jkr

வாழைச்சேனையில் உர மூடை ஏற்றிச்சென்ற லொறி விபத்து:இருவர் பலி


மட்டக்களப்பு வாழைச்சேனையிலிருந்து உர மூடைகளை ஏற்றிச் சென்ற லொறியொன்று பாதைய விட்டு விலகி விபத்திற்குள்ளானதில் இரண்டு விவசாயிகள் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

சம்பவத்தில் ஊற்றுச்சேனையைச் சேர்ந்த வீ.வடிவேல் (வயது 50 ) மற்றும் சி.சின்னராசா (வயது 50) ஆகியோரே உயிரிழந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ள அதே வேளை 15 பேர் காயமடைந்த நிலையில் பொலன்னறுவை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விவசாயத்தினைக்களத்தினால் தங்களுக்கு வழங்கப்பட்ட உர மூடைகளை குறித்த வாகனத்தில் ஏற்றிக் கொண்டு ஊற்றுச்சேனை - வெலிக்கந்தை வீதி வழியாக நேற்று முன் தினம் மாலை வயலுக்கு திரும்பிக் கொண்டிருந்த வேளை இந்த விபத்து ஏற்பட்டதாக காயமடைந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.

தற்போது மாரி மழை பெய்து வருவதால் மழை நீர் தேங்கி வீதி குண்டும் குழியுமாக காணப்படுவதால் குறித்த வாகனம் பாதையை விட்டு விலகி மதகொன்றுடன் மோதியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "வாழைச்சேனையில் உர மூடை ஏற்றிச்சென்ற லொறி விபத்து:இருவர் பலி"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates