jkr

தமிழ்க் கைதிகள் தாக்கப்பட்டமை குறித்த அறிக்கை இன்று சமர்ப்பிப்பு : புத்திர சிகாமணி


"தமிழ்க் கைதிகள் தாக்கப்பட்டமை குறித்த அறிக்கைகள் இன்று கிடைக்கப்பெறும். இதற்கென புதிதாக பத்து சிரேஷ்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

அறிக்கைகள் கிடைக்கப்பெற்றதும், பாதிக்கப்பட்ட தமிழ்க் கைதிகள் தொடர்பில் காத்திரமான நடவடிக்கை எடுக்கப்படும்" என நீதி,சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் புத்திர சிகாமணி தெரிவித்தார்.

கொழும்பு மகசின் சிறைச்சாலை தமிழ் கைதிகள் தாக்கப்பட்டமை, அநுராதபுரம் சிறைச்சாலை தமிழ் கைதிகள் தாக்கப்பட்டமை, இது தொடர்பில் நேற்று மனோ கணேசன் தலைமையில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் என்பன குறித்து நீதி, மறுசீரமைப்பு அமைச்சர் புத்திர சிகாமணி மேற்படி எமது இணையத்தளத்திற்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு கூறினார்.

அதேவேளை, இவ்வாறான சம்பவங்கள் காரணமாக இதுவரை, நாடளாவிய ரீதியில் 631 தமிழ்க் கைதிகள் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர்கள் அனைவருக்கும் அதிவிரைவில் தீர்வு பெற்றுக் கொடுக்கப்படும் என்றும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.

எனினும் தாக்கப்பட்டவர் சார்பிலோ அல்லது பாதிக்கப்பட்டவர் சார்பிலோ இதுவரை எழுத்து வடிவில் வாக்குமூலங்கள் எதுவும் பெறப்படவில்லை எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "தமிழ்க் கைதிகள் தாக்கப்பட்டமை குறித்த அறிக்கை இன்று சமர்ப்பிப்பு : புத்திர சிகாமணி"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates