jkr
แสดงบทความที่มีป้ายกำกับ யாழ் แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ யாழ் แสดงบทความทั้งหมด

யாழில் உண்மையான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ற பெயரில் துண்டுப்பிரசுரம் விநியோகம்


யாழ்க் குடா நாடு உட்பட பல பகுதிகளில் "உண்மையான தமிழ்த் தேசிய கூட்டமைப்பு" என்ற பெயரில் இன்று துண்டுப்பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

ஜனாதிபதித் தேர்தலில் கொலைசெய்தவரும் கொலை செய்யத் தூண்டியவரும் போட்டியிடுவதாகவும் தேர்தலைப் புறக்கணித்துவிட்டு விடுதலைப் போராட்டத்துக்கு பங்களிப்பு வழங்குமாறும் அந்த துண்டுப் பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கொக்குவில் நந்தாவில் அம்மன் கோயில் கேணியில் குளிக்கசென்ற இரு பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி மரணம்!


கொக்குவில், நந்தாவில், அம்மன் கோயில் கேணியில் குளிக்கச் சென்ற இரு பாடசாலை மாணவர்கள் நேற்று முற்பகல் 11 மணிக்கு நீரில் மூழ்கி மரணமான பரிதாபகர சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்தச் சம்பவத்தில் கோண்டாவில் இந்து மகாவித்தியாலய மாணவனான ரஞ்சன் மயூரன் (வயது 15 கோண்டாவில் கிழக்கு) சடலமாக கேணியிலிருந்து மீட்கப்பட்டார்.

மூச்சுத் திணறிய நிலையில் மீட்கப் பட்ட கோண்டாவில் பரஞ்சோதி வித்தியாலய மாணவனான ரவி ரதிமதன் (வயது 18கோண்டாவில் கிழக்கு)ஆஸ்பத்திரிக்கு எடுத்துச்செல்லும் வழியில் மரணமானார்.

கொக்குவில் நந்தாவில் கற்புலத்து மனோன்மணி அம்மன் ஆலய தீர்த்தக் கேணியில் நீராடுவதற்காக இளைஞர்கள் மூவர் சென்றிருந்தனர். அவர்களில் இரு வர் நீரினுள் மூழ்குவதை வெளியே இருந்து அவதானித்த மற்றைய இளைஞர் ஓடிச் சென்று அப்பகுதி மக்களிடம் தெரிவித்துள்ளார். அப்பகுதிக்கு அவர்கள் விரைந்து வந்த போது ஒருவர் நீரினுல் மூழ்கி இறந்த விட்டார். மற்றவர் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார். அந்த இளைஞரை மீட்டு யாழ்.ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் அவரும் உயிரிழந்து விட்டார்.

இதேவேளை, இந்தச் சம்பவம் குறித்து வேறு விதமான தகவல்களும் தெரிவிக்கப்பட்டன. அவை குறித்து உறுதிப்படுத்தப் படவில்லை.எனினும், மரணமடைந்த இளைஞர்களுடன் கேணிக்குள் சென்றி ருந்த மற்றைய இளைஞர் கூறியிருப் பதாவது: தானும், உயிரிழந்தவர்களும் கேணியின் படியில் இருந்த வேளையில் அங்கு வந்த இருவர் திடீரென தாக்குதல் நடத்தினர் என்றும் பின்னர் அவர்கள், அவர்கள் இருவரையும் கேணிக்குள் தள்ளிவிழுத்தினர் என்றும் அவவேளை தான் அங்கிருந்து ஒடித் தப்பிவிட்டார் என்றும் கூறியுள்ளார். இச்சம்பவம் குறித்து கோப்பாய் பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற் கொண்டு வருகின்றனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

யாழ்.- வவுனியா மினிபஸ் சேவை விரைவில் ஆரம்பம்


யாழ்ப்பாணத்துக்கும் வவுனியாவுக்கும் இடையிலான மினிபஸ் சேவை நடத்துவதற்கான அனுமதியை பாதுகாப்பு அமைச்சு வழங்கியுள்ளதாகவும் விரைவில் இச்சேவை ஆரம்பமாகும் எனவும் தனியார் சிற்றூர்திச் சேவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அச்சங்கம் விடுத்துள்ள அறிக்கையில்,

"ஏ-9 வீதியினூடாக தனியார் சிற்றூர்திகளும் சேவையில் ஈடுபட அனுமதிக்குமாறு எமது சங்கம் யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரின் ஊடாக பாதுகாப்பு அமைச்சுக்கு கோரிக்கை ஒன்றை விடுத்திருந்தது.

இந்தக் கோரிக்கைக்குப் பாதுகாப்பு அமைச்சு அனுமதி வழங்கியுள்ளதாக அரச அதிபர் தெரிவித்தார். இதற்காகத் தரம் வாய்ந்த 50 பஸ்களின் விபரங்களை அரசாங்க அதிபரிடம் வழங்கியுள்ளோம். அவற்றில் 10 பஸ்கள் தெரிவு செய்யப்பட்டு அவை நேற்று பரீட்சித்துப் பார்க்கப்பட்டன" எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

குறிப்பிட்ட 10 பஸ்களும் சேவையில் ஈடுபடும் திகதி அரச அதிபரால் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

மிருசுவில் நலன்புரி நிலைய சிறுவர்களுக்கு லயன்ஸ் கழகம் உதவி


லயன்ஸ் கழகத்தின் யாழ்.மனிப்பாய் பிரிவு, இடம்பெயர்ந்து யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்டோருக்கு நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளது.

மிருசுவில் நலன்புரி நிலையத்திலுள்ள ஐந்து வயதுக்குக் குறைந்த சிறுவர்களுக்குத் தேவையான ஓடிக்ளோன், கிரைப்வோட்டர், சிறுவர்களுக்கான சவர்க்காரம், பிஸ்கட் வகைகள், சமபோஷா, மற்றும் பால் மா போன்றவற்றை லயன்ஸ் கழகம் வழங்கியுள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

வவுனியாவிலிருந்து யாழ். வந்தோர் தொடர்மழையால் பெரும் பாதிப்பு


வவுனியா இடைத்தங்கல் முகாம்களில் இருந்து யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்ட மக்கள் தற்போது பெய்துவரும் தொடர்மழையால் பெரும் அசௌகரியங்களுக்கு முகம்கொடுத்து வருவதாக எமது பிராந்தியச் செய்தியாளர் தெரிவித்தார்.

நேற்று இரவு வவுனியா இடைத்தங்கல் முகாமிலிருந்து 3150 இற்கும் மேற்பட்டவர்கள் பஸ் மூலம் யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்டு துரையப்பா விளையாட்டரங்கில் இறக்கி விடப்பட்டனர்.

அடைமழையின் மத்தியில் இரண்டு கட்டங்களாக அழைத்து வரப்பட்டவர்களில் ஒரு பகுதியினர் நேற்று மாலை துரையப்பா விளையாட்டரங்கிற்கு வந்து சேர்ந்தனர். இவர்களுக்கான பதிவுகள் மற்றும் பணக் கொடுப்பனவுகள் செயலக அலுவலர்கள் மற்றும் நல்லூர் சண்டிலிப்பாய உடுவில் பிரதேச செயலக ஊழியர்கள் மேற்கொண்டார்கள்.

சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்த மக்களுக்கான மீள் குடியேற்றக் கொடுப்பனவுகளை வழங்கினார். யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் க.கணேஸ் உட்பட மற்றும் அலுவலர்களும் இதில் கலந்து கொண்டார்கள்.

இரண்டாம் கட்டமாக மேலும் 1500 இற்கும் மேற்பட்டவர்கள் இரவு பத்து மணியளவில் அழைத்து வரப்பட்டனர். நள்ளிரவு தொடர்ந்து மழை பெய்து கொண்டிருந்தது. இதனால் பொதுமக்கள் கொண்டுவந்த உலர்உணவுப் பொருட்களான அரிசி, மா மற்றும் கருவாடு போன்றவை மழையில் நனைந்துவிட்டதாக பொது மக்கள் கவலையுடன் தெரிவித்தனர்.

நள்ளிரவு வேளை அழைத்து வரப்பட்ட மக்கள் மழை காரணமாக இருக்கக் கூட இடமில்லாது பெரும் துன்பங்களுக்கு உள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

நாளை மறுதினம் பாடசாலை சீருடை விநியோகம் : முதலில் யாழ்குடாவுக்கு அனுப்ப நடவடிக்கை


அரசாங்க பாடசாலைகளில் கல்வி பயிலும் மாணவர்களுக்குரிய 2010 ஆம் ஆண்டுக்கான இலவச பாடசாலை சீருடை விநியோகம் நாளை மறுதினம் (06ஆம் திகதி) முதல் ஆரம்பமாகின்றது. இதன் முதல் தொகுதி ஏ-9 வீதியூடாக யாழ்ப்பாணத்துக்கு அனுப்பப்படவுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:"கடந்த மாதங்களில் நாடு முழுவதும் உள்ள ஏறக்குறைய நாற்பது லட்சம் மாணவர்களுக்கு ரூபா.3000 மில்லியன் செலவில் இலவச பாடநூல்களை விநியோகிக்கக் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்திருந்தது.

அதனைத் தொடர்ந்து தற்போது நாற்பது லட்சம் மாணவர்களுக்கு ரூபா 1200 மில்லியன் செலவில் நான்கு வகையான, 65 லட்சம் சீருடைகளை விநியோகிக்கக் கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. நாடு முழுவதிலுள்ள ஒன்பது மாகாணங்களில் அமைந்துள்ள 92 வலய கல்வி காரியாலயங்களுக்கு சீருடைகள் அனுப்பி வைக்கப்படவுள்ளன.

நாளைமறுதினம் 06 ஆம் திகதி 7 லட்சம் ரூபா போக்குவரத்து செலவில், இரண்டு லட்சம் சீருடைகள் அடங்கிய முதல் தொகுதி ஏ-9 வீதியூடாக யாழ். வலயக் கல்வி காரியாலயத்துக்கு வைபவ ரீதியாக அனுப்பி வைக்கப்படவுள்ளன. இந்நிகழ்வு கல்வி அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த தலைமையில் கல்வி அமைச்சில் இடம்பெறவுள்ளது.

சீருடைகளுக்காகப் பயன்படுத்தப்பட்டுள்ள மொத்த துணியின் அளவு பத்து மில்லியன் மீட்டர் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கையிலுள்ள அரசாங்க பாடசாலைகளில் கல்வி கற்கும் மாணவ, மாணவிகளுக்கு பாடப்புத்தகங்களை உத்தியோகபூர்வமாக விநியோகிக்கும் ஆரம்ப வைபவத்தை இம்முறை யாழ்ப்பாணம் வேம்படி மகா வித்தியாலயத்தில் டிசம்பர் 07 ஆம் திகதி நடத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அன்றைய தினத்திலேயே சீருடைகளும் மாணவர்களுக்கு உத்தியோகபூர்வமாக கையளிக்கப்படவுள்ளன." இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

யாழ்.பாஷையூர் கடற்தொழிலாளர்கள் கடலட்டை பிடிக்கச் சென்ற சமயம் அவர்களின் கைகளில் வலம்புரிச் சங்கு சிக்கியுள்ளது.


கடந்த வாரம் குடாக்கடல் நீரேரியிலுள்ள கல்முனைப் பிரதேசத்தில் கடலட்டை பிடிக்கச் சென்ற சமயம் வலம்புரிச் சங்கு கிடைத்துள்ளது. இத்தகைய வலம்புரிச் சங்குகள் ஆழ்கடல் பிரதேசங்களிலேயே இருப்பதாகத் தெரிவிக்கப்பட்ட போதிலும் அனைவரும் ஆச்சரியப்படும் விதத்தில் குடாக்கடல் நீர் ஏரியில் வலம்புரிச் சங்கு கிடைத்துள்ளது. பாஷையூர் கடற்தொழிலாளர்களிடம் அகப்பட்ட வலம்புரிச் சங்கு 21 லட்சம் ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. கடற்தொழிலிற்குச் சென்ற 07 கடற்தொழிலாளர்களும் தலா 3 லட்சம் ரூபா வீதம் அத்தொகையைப் பங்கிட்டுக் கொண்டதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஏ9 வீதியூடாக யாழ்ப்பாணத்திற்கான அஞ்சல் சேவை ஆரம்பம்


யாழ் குடாநாட்டிற்கான தரைவழி அஞ்சல் சேவை வியாழக்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக வடமாகாண பிரதி அஞ்சல்மா அதிபர் வீ.குமரகுரு தெரிவித்துள்ளார்.

யுத்தம் முடிவடைந்ததையடுத்து மூடப்பட்டிருந்த ஏ9 வீதி திறக்கப்பட்டு போக்குவரத்துக்கள் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் கடந்த 2006 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தின் பின்னர் யாழ்ப்பாணத்திற்கான தரைவழி அஞ்சல் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு 56 தபால் பொதிகளும், யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கான 42 தபால் பொதிகள் வவுனியாவுக்கும் இன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக வடமாகாண பிரதி அஞ்சல்மா அதிபர் வீ.குமரகுரு தெரிவித்தார்.

வவுனியாவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ள கொழும்புக்கான யாழ் அஞ்கல் பொதிகள் அங்கிருந்து ரயில் மூலமாக கொழும்புக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இருந்து ரயில் மூலமாக வவுனியாவுக்கு வந்தடையும் யாழ்ப்பாணத்திற்கான தபால் பொதிகள், வவுனியாவில் இருந்து யாழ்ப்பாணத்தி்ற்கு ஏ9 வீதிவழியாக பஸ் வண்டிகளில் அனுப்பி வைக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த சேவை தினசரி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏ9 வீதி மூடப்பட்டிருந்த வேளை, யாழ்ப்பாணத்திற்கான தபால் பொதிகள் கொழும்பில் இருந்து திருகோணமலைக்குக் கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து கிறீன் ஓசியன் கப்பல் மூலமாகவே எடுத்துச் செல்லப்பட்டன. இந்த சேவையை கிறீன் ஓசியன் கப்பல் இலவச சேவையாக கட்டணமின்றி செய்ததாக வடமாகாண பிரதி அஞ்சல்மா அதிபர் குமரகுரு கூறினார்.

கப்பல் மூலமாக யாழ்ப்பாணத்திற்கு தபால்கள் அனுப்பி வைக்கப்பட்டபோது, கொழும்புக்கும் யாழ்ப்பாணத்திற்கும் இடையில் கடிதங்கள் சென்றடைவதற்கு 5 தொடக்கம் 7 தினங்கள் வரையில் எடுத்தது என்பதும், இப்போது இந்தத் தாமதம் நீங்கி 48 மணித்தியாலங்களுக்கிடையில் கடிதங்கள் சென்றடையும் வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது,
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

கடந்தகால யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை அமைதியான சூழலில் பார்ப்பதனையிட்டு மகிழ்ச்சியடைவதாக இந்தியப் பாராளுமன்ற உறுப்பினர் ரி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

எமது தலைவர் கலைஞர் கருணாநிதியினது அயராத முயற்சியினால் தமிழ் மக்கள் மீது நல்லெண்ணம் கொண்டுள்ள பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தி ஆகியோரின் பணிப்புரைக்கமையவே இந்த விஐயத்தை தாம் மேற்கொண்டதாக யாழ்.பொது நூலகத்தின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற கூட்டத்தில் உரைநிகழ்த்திய இந்தியப் பாராளுமன்றத் தூதுக் குழவின் தலைவர் ரீ.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து உரையாற்றிய அவர் கடந்த 30 ஆண்டு கால யுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களை அமைதியான சூழலில் பார்ப்பதனையிட்டு மிகுந்த மகிழ்ச்சியடைகின்றோம். எமது தலைவர் கலைஞர் கருணாநிதி இலங்கைத் தமிழர் பிரச்சினையில் கூடிய கவனம் செலுத்தி வருகின்றார். கலைஞர் கருணாநிதி மேற்கொண்ட முயற்சியினாலேயே எமது தூதுக் குழு இங்கு வருகைதர முடிந்துள்ளது. இங்குள்ள இடம்பெயர்ந்த மக்களின் நிவாரண கிராமங்களையும் நேரில் சென்று பார்வையிடவுள்ளோம். இவ்வாறு இந்தியப் பாராளுமன்றத் தூதுக் குழவின் தலைவர் ரீ.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

யாழ்ப்பாணத்தில் கிறிஸ்துவுக்கு முற்பட்ட குடியிருப்புகள் !

யாழ்ப்பாணத்தில் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்தைச் சேர்ந்த இரு குடியிருப்புகள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

தொல்பொருள் திணைக்களம் மேற்கொண்ட ஆய்வுகளின்போது இத் தகவல்கள் வெளிவந்துள்ளதாகத் திணைக்களம் கூறுகிறது.
யாழ் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளிலிருந்து புராதனக் குடியிருப்புகள் பற்றிய தகவல்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தொல்பொருள் திணைக்களத்தின் ஆணையாளர் நாயகம் கலாநிதி செனெரத் திஸாநாயக்க சொன்னார். இத்தகவல்கள் தொல்பொருள் ஆய்வுகளுக்கு மிக முக்கியத்துவம் வாய்ந்தவையென அவர் மேலுந் தெரிவித்தார்.

யாழ்ப்பானத்தில் இத்தகைய பழமை வாய்ந்த குடியிருப்புகள் இருந்தமைக்கான ஆதாரங்கள் இதற்கு முன்னர் ஒருபோதும் கிடைத்ததில்லையென அவர் கூறினார்.

யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் முதன்முறையாக யாழில் தொல்பொருள் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த ஆய்வுகளின்போதே கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்துக்குரிய குடியிருப்புகள் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன.










.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

யாழ்ப்பாணத்தில் 'உள்ளூராட்சி மாநாடு 2009' : அரசாங்கம் ஏற்பாடு

வடக்கின் வசந்தம் திட்டத்தின் கீழ் உள்ளூராட்சி ஆளுகையை அபிவிருத்தி செய்வதற்கான தளமொன்றை உருவாக்கும் நோக்குடன் யாழ். நகரில் உள்ளூராட்சி மாநாடு ஒன்றை அரசாங்கம் நடத்தவுள்ளதாக அரச இணையத் தளச் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'உள்ளூராட்சி மாநாடு 2009' என்ற தலைப்பில் உள்ளூராட்சி, மாகாண சபைகள் அமைச்சு இந்த மாநாட்டை ஏற்பாடு செய்துள்ளதாக வடமாகாண ஆளுநர் மேஜர் ஜெனரல் ஜீ.ஏ.சந்திரசிறி தெரிவித்தார்.

சுமார் 30 வருடங்களுக்குப் பின்னர் நடத்தப்படவுள்ள இம்மாநாடு எதிர்வரும் 18ஆம் 19ஆம் திகதிகளில் நடைபெறும்.

18ஆம் திகதி யாழ். மத்திய கல்லூரியிலும் 19ஆம் திகதி யாழ். வீரசிங்கம் மண்டபத்திலும் மாநாடு நடைபெறும்.

மாநாடு நான்கு அம்சங்களைக் கொண்டதாக நடத்தப்படும். கருத்தரங்குகள், வடமாகாண உள்ளூராட்சி, மாகாண சபை நிர்வாகங்களினால் நடத்தப்படும் கண்காட்சிகள், கலாசார நிகழ்வுகள், பரிசுகளும் விருதுகளும் வழங்கல் என்பனவே அவை.

யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, கிளிநொச்சி, மன்னார், வவுனியா மாவட்டங்களிலிருந்து உள்ளூராட்சி மன்றங்களைச் சேர்ந்த சுமார் 730 பேர் நிகழ்வில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.

வெளிமாவட்ட உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளும் இம்மாநாட்டில் கலந்து கொள்ளவுள்ளனர்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

வவனியா நலன்புரிநிலையங்களிலிருந்து விடுவிக்கப்பட்டவர்கள் யாழ் வருகை


கடந்த ஒரு வார காலத்திற்க்கு முன்னர் வவனியா நலன்புரி நிலையங்களில் இருந்து விடுவிக்கப்பட்டு யாழ்ப்பாணத்தறிக்கு திரும்ப முடியாது வவுனியாவில் தவித்தவாகள் யாழ்ப்பாணத்திற்க்கு நேற்று முந்தினம் இரவு வந்து சேர்ந்துள்ளார்கள்.

வன்னியில் இருந்து இடம் பெயர்ந்து வவுனியா நலன் புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டு விடுகளுக்கச் செல்ல அனுமதிக்கப்பட்டு 398 பேர் நேற்று இரவு தனியார் வாகணங்களில் யாழ்ப்பாணம் அழைத்து வரப்பட்டுள்ளார்கள்.

கடந்த ஒரு வாரத்திற்க்கு முன்னர் வவுனியா இடைத்தங்கல் முகாமில் தங்க வைக்கப்பட்டு இருந்த கார்ப்பினப் பெண்கள் தமது உறவினர்களின் வீடுகளில் தங்குவதற்க்காக முகாம்களில் இரந்து விடுவிக்கப்பட்டு இருந்தனர். இவாகள் உடனடியாக யாழ்ப்பாணம் வர முடியாத நிலமையில் குறிப்பாக போக்குவரத்து வசதிகள் செய்யப்படாமையால் வவுனியா சிவன் கோவிலில் தங்க வைக்கப்பட்டு வந்தனர். இவாகளின் அவலமான நிலமையைக் கருத்தில் கொண்ட அரச சார்பற்ற நிறுவனமான ஜ.ஓ.எம். நிறுவனம் மேற் கொண்ட நடவடிக்கை காரணமாக 96 கற்ப்பினிப் பெண்கள் குழந்தைகள் சிறுவாகள் உட்பட 398 பேர் தனியார் பஸ் வண்டிகள் மூலம் நேற்று முன்தினம் இரவு அழைத்துவரப்பட்டு தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளார்கள்.

இவாகளுக்கு வேண்டிய உண்வு வசதிகள் யாவும் நேற்று இரவும் இன்றும் தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலய நிர்வாகத்தினரால் வழங்கப்பட்டுள்ளது யாழ் மாவட்ட செயலக புனர் வாழ்வுப் புகுதியினர் நன்பகல் நேரத் ஆலயத்திற்க்கு வருகைதந்து வந்தவாகளின் பதிவுகளை மேற்க ;கொண்டு தமது இருப்பிடங்களுக்கும் மற்றும் உறவினர்களின் வீடுகளுக்கும் செல்ல அனுமதித்துள்ளாhகள் தெல்லிப்பளை துர்க்கையம்மன் ஆலய நிர்வாகத்தினால் குழற்தைகளுக்கான தைத் ஆடைகளும் வழங்கப்பட்டன நேற்று இரவு ஆலயத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்த பெண் ஒருவர் குழந்தை பிரசவிப்பதற்க்கான அறிகுறிகள் காணப்பட்டதைத் தொடர்ந்து உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்திய சாலைக்கு தெல்லிப்பளை ஆதார வைத்திய சாலை அம்புலன்ஸ் வண்டி மூலம் எடுத்துச் செ5ல்லப்பட்டு அனுமதிக்கப்பட்டள்ளார் இன்று காலையும் வைத்தயிசாலையில் ஒரு பெண் அனுமதிக்கப்ட்டுள்ளமையும் குறிப்பி;டத்தக்கதாகும்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates