பொங்கலுக்கு கேப்டன் டிவி!

தொலைக்காட்சி ஆரம்பிக்கிறார் நடிகரும் தேமுதிக தலைவருமான விஜய்காந்த் என்பது கேள்விப்பட்ட செய்தி . இந்த தொலைக்காட்சி வருகிற பொங்கல் தினத்தன்று ஒளிபரப்பைத் துவங்குவது புதிய செய்தி.
இந்தத் தொலைக்காட்சிக்கு பல்வேறு பணிகளுக்கு ஆட்கள் தேவை என பெரிய விளம்பரமெல்லாம் கொடுத்திருக்கிறார் விஜய்காந்த்.
இந்த தொலைக்காட்சி மட்டுமல்லாமல், புதிய பத்திரிகையும் துவங்குகிறாராம். இது வாரப் பத்திரிகையாக முதலில் ஆரம்பிக்கப்பட்டு பின்னர் நாளிதழாக மாறும் என்கிறது தேமுதிக வட்டாரம்.
ஏற்கெனவே மூன்று இணையதளங்களைத் துவங்கியுள்ளார் விஜய்காந்த் .
முன்பு தொலைல்காட்சிக்கு பேட்டியே தரமாட்டேன் என்று சபதமெல்லாம் செய்தவர்தான் கேப்டன். ஆனால், அரசியலும், காலத்தின் கட்டாயமும் அவரது சபதத்தை, புதிய தொலைக்காட்சி ஆரம்பிக்கும் அளவுக்கு மாற்றியிருக்கிறது.







0 Response to "பொங்கலுக்கு கேப்டன் டிவி!"
แสดงความคิดเห็น