இலுப்பைக்குளம் நலன்புரி நிலையத்திலிருந்து 208 பேர் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பு

செட்டிக்குளம் நலன்புரி நிலையங்களில் தங்க வைக்கப்பட்டிருந்து மன்னார் இலுப்பைக்குளம் நலன்புரி நிலையத்திற்கு மாற்றப்பட்டவர்களில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு தொகுதியினர் நேற்று மாலை அவர்களுடைய சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
மன்னார் இலுப்பைக்குளம் நலன்புரி நிலையத்தில் தங்க வைக்கப்பட்டிருந்தவர்களில் மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த 208 பேர் மேற்படி அவர்களுடைய சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இவர்களில் நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியினைச் சேர்ந்த 18 குடும்பங்களைச் சேர்ந்த 45 பேரும் மன்னார் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட 49 குடும்பங்களைச் சேர்ந்த 163 பேரும் பேருந்துகள் மூலம் அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
மன்னார் நகரப்பகுதியை சேர்ந்த 163 பேரும் மன்னார் நகரப்பகுதியில் நேற்று மாலை 5.45 மணியளவில் இறக்கி விடப்பட்டனர்.இவர்கள் அழைத்து வரப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வினோநோகராதலிங்கம் மக்களுடன் கலந்துரையாடினார்







0 Response to "இலுப்பைக்குளம் நலன்புரி நிலையத்திலிருந்து 208 பேர் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைப்பு"
แสดงความคิดเห็น