jkr

அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து பா.ம.க : ராமதாஸ் அறிவிப்பு அக்டோபர் 04,2009,15:2

திண்டிவனம் : அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து வெளியேறுவதாக பா.மக., நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார். திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் இன்று பா.ம.க., நிர்வாகக் குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ், தலைவர் ஜி.கே.மணி மற்றும் முக்கிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர். கட்சியின் வளர்ச்சிப் பணி, எதிர்கால திட்டம் உள்ளிட்டவைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. அப்போது பெரும்பாலான நிர்வாகிகள் அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேற வேண்டும் என கருத்து தெரிவித்துள்ளனர்.இதனைத் தொடர்ந்து அதிமுக கூட்டணியில் இருந்து பாமக வெளியேற முடிவு எடுக்கப்பட்டது. இதனை கூட்டம் முடிந்து வெளியே வந்த ராமதாஸ் நிருபர்களிடம் அறிவித்தார்.

திண்டிவனம் தைலாபுரம் தோட்டத்தில் பாமக நிர்வாகக்குழு கூட்டம் இன்று காலை முதலே நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக முக்கிய நிர்வாகிகள் வந்திருந்தனர். கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவுகளை தெரிந்து கொள்ள ஏராளமான தொண்டர்களும் அங்கு திரண்டிருந்தனர். கூட்டம் நடந்த அறைக்குள் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி நிருபர்களை அனுமதிக்கவில்லை. கூட்டம் முடிந்த பின்னரே நிர்வாகக்குழுவில் எடுக்கப்பட்ட முடிவுகளை ராமதாஸ் நிருபர்களிடம் தெரிவித்தார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "அ.தி.மு.க., கூட்டணியில் இருந்து பா.ம.க : ராமதாஸ் அறிவிப்பு அக்டோபர் 04,2009,15:2"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates