jkr
แสดงบทความที่มีป้ายกำกับ ஜனாதிபதி แสดงบทความทั้งหมด
แสดงบทความที่มีป้ายกำกับ ஜனாதிபதி แสดงบทความทั้งหมด

அமைச்சரின் மறைவு பேரிழப்பாகும் - ஜனாதிபதி


அமைச்சர் பெரியசாமி சந்திரசேகரனின் மறைவு நாட்டுக்கு பெரும் இழப்பாகும் என ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்தார். அமைச்சரின் பூதவுடன் தற்பொழுது பாராளுமன்றக் கட்டடத் தொகுதியில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற ஊழியர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.

அமைச்சரின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்திய பின்னர் ஜனாதிபதி இக்கருத்தினை வெளியிட்டார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஜனாதிபதிக்கு நேபாளத்தில் அமோக வரவேற்பு.

ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம உள்ளிட்ட இலங்கை குழுவினர் நேபாளத்திற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர்.

இன்று மாலை நேபாள தலைநகர் காத்மண்டுவைச் சென்றடைந்த ஜனாதிபதி தலைமையிலான இலங்கைத்தூதுக்குழுவினரக்கு அமோக வரவேற்பளிக்கப்பட்டுள்ளது. இவ்விஜயத்தின் போது நேபாள ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய அரசியல் தலைவர்களை ஜனாதிபதி தலைமையிலான இலங்கைத்தூதுக்குழுவினர் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.



  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேபாளம் விஜயம்


ஜனாதிபதி மற்றும் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகம உள்ளிட்ட குழுவினர் நேபாளத்திற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விஜயத்தின் போது,நேபாள ஜனாதிபதி உள்ளிட்ட முக்கிய குழுவினரைச் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

வைத்தியசாலைகள் மக்களுடையது - ஜனாதிபதி


வைத்தியர்களுக்கோ, பேராசிரியர்களுக்கோ அல்லது , சுகாதார அமைச்சின் அதிகாரிகளுக்கோ வைத்தியசாலைகள் சொந்தமானதல்ல எனவும் அது பொதுமக்களுக்கு சொந்தமானதெவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

அதிகாரிகளின் கருத்து முரண்பாடுகள் காரணமாக அனைத்து வசதிகளையும் கொண்ட வைத்தியசாலைகளை மக்களின் தேவைகளுக்காக திறக்காதிருக்க எவருக்கும் உரிமையில்லை என ஜனாதிபதி குறிப்பிட்டார்.

அதிகாரிகளின் கருத்து முரண்பாடுகள் காரணமாக கொழும்பு மாளிகாவத்தையில் அமைக்கப்பட்டுள்ள தேசிய சிறுநீரக மாற்றுச் சிகிச்சை மற்றும் ஆய்வுப் பிரிவு, தொடர்ந்து மூடப்பட்டுள்ளமை குறித்து கவனம் செலுத்தியுள்ள ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார்.


இந்த சிகிச்சைப் பிரிவை உடனடியாக திறப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் ஜனாதிபதி ஆலோசனை வழங்கியுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.


பல்கலைக்கழக அதிகாரிகள் மற்றும் சுகாதார அமைச்சின் அதிகாரிகளை நேற்று பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்தபோதே ஜனாதிபதி இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.


வட மத்திய மாகாணத்தில் சிறுநீரக நோய் அதிகளவில் காணப்படுவதால் அந்தப் பகுதி மக்களுக்கான சிகிச்சைகளை வழங்குவதற்காக அரச வைத்தியர்களும், மருத்துவபீட பேராசிரியர்களும் ஒன்றிணைந்து செயற்படவேண்டும் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

நாட்டின் அபிவிருத்தியில் இணையுமாறு புலம்பெயர் இலங்கையருக்கு ஜனாதிபதி அழைப்பு


இலங்கையின் தற்போது மோதல்கள் முடிவிற்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில் இங்கு முன்னெடுக்கப்படும் அபிவிருத்தியில் இணையுமாறு வெளிநாடுகளில் வாழும் இலங்கையருக்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அழைப்பு விடுத்துள்ளார்.

வெளிநாடுகளில் வதியும் இலங்கையரின் தொழினுட்ப அறிவு, தொழில் முயற்சித் திறன் மற்றும் நிதிப் பங்களிப்பை நாட்டின் அபிவிருத்திக்காகப் பயன்படுத்த ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு நாடுகளில் வாழ்ந்து வரும் இலங்கையர்கள் தாய் நாட்டுக்குத் திரும்பி தற்போதைய நிலைமைகளையும் அபிவிருத்தி நடவடிக்கைகளையும் கண்டறியுமாறு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார்.

அபிவிருத்திச் செயற்பாட்டில், தமக்குப் பங்களிப்புச் செய்யக்கூடிய துறையை அடையாளங்கண்டு அத்துடன் இணைந்துகொள்ளுமாறும் அவர் கேட்டுள்ளார்.

இது தொடர்பான விசேட செயற்றிட்டமொன்று ஜனாதிபதி தலைமையில் நவம்பர் மாதம் 14ந் திகதி கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாகாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

சர்வதேச சமூகத்திற்கு நல்லதொரு சமிக்ஞை:தேர்தல் முடிவு குறித்து ஜனாதிபதி


தென் மாகாண மக்கள் வழங்கியுள்ள விசேட மக்கள் ஆணையானது அரசாங்கம் தொடர்பில் தவறான எண்ணத்தை தோற்றுவிப்பதற்கு முயற்சிக்கும் பிரிவினருக்கும் சர்வதேச சமூகத்திற்கும் நல்லதொரு சமிக்ஞையாக அமைந்துள்ளது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பெற்றுக்கொண்ட வெற்றி தொடர்பில் முன்னணியின் தலைவரும் ஜனாதிபதியுமான மஹிந்த ராஜபக்ஷ விடுத்து ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; அவ்வறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது; தென் மாகாண சபைத்தேர்தலில் ஐக்கிய மக்கள் முன்னணி பெற்றுக்கொண்ட வெற்றியானது அதிவிஷேடமானதாகும். அது மட்டுமன்றி தாய்நாட்டின் மீது அன்பு செலுத்தும் மக்கள் பெற்றுக்கொண்ட வெற்றியாகும்.

2005 ஆம் ஆணு“டு ஜனாதிபதி தேர்தில் எனது வெற்றிக்கான தென் மாகாண மாக்கள் விஷேடமான பங்களிப்பை வழங்கினார்கள் இந்த மாகாண சபைத்தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மூன்றிலிரண்டு பெரும்பான்மையை பெற்றக்கொண்டுள்ளது. எமது அரசாங்கத்தின் மீது கொண்டுள்ள விசுவாசத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதற்காகவும் மஹிந்த சிந்தனைக்கு மாகாண மக்கள் மீண்டும் அனுமதி வழங்கியதை உறுதிப்படுத்துவதாகவும் அமைந்துள்ளது.

தென் மாகாண மக்கள் வழங்கியுள்ள விஷேட மக்கள் ஆணையானது அரசாங்கம் தொடர்பில் தவறான எண்ணத்தை தோற்றுவிப்பதற்கு முயற்சிக்கும் பிரிவினருக்கும் சர்வதேச சமூகத்திற்கு நல்லதொரு சமிக்ஞையை காட்டியுள்ளனர். தேசத்தை பாதுகாப்பதற்கும் மக்கள் வாழ்க்கையை கட்டியெழுப்புவதற்குமாக எம்மால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்களும் மக்கள் தைரியத்தை ஊட்டியுள்ளனர்.

அபிமானமான தேசத்தை கட்டியெழுப்புவதற்கான எமது மதிப்புமிக்க நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்காக இணையுமாறு சகலருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் அழைப்பு விடுக்கின்றேன். அரசியல் இனம், மத மற்றும் எந்தவொரு அழுத்தத்திற்கும் வரையறையின்றி தேசிய நலனுக்காக ஐக்கியப்பட்டமைக்காக தென்மாகாண மக்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கின்றேன்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

நாட்டை நேசிக்கும் மக்களின் வெற்றி - ஜனாதிபதி


இலங்கையில் நடைபெற்ற தென் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புக்குக் கிடைத்த வெற்றியை நாட்டை நேசிக்கும் மக்களின் வெற்றியாகவே கருதுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
2005 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தமது வெற்றிக்கு தென் மாகாண மக்கள் பெரும் பங்களிப்பு வழங்கியதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

இம்முறை தென் மாகாண சபைத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவை மக்கள் வழங்கியதன் மூலம் அரசாங்கத்தின் மீதான நம்பிக்கை மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கூறுகின்றார்.
மேலும் இந்த தேர்தல் முடிவுகளின் பிரகாரம் மக்கள் மஹிந்த சிந்தனைக்கு மீண்டும் அங்கீகாரம் வழங்கியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் தொடர்பான தவறான கருத்துக்களை ஏற்படுத்துவதற்காக செயற்படும் குழுக்களுக்கு மாத்திரமின்றி சர்வதேச சமூகத்திற்கும் இந்த ​வெற்றியின் மூலம் தீர்மானமிக்க செய்தியொனறு வழங்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குறிப்பிட்டுள்ளார்.

தாய் நாட்டைக் காப்பாற்றிக்கொண்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான திட்டங்களை முன்னெடுப்பதற்கு மக்களின் ஆணை பெரும் திடகாத்திரமாக அமையுமென ஜனாதிபதி கூறியுள்ளார்.
நாட்டைக் கட்டியெழுப்பும் நடவடிக்கைகளுக்காக ஒன்றிணையுமாறு அனைத்து தரப்பினருக்கும் வேண்டுகோள் விடுப்பதற்கு இந்த தருணத்தைப் பயன்படுத்திக் கொள்வதாகவும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

அரசியல், இன, மத, பேதங்களுக்கு கட்டுப்படாது நாட்டின் முன்னேற்றத்திற்கான ஒன்றிணைந்த தென் மாகாண மக்களை நன்றியுடன் நினைவகூர்வதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அமைதியான தேர்தலொன்றை நடத்துவதற்கு காரணமாக அமைந்த தேர்தல்கள் ஆணையாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகளுக்கும், பாதுகாப்புத் தரப்பினருக்கும் பொறுப்புடன் செயற்பட்ட அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக இலங்கை ஜனாதிபதி விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

ஜீ.எஸ்.பி வரிச் சலுகையை வழங்க விருப்பமில்லையென்றால் தேவையில்லை – மஹிந்த

ஜீ.எஸ்.பி வரிச் சலுகையை வழங்க விருப்பமில்லையென்றால் தேவையில்லை என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ சுட்டிக்காட்டியுள்ளார்.

எந்தவொரு நிபந்தனைகளுக்கும் அடிபணிந்து வரிச் சலுகையை பெற்றுக் கொள்ளும் உத்தேசம் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

காணி ஆலோசனை சபை கூட்டமொன்றில் கலந்து கொண்ட போது ஜனாதிபதி இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சிகள் சலுகைத் திட்டத்தை ரத்து செய்யுமாறு கோரி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், கொடிய பயங்கரவாதிகளுக்கு ரணில் விக்ரமசிங்க இந்த நாட்டின் பெரும்பகுதியை எழுத்து மூலமாக தாரை வார்த்துக் கொடுத்திருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.

வெற்றி கொள்ள முடியாது என நம்பப்பட்டு வந்த யுத்தத்தை அரசாங்கம் சொற்ப காலத்தில் முற்றாக தோற்கடித்துள்ளமையை எவரும் மறந்துவிடக் கூடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

நியாமற்ற விமர்சனத்தை விடுத்து நாட்டை கட்டியெழுப்ப உதவுங்கள் மேற்குலக நாடுகளிடம் ஜனாதிபதி வேண்டுகோள்


தமிழீழ விடுதலைப் புலிகளை தோற்கடித்த பின்னர் நாட்டைக் கட்டியெழுப்பும் இலங்கையின் முயற்சிகளுக்கு மேற்குநாடுகள் உதவியளிக்க வேண்டுமே தவிர, நியாயமற்ற வகையில், மனித உரிமைகள் மீறல் குறித்தும் அகதிகளின் பராமரிப்பு தொடர்பாகவும் எம்மை விமர்சிக்கக்கூடாது. அத்துடன் விடுதலைப் புலிகளின் பிரசாரத்தை நம்பக்கூடாது என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். இடம்பெயர்ந்த மக்கள் அவர்களது சொந்த இடங்களுக்கு செல்ல அனுமதிக்கப்படும் முன்னர் அப்பகுதிகளிலுள்ள கண்ணிவெடிகள் அகற்றப்படவேண்டும் என்று கூறிய ஜனாதிபதி, அவர்களை முகாமுக்கு வெளியே செல்ல அனுமதித்து கண்ணிவெடிகளில் சிக்கவைக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார். "லே பிகாரோ' என்ற இத்தாலிய பத்திரிகை ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டி ஒன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழர், சிங்களவர், முஸ்லிம்களிடையே பாரபட்சம் காண்பிக்க அரசாங்கம் விரும்பவில்லை. மேற்கு நாடுகள் எமக்கு உதவவேண்டும் எங்களை நம்பவேண்டும் புலிகளின் பிரசாரங்களை நம்பக்கூடாது.இடம்பெயர்ந்த மக்கள் சாத்தியமான அளவு விரைவாகக் குடியமர்த்தப்படுவார்கள். அவர்களுடன் தொடர்புகளை வைத்திருக்கும் முகாம் வாசிகளை நாம் இனங்காண வேண்டும். நாங்கள் மக்களை முகாம்களில் வைக்கவில்லை. விடுதலைப் புலிகள் அவர்களை பணயமாக தடுத்து வைத்திருந்தமையே இதற்குக் காரணம் என்றும் அவர் தெரிவித்தார். லே பிகாரோ பத்திரிகைக்கு ஜனாதிபதி வழங்கிய பேட்டியின் விபரம் வருமாறு: கேள்வி : புலிகளுடன் மூன்று தசாப்த காலமாக நீடித்த யுத்தத்துக்கு முடிவுகண்டு கடந்த மே மாதம் வெற்றிவாகை சூடினீர்கள். இந்நிலையில் எவ்வாறு அமைதியை கொண்டுவந்து உங்கள் நாட்டை மீளக் கட்டியெழுப்பப்போகின்றீர்கள்? பதில் : முதலாவதாக வட பகுதியில் உள்ள இடம்பெயர்ந்த மக்கள் அனைவரையும் அவர்களின் சொந்த இடங்களுக்கு அனுப்பிவைக்கவேண்டும். இதற்கு வசதியாக முதலில் அவர்களின் நிலங்களில் உள்ள கண்ணிவெடிகளை அகற்றி அவர்கள் பயிர்ச் செய்கையில் ஈடுபடக்கூடிய நிலையை உருவாக்கவேண்டும். இதற்கே முன்னுரிமை வழங்கப்படும். அதனை தொடர்ந்து நாம் நாட்டை அபிவிருத்தி செய்யவேண்டும்.இதற்கென வெளிநாட்டு முதலீட்டாளர்களை நாம் அழைக்கின்றோம். கேள்வி: மீள்குடியேற்ற நடவடிக்கைகள் ஏன் மந்தகதியில் உள்ளன? இவ்வருட இறுதிக்குள் அவர்களில் 80 வீதமானோரை மீள்குடியேற்றும் சாத்தியம் உள்ளதா? பதில்: எமக்குள்ள முட்டுக்கட்டை கண்ணிவெடிகளாகும். நாம் எதிர்பார்த்ததைவிட அதுவே பாரிய பிரச்சினையாகவுள்ளது. படையினர் இரவு பகலாக சளைக்காது இவற்றை அகற்றும் பணிகளில் ஈடுபட்டுவருகின்றனர். இதேவேளை ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங்களைச் சேர்ந்த வயோதிபர்களை விடுவித்துள்ளோம். தற்போது இரண்டு இலட்சத்து 20 ஆயிரம் அகதிகளே உள்ளனர். செப்டெம்பர் நடுப்பகுதியில் 50 ஆயிரம் பேர் வரையில் தமது இடங்களுக்கு திரும்பக்கூடியதாக இருக்கும். கேள்வி : இடம்பெயர்ந்த மக்கள் ஏன் முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டுள்ளனர்? பதில்: நிலக்கண்ணிவெடிகளில் சிக்கிவிடுவார்கள் என்ற காரணத்தினாலேயே நாம் அவர்களை விடுதலை செய்ய முடியாத நிலையில் உள்ளோம். மேலும் புலிகளுடன் தொடர்பு பட்டவர்கள் மற்றும் அல்லாதவர்கள் யார் என்பதனை தரம் பிரிக்கவேண்டியுள்ளது. எமது செயற்பாட்டினால் அவர்கள் முகாம்களில் அடைக்கப்படவில்லை. புலிகளே அவர்களை பணயக் கைதிகளாக வைத்திருந்தனர். கேள்வி : யுத்த முடிவில் உங்களது படையினர், சிவிலியன்கள் பலரை கொன்றுவிட்டதாக மேற்கு நாடுகள் விமர்சிக்கின்றன. உங்கள் பதில் என்ன? பதில்: இந்தவகையான விமர்சனங்களை நான் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை. இதர நாடுகள் எவ்வாறு ஈடுகொடுக்கின்றன என்று எனக்கு தெரியாது. பயங்கரவாதிகளுடன் சண்டையில் ஈடுபடும் அரச படையினருக்கு நாம் கொடுப்பனவுகளை வழங்குகின்றோம். நாம் கிழக்கு மாகாணத்தை விடுவித்தபோது அங்கு சிவிலியன்கள் எவரும் பாதிக்கப்படவில்லை. வட மாகாணத்தை பொறுத்தவரை நாம் கனரக ஆயுதங்களை பயன்படுத்தியிருந்தால் இராணுவத்தினர் பலரை இழந்திருக்கவேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது. கேள்வி: யுத்தம் முடிவுக்கு வந்த பின்னரும் நீங்கள் தொடர்ச்சியாக விமர்சிக்கப்பட்டு வருகின்றீர்கள்? அண்மையில் ஊடகவியலாளர் ஜே.எஸ். திஸ்ஸநாயகத்தக்கு 20 வருடகால கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது பரந்தளவில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. பதில்: பூரண சுதந்திரத்துடன் நீதிபதி தனது தீர்ப்பை வழங்கியுள்ளார். நீதிமன்ற தீர்ப்புக்களில் என்னால் தலையிட முடியாது. மேன்முறையீட்டு நீதிமன்றம் அல்லது உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யக்கூடிய சாத்தியங்கள் உள்ளன. ஊடக சுதந்திரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக மக்கள் கூறுகின்றனர். எனினும் தீர்ப்புவழங்க முன்னர் நீதிமன்றத்தின் முன்பாக ஊடகவியலாளர் சிலர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை குறித்து அவர்கள் எதுவும் கூறவில்லை. கேள்வி : இந்த தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ளதா? அதனை தடுக்க உங்கள் அதிகாரத்தை பயன்படுத்துவீர்களா? பதில்: அனைத்து நடைமுறைகளும் இடம்பெறும்வரை நாம் காத்திருக்கவேண்டும். தருணம் வந்ததும் நான் எனது தீர்மானத்தை எடுப்பேன். எனினும் ஊடகவியலாளர்கள் சட்டத்துக்கு அப்பாற்பட்டவர்கள் என்று நாம் கருதக்கூடாது. கேள்வி: இந்த கேள்வி உங்கள் நாட்டை பொறுத்தமட்டில் சர்வதேச விவகாரமாக உள்ளது என்பது உங்களுக்கு தெரியுமா? பதில் : இது புலிகளின் பிரசாரத்தினாலாகும். மேற்கை பொறுத்தவரையில் புலிகள் எதனை நினைத்தாலும் செய்ய முடியும். யாரை வேண்டுமானாலும் கொலை செய்ய முடியும். முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை செய்யப்பட்டார். இது குறித்து யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. இது மிகவும் வெட்கக்கேடானது. கேள்வி: யுத்தம் முடிந்துவிட்டது. எப்போது அவசரகால சட்டம் நீக்கப்படும்? பதில் : சாத்தியமான அளவு விரைவாக நீக்கப்படும். எவ்வளவு பேர் புலிகளின் தலைவர்களுடன் தொடர்பு வைத்திருந்தார்கள் என்பதனை நாம் முதலில் பார்க்கவேண்டும். அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். கேள்வி: இதற்கு எவ்வளவு காலம் எடுக்கும்? கிழமைகள் மாதங்கள் வருடங்கள் ? பதில் ஆறு மாதங்கள் அல்லது ஒரு வருடம் நீடிக்கலாம். என்னால் உறுதியாக கூற முடியாது. நியாயமற்ற வகையில் மேற்கு நாடுகள் எம்மை விமர்சிப்பதை நிறுத்தி உதவவேண்டும்.கேள்வி: எதிர்வரும் நவம்பரிலிருந்து ஜனாதிபதி தேர்தலுக்கு அழைப்பு விடுக்க உங்களால் முடியும். எப்போது அத்தேர்தல்கள் நடைபெறும்?பதில்: எவ்வளவு முடியுமோ அவ்வளவு விரைவில்.கேள்வி: எதிர்வரும் வருட ஆரம்பத்தில் நடைபெறுமா?பதில்: ஆம்கேள்வி: தமிழர் பிரச்சினைக்கான தீர்வு நிகழ்ச்சித்திட்ட மொன்றுடன் நீங்கள் பிரசாரம் செய்வீர்களா?பதில்: ஆம். அதிகாரப் பகிர்வு மற்றும் உள்ளூராட்சி (மாகாண) சபைகளின் ஸ்தாபிப்பு என்பவற்றுக்கு வழிவகை செய்யும் 13 ஆம் அரசியலமைப்பு சீர்திருத்தத்தை நடைமுறைப்படுத்த நாம் தயாராக இருக்கிறோம். போரின் காரணமாக மேற்படி ஏற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்படாமல் இருந்தன. நாங்கள் இது தொடர்பில் சிறிது முன்னோக்கி செல்லவும் தயாராக உள்ளோம்.கேள்வி: இது தமிழ்த் தலைவர்களை திருப்திப்படுத்துமா?பதில்: எப்போதும் மக்கள் மேலதிகமாகவே கேட்பார்கள். ஆனால், மக்களுக்கு வேண்டியது அமைதியும் பாதுகாப்புமே. அவர்களுக்கு பாடசாலைகள் தேவையாகவுள்ளது. அவர்கள் போரை போதுமென்ற அளவுக்கு எதிர்கொண்டுள்ளார்கள். கேள்வி: நீங்கள் மேற்குலக நாடுகளால் கொண்டு வரப்படும் உதவிகளில் திருப்தியடைந்துள்ளீர்களா?பதில்: அகதிகளுக்கான உதவிகள் அரசசார்பற்ற நிறுவனங்களினூடாக செல்கின்றன. அந்நிறுவனங்கள் அவற்றில் சுமார் 40 தொடக்கம் 60 சதவீதமானவற்றை நிர்வாக விடயங்களுக்காக செலவிடுகின்றன. நாங்கள் இதை சுனாமியின்போது பார்த்தோம். கேள்வி: உங்களுக்கு அரச சார்பற்ற நிறுவனங்களை பிடிக்கவில்லை?பதில்: சில அரசசார்பற்ற நிறுவனங்கள் விடுதலைப் புலிகளுக்கு உதவின. ஏனையவை தமது வேலைகளை செய்தன. ஆனால் ஐக்கிய நாடு முகவர் நிலையங்கள் கூட இயல்பு நிலைக்கு கொண்டுவரும் செயற்கிரமங்களை தாமதமாக்கின.கேள்வி: இராணுவத்தினரால் சடுதியாக நிறைவேற்றப்படும் மரண தண்டனைகளை போன்று தோற்றமளிக்கும் வீடியோ காட்சியொன்று பிரித்தானியாவில் ஒளிபரப்பப்பட்டது. இதன் காரணமாக எழுந்துள்ள கூர்மையான குற்றச்சாட்டுகளுக்கு நீங்கள் எவ்வாறு பதிலளிக்கப் போகிறீர்கள்?பதில்: அந்த வீடியோ காட்சி உருவாக்கப்பட்ட ஒன்று என்பதற்கான ஆதாரங்கள் எம்மிடம் உள்ளன. விடுதலைப் புலி உறுப்பினர்கள் பிரசார நோக்கங்களுடன் இராணுவ சீருடையில் நிகழ்ச்சிகளை அரங்கேற்றுவது இது முதல் தடவையல்ல.கேள்வி: நீங்கள் திரிபோலியில் கேணல் கடாபியையும் ஹுகோ சாவேஸையும் சந்தித்தீர்கள். நீங்கள் பர்மா (மியன்மார்) சென்றீர்கள். மேற்குலக நாடுகளின் சிறந்த நண்பர்கள் அல்லாத தலைவர்களுடன் ஏன் நீங்கள் பகிரங்கமாக தொடர்ந்து காணப்பட்டீர்கள்?பதில்: மேற்குலக நாடுகள் எதுவும் என்னை வரவேற்கவில்லை. ஆனால், நட்புறவான நாடொன்றால் வரவேற்கப்பட்டபோது நான் சென்றேன். நாங்கள் அணிசேரா இயக்கத்தின் ஸ்தாபக நாடுகளில் ஒன்றாக உள்ளோம். எனக்கு வாய்ப்பு கிடைத்தபோது நான் இந்தியாவுக்கும் செல்கிறேன். கேள்வி: ஊடகவியலாளர்கள் காணாமல் போகிறார்கள். ஏனையோர் படுகொலை செய்யப்படுகின்றனர். இலங்கை மிகவும் கடுமையான ஜனநாயகமொன்றில் அங்கம் வகிக்கவில்லை?பதில்: இவை அனைத்தும் பிரசாரமாகும். ஊடக சுதந்திரம் உள்ளது. விமர்சன சுதந்திரம் உள்ளது. எதிர்க் கட்சியினர் ஜி.எஸ்.பி. முறைமை ஐரோப்பிய ஒன்றியத்தால் மீளப் புதுப்பிக்கப்படுவதற்கு ஆதரவைத் திரட்ட புரூஸல்ஸுக்கு சென்றார்கள். காணாமல்போன ஊடகவியலாளர்களில் பலர் மீளத்தோன்றி வெளிநாட்டுத் தூதரகங்களில் விசாக்களைக் கோரியுள்ளனர். நாங்கள் நாட்டை அபிவிருத்தி செய்ய விரும்புகிறோம். சிங்களவர்கள், தமிழர்கள் அல்லது முஸ்லிம்களுக்கு எதிராக எந்தவகையான பாரபட்சமும் காட்டப்படுவதை தவிர்க்க நாம் விரும்புகிறோம். மேற்குலக நாடுகள் விடுதலைப புலிகளின் பிரசாரத்தை செவிமடுப்பதை நிறுத்தி எம்மை நம்பி எமக்கு உதவவேண்டும் என நாம் விரும்புகிறோம். பிரான்ஸ் ஏனைய பல நாடுகளை விட நியாயமாக உள்ளது. அது பயங்கரவாதத்திற்கு எதிரான எமது போராட்டத்திற்கு ஆதரவளித்ததுடன் விடுதலைப் புலிகள் பக்கம் அந்நாடு ஒருபோதும் அணிசேரவில்லை.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS
Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates