ஆந்திரா மீன் குழம்பு

தேவையான பொருட்கள்:
மீன் - 1/2 கிலோ
பெரிய வெங்காயம் - 4,
இஞ்சி, பூண்டு விழுது - 3 தேக்கரண்டி,
தக்காளி - 3,
மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி,
மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி,
தனியா தூள் - 2 மேசைக்கரண்டி,
புளி - ஒரு பெரிய எழுமிச்சம் பழ அளவு,
உப்பு - தேவையான அளவு,
தாளிக்க: தேவையானவை:
கறிவேப்பிலை - 2 கொத்து,
கடுகு - 1 தேக்கரண்டி,
சீரகம் - 1 தேக்கரண்டி,
வெந்தயம் - 1/2 தேக்கரண்டி,
காய்ந்த மிளகாய் - 10,
எண்ணெய் - 3 மேசைக்கரண்டி.
செய்முறை:
மீனை சுத்தம் செய்து, உப்பு, மஞ்சள் தூள் தேய்த்து, கழுவி வைக்கவும்.
வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவும்.
புளியை கரைத்து வடிகட்டவும்.
வாணலியில் எண்ணெயை ஊற்றி, கடுகு, சீரகம், வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து இஞ்சி, பூண்டு விழுது, வெங்காயம், முழு மிளகாய் சேர்த்து வதக்கவும்.
நன்கு வாசனை வந்ததும், தக்காளி சேர்த்து வதக்கவும்.
நன்கு வதங்கியதும் மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும்.
கரைத்து வைத்த புளிக்கரைசலை ஊற்றி, உப்பு போட்டு கொதிக்க விடவும்.
குழம்பு கெட்டியானதும் சுத்தம் செய்த மீனை சேர்க்கவும்.
மீன் வெந்ததும், இறக்கவும்.







0 Response to "ஆந்திரா மீன் குழம்பு"
แสดงความคิดเห็น