில் இடம்பெற்ற முதலாவது ஒப்பந்தம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.

கல்வி, சுகாதாரம், பொருளாதாரம், சுற்றுலாத்துறை, மனித உரிமை என்பன தொடர்பாக ரஷ்ய வெளிவிவகார அமைச்சர் செர்கி வி. லவ்ரோவ் உடன் இவ்வொப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஸ்ரீலங்கன் விமான சேவை மூடப்படமாட்டாதாம்!

எக்காரணம் கொண்டும் ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனம் மூடப்படமாட்டாதென அந்நிறுவனத்தின் தலைவர் நிசாந்த விக்கரமசிங்க தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனம் தொடர்பாகப் பாராளுமன்றத்தில் வெளியிட்ட தகவல்கள் முற்றிலும் பிழையானவை என்றும் அவர் கூறினார்.
விமான சேவைகள் அமைச்சில் நேற்றுப் பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே நிசாந்த விக்கிரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

விமான சேவைகளின் நிறைவேற்று அதிகாரி மனோஜ் குணவர்தன இங்கு கருத்துத் தெரிவிக்கையில்,
கடந்த காலத்தில் உலகின் சகல விமான சேவைகளும் பொருளாதார நெருக்கடிக்குள்ளானபோதும் ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனம் நிலையான அதன் உறுதிப்பாட்டில் தொடர்ந்து சேவைகளை முன்னெடுத்து வந்தது எனக் கூறினார்.

ஸ்ரீலங்கன் விமான சேவைகள் நிறுவனம் தற்போது இலாபத்தில் இயங்கிக்கொண்டிருப்பதால் அதனை மேலும் முன்னேற்றுவதற்கான திட்டங்கள் விரைவில் முன்னெடுக்கப்படவுள்ளன எனத் தெரிவித்த அவர்.
கடந்த மாதத்தை விட இந்த மாதம் விமான சேவைகளில் 80 சதவீத வளர்ச்சி ஏற்பட்டுள்ளது எனவும் இரண்டு வாரங்களுக்கு முன்னர் ஐரோப்பாவுக்கான விமான சேவைகள் அதிகரிக்கப்பட்டன. எனவும் கூறினார்

"அதேபோன்று மலேசியா, இந்தியா, சிங்கப்பூர், மாலைதீவு, ஆகிய நாடுகளுக்கான விமான சேவைகள் விரைவில் அதிகரிக்கப்படவுள்ளன. உள்நாட்டு யுத்தம் முடிவடைந்துள்ளதால் இலங்கைக்கு வெளிநாட்டு உல்லாசப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது. நாட்டில் அமைதி நிலவுவதால் விமான சேவைகளுக்கான கேள்விகள் அதிகரித்துள்ளன. தேவையேற்பட்டால் வாடகை விமானங்களைச் சேவைக்கு அமர்த்தவும் திட்டமிட்டுள்ளோம்" என்றும் மனோஜ் குணவர்தன மேலும் தெரிவித்தார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

பூண்டுலோயாவில் கோஷ்டி மோதல்


பூண்டுலோயாவில் இரண்டு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதலின்போது இரண்டு வாகனங்களுக்குத் தீ வைக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சந்தேகத்தின் பேரில் 9 பேர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்த மோதல் தொடர்பாகக் கைதுசெய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களும், கம்பளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதை அடுத்து எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர்.

இதேவேளை, வாகனங்களுக்குத் தீவைத்த சம்பவம் குறித்து நான்கு சந்தேகநபர்கள் இன்று காலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இந்த நான்கு சந்தேகநபர்களும் கம்பளை நீதவான் நீதிமன்றத்தில் நாளை ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.
குறித்த இரண்டு சம்பவங்கள் தொடர்பாக மேலும் சில சந்தேகநபர்களைக் கைதுசெய்வதற்காக பொலிஸார் விரிவான விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
இரண்டு தரப்பினரிடையேயான மோதல் சம்பவத்தில் காயமடைந்த ஐவர் கொத்மலை மற்றும் கம்பளை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவருவதாக பொலிஸார் கூறினர்.
தனிப்பட்ட தகராறே இந்த மோதலுக்குக் காரணமெனப் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

போலி 1000 ரூபா நாணயத் தாள்கள்

ராஜாங்கனையில் வீடொன்றினுளிருந்து போலி 1000 ரூபா நாணயத் தாள்கள் 90ஐப் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

போலி நாணயத்தாள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளும் இரகசியப் பொலிசார் இவற்றைக் கைப்பற்றினர்.
அண்மையில் கொட்டவெஹெர பகுதியில் வைத்து இவ்வாறான 30 போலி நோட்டுகளுடன் கைப்பற்றப்பட்ட சந்தேக நபரிடம் நடத்திய விசாரணைகளையடுத்தே இந்த 90 நோட்டுகளும் கைப்பற்றப்பட்டன. இந்த நாணயத் தாள்களை அச்சிடப் பயன்பட்ட அச்சு இயந்திரத்தையும் பொலிசார் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்டு நிக்கவரெட்டிய நீதவான் நீதிமன்றில் ஆஜார்படுத்தப்பட்ட நபர் எதிர்வரும் 22ந் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இந்தோனேசியாவில் கைதானவர்களில் இலங்கையர் இருந்தால் அதற்கெதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் -இலங்கை வெளிவிவகார அமைச்சர்!


இந்தோனேசிய கடற்பரப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கப்பலில் உள்ள குடியேற்றவாசிகள் மத்தியில் இலங்கையர்கள் எவராவது இருக்கின்றமை உறுதிப்படுத்தப்பட்டால் அவர்களுக்கு எதிராக இலங்கை மற்றும் இந்தோனேசிய சட்டத்திட்டங்களுக்கு அமைவாக சட்டநடவடிக்கை எடுக்கப்படும் என்று வெளிவிவகார அமைச்சர் ரோஹித்த போகொல்லாகம தெரிவித்துள்ளார். அமைச்சர் போகொல்லாகம நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மேற்கண்டவாறு குறிப்பிட்டார். ஊடகவியலாளர்கள் மாநாட்டில் அமைச்சர் போகொல்லாகம தொடர்தும் தெரிவிக்கையில் சட்டவிரோத குடியேற்றவாசிகள் தொடர்பில் நீங்கள் கேள்விப்பட்டிருப்பீர்கள் அதேபோன்ற சட்டவிரோத குடியேற்றவாசிகளை கொண்ட கப்பலொன்றே தற்போது இந்தோனேசிய கடற்பரப்பில் தடுத்து வைக்கப் பட்டுள்ளது சட்டவிரோத குடியேற்றவாசிகளினால் அவர்கள் வாழும் நாட்டிற்கு எப்போதும் அபகீர்த்தியே ஏற்படுகிறது. அந்தவகையில் இலங்கையின் பிரஜை ஒருவர் இலங்கைக்கு எதிராக அபகீர்த்தியை ஏற்படுத்துவதற்கு இடமளிக்க முடியாது. இதுதொடர்பில் நாங்கள் ஆராய்ந்து வருகிறோம் அதாவது இந்தோனேசிய கடற்பரப்பில் தடுத்து வைக்கப்பட்டுள்ள கப்பலில் இலங்கையர்கள் உள்ளனரா? என்பது தொடர்பில் ஆராய்ந்து வருகிறோம் தகவல்கள் உறுதிப்படுத்தப்படின் குறித்த இலங்கையர்களுக்கு எதிராக இலங்கை மற்றும் இந்தோனேசிய சட்டதிட்டங்களுக்கு அமைவாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இரு கனடா எம்பிக்களுக்கு இலங்கை வர விசா மறுப்பு


கனடா கன்ஸர்வேட்டிவ் கட்சியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் இலங்கை வருவதற்கு விசா வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பற்றிக் பிரௌன் மற்றும், போல் கலேன்ட்ரா ஆகியோருக்கே இந்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

இவர்கள் இருவரும் இலங்கையின் வவுனியாவில் அமைந்துள்ள தடுப்பு முகாம்களைப் பார்வையிடுவதற்காக இலங்கை வரவிருந்தனர்.

இந்நிலையில் இவர்களுக்கு விசா மறுக்கப்பட்ட விடயம் கனேடிய அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் என்ற வகையில் தாம் இடம்பெயர்ந்தோரின் நிலையைப் பார்வையிடவிருந்ததாக பற்றிக் பிரௌன் தெரிவித்துள்ளார்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இருநாட்டின் உறவைப் பலப்படுத்தும் ஜப்பனிய குழுவின் விஜயம் : அமைச்சர் ரோகித்த


இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஜப்பானிய பாராளுமன்ற குழுவை தாம் மிகவும் வரவேற்பதாகவும் இதன் மூலம் இருநாட்டின் உறவு பலமடைந்துள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் ரோகித்த போகொல்லாகம தெரிவித்தார்.

இன்று வெளிவிவகார அமைச்சின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனை தெரிவித்தார்.

புதிய ஜப்பான் அரசாங்கம் நிறுவப்பட்டதன் பின்னர் அந்நாட்டுப் பிரதிநிதிகள் முதல் தடவையாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ளதாகவும் பயங்கரவாதம் தோற்கடிக்கப்பட்டு, நாட்டில் சமாதானம் நிலவும் இக்கால கட்டத்தில் பொருளாதாரம் அபிவிருத்தி போன்றவற்றில் இலங்கை எதிர்காலத்தில் சிறந்து விளங்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இந்திய நாடாளுமன்றக் குழுவின் கிழக்கு விஜயம் இறுதி நேரத்தில் ரத்து

இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கிழக்கு மாகாணத்திற்கான விஜயம் இறுதி நேரத்தில் ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இன்று காலை கொழும்பை வந்தடைந்தவுடன் இக்குழுவினர் கிழக்கு மாகாணத்திற்கு நேரடியாக விஜயம் செய்வதற்கான ஏற்பாடுகள் அரசாங்கத்தினால் செய்யப்பட்டிருந்த போதிலும் இறுதி நேரத்தில் அது ரத்து செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்தில் யுத்தத்தின் பின்னர் மீள் குடியேற்றப்பட்ட பிரதேசமான வாகரைக்கு இவர்கள் விஜயம் செய்ய ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

மேலும் இந்திய உதவியுடன் தற்போது பொலன்னறுவைக்கும் மட்டக்களப்புக்குமிடையில் சேவையில் ஈடுபட்டுள்ள ரயில் பஸ் சேவையை பார்வையிடவும் திட்டமிட்டிருந்தனர்.

மட்டக்களப்பு மாநகர சபை மாலையில் இவர்களை வரவேற்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தனுடனான சந்திப்பொன்றும் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.

கிழக்கு மாகாணத்திற்கான இவர்களது விஜயம் ரத்து செய்யப்பட்டமை தொடர்பாக நேற்றிரவே தனக்கு அறிவிக்கப்பட்டதாக மாகாண முதலமைச்சர் சிவனேசதுரை சந்திரகாந்தன் தெரிவித்தார்.

இன்று முழுநாளும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான விஜயத்தை இவர்கள் மேற்கொள்ளவிருந்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதேவேளை, குறிப்பிட்ட நாடாளுமன்ற குழுவினருக்கும், தமிழ் தேசியக் கூட்டமைப்பினருக்குமிடையில் இன்று மாலை சந்திப்பு ஒன்று இடம்பெறவிருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேந்திரன் தெரிவித்தார்.

தற்போது கொழும்பில் தங்கியுள்ள கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் உட்பட நாடாளுமன்ற உறுப்பினர்கள் இச்சந்திப்பில் கலந்து கொள்ளவிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

நாட்டுக்கு நன்மை தரக்கூடிய வெளியுறவுக் கொள்கையே தேவை : அமைச்சர் சமரசிங்க

இலங்கைக்கு நன்மை ஏற்படக் கூடிய வகையில் நாட்டின் வெளியுறவுக் கொள்கை அமையப்பெற வேண்டுமென மனித உரிமைகள் மற்றும் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

தொழில்சார் பேரவையினால் நடத்தப்பட்ட 22 ஆவது ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

புலம்பெயர் இலங்கை மக்களுடன் அர்த்தபூர்வமான உறவுகளை வலுப்படுத்திக் கொள்ள வேண்டியது மிகவும் இன்றியமையாததென அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.

இலங்கையைச் சேர்ந்த சில புலம்பெயர் மக்கள் தமது வெளிநாட்டு உறவுகளைப் பிழையான வழியில் பயன்படுத்தி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கைக்கு எதிரான பிரசாரங்களிலும், பயங்கரவாதத்திற்கு நிதி திரட்டும் பணிகளிலும் சில புலம்பெயர் மக்கள் ஈடுபட்டு வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

செனல் 4 வீடியோக் காட்சி மற்றும் ஹிலாரி கிளிண்டனின் உரை போன்றவை இவ்வாறான செயற்பாடுகளின் வெளிப்பாடே என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டு வரும் போலிப் பிரசாரங்களுக்கு அரசாங்கம் சிறந்த முறையில் பதிலளித்து வருவதாக அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டுக்கு எதிராக செயற்படும் சக்திகளைக் கட்டுப்படுத்தும் வகையில் இலங்கையின் வெளியுறவுக் கொள்கைகளில் மாற்றம் ஏற்படுத்தப்பட வேண்டுமெனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

புத்தளத்தில் சர்வதேச சமாதான தினக் கொண்டாட்டம்


சர்வதேச சமாதான தினத்தை முன்னிட்டு புத்தள மாவட்டத்தில் 5 பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள சிங்களம், தமிழ் மொழிப் பாடசாலை மாணவர்களுக்கிடையில் பல மட்டத்திலான போட்டி நிகழ்ச்சிகள் நாளை 10ஆம், நாளைஅ மறு தினம் 11ஆம் திகதிகளில் நடைபெற உள்ளன.

இந்நிகழ்வில் வெற்றி பெறும் மாணவர்களுக்கான பரிசளிப்பு வழங்கும் விழா எதிர்வரும் 22 ஆம் திகதி புத்தளம் நகர மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வுக்கு மாவட்ட கல்வித் திணைக்களத்தின் அனுமதி பெறப்பட்டுள்ளது. இக்கொண்டாட்டத்திற்கு சமூக நம்பிக்கை நிதியம் முழு அனுசரணையும் வழங்குகிறது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

வெளிநாடுகளில் செயல்படும் விடுதலைப்புலிகள் ஏஜெண்டுகளுக்கு எதிராக வேட்டை: இலங்கைபாதுகாப்பு அமைச்சகம்


வெளிநாடுகளில் செயல்படும் விடுதலைப்புலிகள் அமைப்பின் ஏஜெண்டுகளுக்கு எதிரான வேட்டையை பல்வேறு நாடுகளின் உளவு அமைப்புகள் மேற்கொண்டுள்ளன என இலங்கை பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கடும் சண்டை நடத்தி விடுதலைப்புலிகள் அமைப்பை ஒழித்த இலங்கை, தற்போது எஞ்சியுள்ளவர்களையும் அந்த அமைப்புக்கு ஆதரவானவர்களையும் ஒழித்துக் கட்ட நடவடிக்கை எடுத்து வருகிறது
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

இலங்கையின் அனைத்துப்பகுதிகளிலும் மின்சார தடை,பணிகள் முடக்கம்

இலங்கையின் அனைத்துப்பகுதிகளிலும் மின்சார விநியோகத்தடை ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 2 மணிமுதல் இந்த தடை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த செய்தி பிரசுரிக்கும் காலை 7 மணிவரையில் மின்சார விநியோகம் தடைப்பட்டிருந்தது, இதற்கு பிரதான காரணம் களனிதிஸ்ஸ மின்சார உற்பத்தி மையத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப பிரச்சினையாகும் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

இந்தநிலையில் மின்சார விநியோகம் வழமைக்கு திரும்ப இன்னும் இரண்டு மணித்தியாலங்களாவது செல்லும் என மின்சாரசபை அறிவித்துள்ளது.

இதேவேளை மஸ்கெலிய விமலசுரெந்திர மின்னுற்பத்தி விநியோக சேவை நிலையத்தின் தகவலின்படி, அங்கிருந்து மின்சார விநியோகத்தை மேற்கொள்ளும் பிரதான சுவிட்சுகள் செயலிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இதன் காரணமாக பெருமளவான பணிகள் முடங்கிப்போயுள்ளன.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates