ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை இழக்கப்பட்டால் 100000 குடும்பங்கள் பாதிக்கப்படும் -எதிர்கட்சித்தலைவர் தெரிவிப்பு!

ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை இழக்கப்பட்டால் சுமார் 100000 குடும்பங்கள் பாதிக்கப்படக்கூடும் என எதிர்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஹபரனவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜயவர்தன, ஆர்.பிரேமதாஸ போன்ற தலைவர்களைப் போன்று தாமும் இந்தநாட்டுக்கு பொருளாதாh வளர்ச்சியை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் காத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஊழல்மோசடிகளை தடுத்து நிறுத்தி நாட்டை பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்த அர்ப்பணிப்புடன் காத்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். ஊழல்மோசடிகளை தடுத்து நிறுத்தி நாட்டை பொருளாதார அபிவிருத்திநோக்கி நகர்த்த வேண்டியது மிகவும் அவசியமானதென அவர் குறிப்பிட்டுள்ளார். ஆளும் கட்சியை தோற்கடிப்பதற்கு அரசியல் கட்சிகள் புத்தஜீவிகள் மற்றும் சிவில் அமைப்புகளுடன் ஒன்றிணைந்து செயற்படத் திட்டமிட்டு ள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.







0 Response to "ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை இழக்கப்பட்டால் 100000 குடும்பங்கள் பாதிக்கப்படும் -எதிர்கட்சித்தலைவர் தெரிவிப்பு!"
แสดงความคิดเห็น