jkr

அநுராதபுரம் சிறைச்சாலையில் கைதிகளிடையே மோதல்: நால்வர் காயம்


அநுராதபுரம் சிறைச்சாலையில் இன்று அதிகாலை இரு கைதிகளிடையே ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைக்கலப்பாக மாறியதில் நால்வர் காயமடைந்தனர்.

இச்சம்பவம் குறித்து உதவி சிறைச்சாலை ஆணையாளர் கெனத் பெர்னாண்டோவைத் தொடர்பு கொண்டு கேட்ட போது,

"இன்று அதிகாலை அதிகாரி ஒருவர் கைதிகளைக் கணக்கெடுத்துக் கொண்டிருந்த சமயம் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதில் நான்கு கைதிகள் கயமடைந்துள்ளனர். இவர்கள் தற்போது சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தற்போது நிலைமை வழமைக்குத் திரும்பியுள்ளதுடன் சம்பவம் குறித்து விசாரணைகளை மேற்கொள்ள வாரியபொல பொலிஸ் நிலையத்திலிருந்து அதிகாரி ஒருவர் சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்" எனத் தெரிவித்தார்.

கடந்த வெள்ளிக்கிழமை வெலிக்கடை சிறைச்சாலையில் தமிழ்-சிங்கள கைதிகளுக்கிடையில் ஏற்பட்ட கைக்கலப்பிலும் ஐந்து பேர் வரை காயமடைந்திருந்தனர். இதுதொடர்பாக விசாரணைகளை நடத்தக் கோரி நேற்றைய தினம் தமிழ் கைதிகள் உண்ணாவிரதம் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "அநுராதபுரம் சிறைச்சாலையில் கைதிகளிடையே மோதல்: நால்வர் காயம்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates