jkr
แสดงบทความที่มีป้ายกำกับ பாகிஸ்தான் แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ பாகிஸ்தான் แสดงบทความทั้งหมด

அமெ. ஏவுகணையிலிருந்து தப்பினார் தலிபான் தலைவர்


அமெரிக்காவின் ஏவுகணைத் தாக்குதலில் பாகிஸ்தானின் தலிபான் தலைவர் ஹகிமுல்லா மெசூத் தப்பி விட்டதாக பாகிஸ்தானிலிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த தாக்குதலில் குறைந்தது தீவிரவாத சந்தேக நபர்கள் 12 பேர் கொல்லப்பட்டனர். ஆப்கானை ஒட்டிய பாகிஸ்தானின் பழங்குடியினர் பிரதேசமான வடக்கு வசிரிஸ்தானில் இருக்கும் பயிற்சி முகாம் என்று கூறப்படும் இடத்தின் மீது இந்த ஏவுகணை தாக்குதல் குறிவைத்து நடத்தப்பட்டது.

தாக்குதல் நடப்பதற்கு சற்று முன்னதாக தாக்கப்பட்ட இடத்திலிருந்து தங்கள் தலைவர் வேறு இடத்திற்கு சென்றதாகவும், அவர் தற்போது பாதுகாப்பாக இருப்பதாகவும் பாகிஸ்தான் தலிபன் அமைப்பின் சார்பில் பேசவல்லவர் தெரிவித்திருக்கிறார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

பாகிஸ்தானில் மீண்டும் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்: அறுவர் பலி (


பாகிஸ்தான் பெஷாவர் நகரில் இன்று திங்கட்கிழமை மேற்கொள்ளப்பட்ட தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட அறுவர் உயிரிழந்துள்ளதாகவும் ஆகக் குறைந்தது 36 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அந்நாட்டுத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முச்சக்கர வண்டியில் வந்த தற்கொலை குண்டுதாரியே குண்டை வெடிக்கவைத்தாக சம்பவத்தை நேரில் கண்டோர் சாட்சியமளித்துள்ளனர். சுமார் 6 கிலோகிராம் எடையுள்ள வெடிபொருட்களை வெடிக்கவைத்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

பாகிஸ்தானின் இராணுவத் தலைமையகம் அமைந்துள்ள ராவல்பிண்டி நகரில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் 36 பேர் கொல்லப்பட்டு 75 பேர் காயமடைந்தனர். உயிரிழந்தவர்களில் 17 பேர் சிறுவர்களாவர். இந்தத் தாக்குதலுக்கு தலீபான் இயக்கம் உரிமைகோரியிருந்தமை குறிப்பிடத்தக்கது
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

பெஷாவர் நீதிமன்ற வளாகத்தில் குண்டுவெடிப்பு : 20 பலி


பாகிஸ்தானில் இன்றைய ( 19 ஆம் திகதி ) குண்டு வெடிப்பில் 20 பேர் பலியாயினர். 45 க்கும் மேற்பட்டோர் காயமுற்றனர். தொடர்ந்து நடந்து வரும் குண்டுவெடிப்புக்கு முற்றுப்புள்ளி வராதா என இந்நாட்டு மக்கள் பரிதவித்து வருகின்றனர்.

இன்று வழக்கம்போல் பெஷாவர் மக்கள் தங்கள் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். கைபர் வீதியில் உள்ள நீதிமன்ற வளாகம் அருகே கார் குண்டு பலத்த சத்தத்துடன் வெடித்தது. இதில் பலரது உடல்கள் வீதியில் சிதறின. 20 பேர் பலியாகியுள்ளனர். 45 க்கும் மேற்பட்டோர் படுகாயமுற்றனர்.

பலர் கவலைக்கிடமான நிலையில் உள்ளனர். சம்பவம் நடந்த பகுதி பாதுகாப்பு படையினரின் வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. குண்டு வெடிப்பில் நொறுங்கிப்போன கட்டட இடிபாடுகளில் பலர் சிக்கியுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

குண்டு வெடிப்பு நடக்காத நாள் எந்நாளோ என்ற நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டுள்ளது. கடந்த ஒரு மாத காலமாக இங்கு குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்கதையாகி விட்டது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

பாக். விமானப்படைத் தளபதி - ஜனாதிபதி கண்டியில் நேற்று சந்திப்பு


பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி ஏயார் மார்ஷல் ராவோ கமார் சுலேமான் நேற்றுக் காலை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை, கண்டி ஜனாதிபதி இல்லத்தில் சந்தித்துக் கலந்துரையாடினார்.

இவர் 7 நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார்.

இலங்கைக் கிரிக்கெட் அணி லாகூரில் தாக்கப்பட்ட போது பாகிஸ்தான் விமானப்படை ஆற்றிய சேவை குறித்து ஜனாதிபதி அவருக்குத் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

அதேவேளை நேற்று மாலை இலங்கை விமானப்படைத் தலைமை தளபதி ஏயார் மார்ஷல் ரொஹா ன் குணதிலக்கவை சந்தித்தார். இச்சந்திப்பு விமானப்படைத் தலைமையகத்தில் இடம்பெற்றது. இதன்போது, ஏனைய விமானப்படை அதிகாரிகளையும் பாகிஸ்தான் விமானப்படைத் தளபதி சந்தித்து உரையாற்றினார்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

பாகிஸ்தானில் இருமுறை நிலநடுக்கம் : சேத விவரம் குறித்துத் தகவல் இல்லை


கடந்த சில நாட்களுக்கு முன்பு பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் உள்ள இந்துகுஷ் மலைப்பகுதிகளில் நில நடுக்கம் ஏற்பட்டது. இதனால் மக்கள் பீதி அடைந்தனர்.

இந்த பீதி அடங்குவதற்குள் இப்பகுதியில் நேற்று நள்ளிரவு 12.00 மணியளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பாகிஸ்தானின் பெரும்பாலான நகரங்கள் குலுங்கின.

பாகிஸ்தான் தலைநகரமான இஸ்லாமாபாத், லாகூர், பெஷாவர், ராவல் பிண்டி, சாக்லால், சுவாத், உள்ளிட்ட நகரங்களில் நில அதிர்வு உணரப்பட்டது.

சுமார் 30 வினாடிகள் தொடர்ந்து பூமி குலுங்கியது. இதனால் தூங்கி கொண்டிருந்த மக்கள் பீதி அடைந்தனர். பயந்து வீட்டை விட்டு வெளியேறி வீதிக்கு ஓடிவந்தனர்.

பயத்தில் உறைந்த மக்கள் தூங்காமல் வீதிகளில் வெட்ட வெளியிலேயே தங்கியிருந்தனர். நில நடுக்கம் ஏற்படுத்திய சேத விபரங்கள், மரணங்கள் குறித்த தகவல் உடனடியாகத் தெரிய வரவில்லை.

நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 6 ஆக பதிவாகி இருந்தது. பாகிஸ்தானின் சித்ரால் நகரில் பூமிக்கு அடியில் 202 கி.மீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்கா புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பாகிஸ்தான் மட்டுமின்றி ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள முஷாபராபாத்திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. அங்கும் மக்கள் பீதி அடைந்தனர்.

காஷ்மீர் மற்றும் ஸ்ரீநகரிலும் நள்ளிரவு 11.20 மணியளவில் நிலநடுக்கம் உணரப்பட்டது. இதனால் பீதி அடைந்த மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடினர்.

24 மணி நேரத்தில் மற்றுமொரு நில நடுக்கம் இன்று நண்பகல் 12.45 மணியளவில் உணரப்பட்டது. எனினும் இது குறித்த சேத விபரங்களும் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஹிலாரி வருகை: பாக்.கில் குண்டு வெடிப்பு-80 பேர் பலி


அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளின்டன் இஸ்லாமாபாத் வந்துள்ள நிலையி்ல் பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் கார் வெடிகுண்டு வெடித்ததில் 80 பேர் பலியாயினர். மேலும் நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்துள்ளனர்.

பாகிஸ்தான்-ஆப்கானிஸ்தான் எல்லையில் உள்ள மலைப் பகுதியான தெற்கு வசிர்ஸ்தானில் தலிபான் தீவிரவாதிகளை பாகிஸ்தான் ராணுவமும் அமெரிக்க போர் விமானங்களும் தாக்கி வருகின்றனர்.

இதையடுத்து தலிபான்கள் பெஷாவர் உள்ளிட்ட பாகிஸ்தானின் பிற பகுதிகளில் தற்கொலைப் படைத் தாக்குதலை நடத்த ஆரம்பித்துள்ளனர். இன்று நடந்த தாக்குதலும் தற்கொலைத் தாக்குதலாகவே கருதப்படுகிறது.

பெஷாவர் நகரில் ஒரு மார்க்கெட் பகுதியில் இன்று காலை இந்த கார் குண்டு வெடித்துச் சிதறியதில் 80 பேர் அந்த இடத்திலேயே பலியாயினர். நூற்றுக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். பல கடைகளும் இடிந்து விழுந்தன.

இந்த இடிபாடுகளில் நூற்றுக்கணக்கானவர்கள் சிக்கிக் கிடக்கின்றனர். ஒரே மாதத்தில் பெஷாவரில் நடந்துள்ள 3வது வெடிகுண்டு தாக்குதல் இது என்பது குறிப்பிடத்தக்கது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

பாகிஸ்தானில் இன்று மீண்டும் குண்டுத் தாக்குதல் : 11 பேர் பலி

பாகிஸ்தானின் பெஷாவர் நகரில் பொலிஸ் நிலையத்துக்கு வெளியே இன்று காலை கார் குண்டு வெடித்ததில் 11 பேர் கொல்லப்பட்டனர்.

குற்றவாளிகள் மற்றும் பயங்கரவாதிகளை விசாரிப்பதற்காக அமைக்கப்பட்ட கட்டடத்தின் மீது இன்று கார் குண்டு மூலம் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 11 பேர் உயிரிழந்தனர். 13 பேர் காயமடைந்தனர். தாக்குதலில் அருகிலிருந்த மசூதியும் சேதமடைந்தது.

நேற்று லாகூரில் தற்கொலைப் படையினர் உள்ளிட்டோருடன் புகுந்த தீவிரவாதிகள் 3 இடங்களில் நடத்திய வெறித்தனமான தாக்குதலில் 40க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட நிலையில் இன்று பெஷாவர் தாக்குதல் நடந்துள்ளது.

இத்தாக்குதலுக்கு எவரும் இதுவரை பொறுப்பேற்கவில்லை என்றாலும் தலிபான்கள் தான் இந்தத் தாக்குதலை நடத்தியிருக்க வேண்டும் என பாகி்ஸ்தான் கருதுகிறது.

அமெரிக்காவின் நெருக்குதலால் ஆப்கானிஸ்தான் எல்லைப் பகுதியில் தலிபான்களுக்கு எதிராக பாகிஸ்தான் இராணுவம் கடும் தாக்குதலுக்குத் தயாராகி வரும் நிலையில் இத்தாக்குதல்கள் நடந்து வருகின்றன.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் இன்று மீண்டும் தாக்குதல்: சிறுவர் உள்பட 24 பேர் பலி


பாகிஸ்தானில் தலிபான் தீவிரவாதிகள் ஆதிக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அவர்களை ஒடுக்க பாகிஸ்தான் இராணுவத் தாக்குதலை நடத்தி வருகிறது.

இதற்குப் பழிவாங்கும் வகையில் தலிபான் தீவிரவாதிகள் பாகிஸ்தானில் அடிக்கடி வெடிகுண்டு தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். கடந்த சனிக்கிழமை ராவல் பிண்டியில் உள்ள ராணுவ தலைமை அலுவலகத்தில் தலிபான் தீவிரவாதிகள் புகுந்து அதிரடியாக தாக்கினார்கள். இதில் 21 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த பரபரப்பு அடங்குவதற்குள் இன்று மீண்டும் பாரிய தாக்குதலை நடத்தி உள்ளனர். இந்தத் தாக்குதல் பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் ஒன்றான லாகூரில் நடந்தது.

லாகூர் இந்தியாவை ஒட்டியுள்ள நகரமாகும். இன்று காலை 10 க்கும் மேற்பட்ட தலிபான் தீவிரவாதிகள் இந்த நகருக்குள் நுழைந்தனர்.

3 இடங்களில் தாக்குதல்

பயங்கர ஆயுதங்களுடன் வந்த அவர்கள் 3 பிரிவுகளாகப் பிரிந்து சென்று தாக்குதலைத் தொடங்கினார்கள்.

பாகிஸ்தானின் பொலிஸ் உளவுத்துறையான 'பெடரல் இன்வெஸ்டிகேஷன் ஏஜென்சி' அலுவலகம் டெம்பிள் வீதியில் உள்ளது. இங்கு ஒரு பிரிவு தீவிரவாதிகள் நுழைந்தனர்.

இன்னொரு பிரிவினர் பேடியன் வீதியிலுள்ள பொலிஸ் பயிற்சி மையத்திலும் மற்றொரு பிரிவினர் லாகூர் புறநகர் பகுதியான மனாவனில் உள்ள மற்றுமொரு பொலிஸ் பயிற்சி மையத்திலும் நுழைந்தனர்.

3 இடத்திலும் ஒரே நேரத்தில் நுழைந்த தீவிரவாதிகள் அதிரடியாகத் தாக்கினர். அலுவலக வாசலில் இருந்த பாதுகாப்பு படையினர் மீது வெடிகுண்டுகளை வீசி விட்டு உள் பகுதிக்குள் ஊடுருவினர். சக்தி வாய்ந்த வெடிகுண்டுகளையும் வெடிக்க செய்தனர்.

உளவுத்துறை அலுவலகத்தில் நுழைந்த தீவிரவாதிகள் கண்ணில் தெரிந்தவர்களைச் சுட்டுக்கொன்றனர். அங்கு நின்றிருந்த பாடசாலை சிறார்கள் 2 பேரையும் ஈவு இரக்கமின்றி சுட்டு வீழ்த்தினர்.

அங்குள்ள ஒரு அறைக்குள் புகுந்த தீவிரவாதிகள் உளவுத்துறை அதிகாரிகள் 2 பேரைச் சுட்டுக்கொன்றனர்.

உடனே அந்த இடத்துக்கு அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்களுக்கும்-தீவிரவாதிகளுக்கும் கடும் சமர் நடந்தது. அதில் ஒரு தீவிரவாதியை அதிரடிப்படையினர் சுட்டுக்கொன்றனர். ஒரு மணி நேரம் மோதலுக்குப் பின் உளவுத்துறை அலுவலகம் பொலிஸ் கட்டுப்பாட்டுக்கு வந்தது.

அங்கு நடந்த தாக்குதலில் மொத்தம் 7 பேர் கொல்லப்பட்டனர். அதில் 3 பேர் உளவுத்துறை அதிகாரிகள், ஒருவர் தீவிரவாதி, 2 பேர் பாடசாலைச் சிறார்கள்.

பேடியன் வீதியிலுள்ள பொலிஸ் பயிற்சி மையத்தில் 3 தீவிரவாதிகள் நுழைந்தனர். அங்கு முதலில் சக்தி வாய்ந்த குண்டு ஒன்றை வெடிக்கச் செய்தனர். இதனால் ஏற்பட்ட பரபரப்பைப் பயன்படுத்திக் கொண்ட தீவிரவாதிகள் உள் பகுதிக்குள் நுழைந்தனர்.

அங்கு பயிற்சியில் ஈடுபட்டிருந்த பொலிசார் சிலரைப் பணய கைதிகளாகப் பிடித்து கொண்டனர். அங்கும் அதிரடிப்படையினர் தீவிரவாதிகளைச் சுற்றி வளைத்து தாக்குதல் நடத்துகின்றனர். அடிக்கடி குண்டு வெடிப்புச் சத்தங்கள் கேட்டப்படி இருக்கின்றன. இங்கு நடந்த தாக்குதலில் 3 பேர் பலியானார்கள்.

மனாபனிலுள்ள பொலிஸ் பயிற்சி மையத்திலும் தீவிரவாதிகள் பயங்கர தாக்குதல்களை நடத்தினர். இங்கு ஒருவர் மட்டும் பலியாகி இருப்பதாக இது வரை கிடைத்த தகவல் தெரிவிக்கிறது.

3 இடங்களிலும் நடந்த தாக்குதலில் மொத்தம் 11 பேர் பலியாகி இருக்கிறார்கள். 40 பேர் காயம் அடைந்துள்ளனர்.

வடமேற்குப் பகுதியில்

லாகூரில் 3 இடங்களில் தாக்குதல் நடந்த அதே நேரத்தில் பாகிஸ்தானில் வடமேற்கு பகுதியில் உள்ள கோகாத் நகரில் தலிபான் தற்கொலைப்படை தீவிரவாதிகள் பொலிஸ் நிலையத்தில் கார் குண்டு தாக்குதல் நடத்தினர். இதில் பொலிசார், பள்ளி குழந்தைகள் உள்பட 10 பேர் பலியானார்கள். 20 பேர் காயம் அடைந்தனர்.

3 இடங்களிலும் நடந்த தாக்குதலில் மொத்தம் 21 பேர் பலியாகி உள்ளனர். 50-க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

ஒரே நாளில் 3 இடங்களில் தாக்குதல் நடந்ததால் பாகிஸ்தான் நிலைகுலைந்து போய் உள்ளது. மக்கள் பீதியில் உள்ளனர்.

இன்று தாக்குதல் நடந்த உளவுத்துறை அலுவலகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதமும் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 24 பேர் பலியானார்கள்.

இதே போன்று இன்று தாக்குதல் நடந்த மனாவன் பொலிஸ் பயிற்சி மையத்தில் இந்த ஆண்டு மார்ச் மாதம் தாக்குதல் நடந்தது. இதில் 8 பொலிஸார் உயிரிழந்தனர்.

இரு இடத்தையும் மீண்டும் குறி வைத்து இன்று தாக்கி இருக்கின்றனர்.

இன்றைய தாக்குதலில் பெண் தீவிரவாதி ஒருவரும் ஈடுபட்டதாக பாகிஸ்தான் பொலிஸார் தெரிவித்தனர்.

10-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் நுழைந்த போதிலும் இதுவரை 4 தீவிரவாதிகளை மட்டுமே பொலிஸார் சுட்டுக்கொன்றுள்ளனர். மற்றவர்கள் அங்கேயே பதுங்கி இருக்க வேண்டும் எனக் கருதி தேடுதல் வேட்டை நடந்து வருகிறது. தாக்குதல் நடந்த 3 இடங்களையும் அதிரடிப்படையினர் சுற்றி நிற்கின்றனர். இந்த பகுதிகள் முழுவதும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

பாகிஸ்தானுக்கு போர் விமானங்கள் வழங்க அமெரிக்கா தீர்மானம்


பாகிஸ்தான் இராணுவத்துக்கு எப்-16 ரக போர் விமானங்கள் வழங்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதாக அந்நாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.

54 போர் விமானங்கள் வழங்கப்பட உள்ளன. அதற்காக முதல் கட்டமாக 18 விமானங்கள் தயாரிக்கப்படுகின்றன. அதற்கான தயாரிப்பு பணி இன்று ஆரம்பமானது.

இதற்கான விழா வாஷிங்டனில் நடந்தது. இந்த விழாவில் பாகிஸ்தான் விமானப்படையின் தலைமை அதிகாரி மார்ஷல் ராவ் உமர் சுலைமான், அமெரிக்காவுக்கான பாகிஸ்தான் தூதர் உசேன் ஜப்பானி ஆகியோர் கலந்து கொண்டனர்.

18 போர் விமானங்களையும் அடுத்த ஆண்டு (2010) டிசம்பர் மாதத்துக்குள் பாகிஸ்தான் இராணுவத்திடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

பாகிஸ்தான் ராணுவ தலைமையகம் மீது தீவிரவாதிகள் தாக்குதல்


பாகிஸ்தானின் ராவல்பிண்டியில் உள்ள ராணுவ தலைமையகத்தின் மீது தீவிரவாதிகள் இன்று திடீர் தாக்குதல் நடத்தினர். ராணுவத் தளபதி பர்வேஸ் கயானியின் குடியிருப்புக்கு அருகிலும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

தற்கொலைப் படையைச் சேர்ந்த தீவிரவாதிகள் பலர் இன்று பகல் 11.45 மணியளவில் ராணுவ தலைமையத்தின் மீது அதிரடியாக துப்பாக்கிச்சூடு நடத்தியதுடன், கையெறி குண்டுகளையும் வீசியதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையடுத்து ராணுவ வீரர்களும் பதில் தாக்குதலில் ஈடுபட்டதாகவும், இதில் 2 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதுடன், 2 பேர் கைது செய்யப்பட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ராணுவத் தலைமையகத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சமயத்தில் ராணுவ உயரதிகாரிகள் பலர் அங்கு இருந்ததாகவும், தலையகத்தில் இருந்து வெளியே வரமுடியாத நிலையில் அவர்கள் சிக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates