இரட்டை குழந்தை இல்லை; ஆனா, இரட்டை மாதிரி : அமெரிக்க பெண்ணுக்கு விசித்திரம்

ஆர்கான்சாஸ் : அமெரிக்காவில் ஒரு பெண் இரண்டு குழந்தைகளை வயிற்றில் சுமக்கிறார்; ஆனால், அவை இரட்டை குழந்தைகள் அல்ல. "அந்த இரண்டு குழந்தைகளும், இரண்டு வார கால இடைவெளியில் உருவானவை' என, டாக்டர்கள் கூறியுள்ளது, ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்கா, ஆர்கான்சாசை சேர்ந்தவர் டோட். இவரது மனைவியின் பெயர் ஜூலியா. இவர், கர்ப்பமாக இருந்தார். குழந்தையின் வளர்ச்சி குறித்து அறிந்து கொள்வதற்காக, "ஸ்கேன்' செய்தார். "ஸ்கேனை' பரிசோதித்த டாக்டர்கள், ஜூலியாவின் வயிற்றில் இரண்டு குழந்தைகள் இருப்பதாக தெரிவித்தனர். மேலும், அவை இரண்டும் இரட்டை குழந்தைகள் அல்ல என்பது அவர்களுக்கு தெரியவந்தது. டாக்டர்களுக்கு ஆச்சர்யம் ஏற்பட்டது. இரண்டு கருக்களும், ஒரே நேரத்தில் உருவானவை அல்ல என்பதும், இரண்டு வார இடைவெளியில் உருவானவை என்றும் தெரிய வந்தது.
டாக்டர் கரேன் பாய்ல் கூறியதாவது:
இது மிகவும் அரிதான ஒரு நிகழ்வு. உலகிலேயே இதுவரை பத்து பேருக்கு தான் இதுபோன்று இருந்துள்ளது. ஜூலியாவுக்கு ஸ்கேன் எடுத்து பார்த்தபோது, ஒரு கரு உருவாகியுள்ளதும், அதன் அசைவுகளும் தெரிய வந்தன. சிறிது நேரத்தில், மற்றொரு இதய துடிப்பும் கேட்டது. எங்களுக்கு ஆச்சர்யமாக இருந்தது. முதல் கரு உருவாகி, இரண்டு வாரங்கள் கழித்து இரண்டாவது கரு உருவாகியுள்ளது. இரண்டு குழந்தைகளுமே ஒரே நாளில் பிறப்பதற்கு வாய்ப்பு மிகவும் குறைவு.இவ்வாறு கரேன் பாய்ல் கூறினார்.
தனது வயிற்றில் இரண்டு குழந்தைகள் வளர்வதை நினைத்து ஜூலியா மகிழ்ச்சியில் திக்கு முக்காடிப் போயுள்ளார்.தன் வயிற்றில் முதலில் உருவானது பெண் குழந்தை என்றும், இரண்டு வாரங்கள் கழித்து உருவானது ஆண் குழந்தை என்றும் ஸ்கேனில் தெரியவந்துள்ளதால், அவற்றுக்கு முறையே ஜில்லியன், ஹட்சன் என, ஜூலியா தற்போதே பெயரிட்டுள்ளார்.எலி, குதிரை, கங்காரு போன்ற மிருகங்கள் தான், இது போல வினோதமாக கருத்தரிக்கும். மனிதர்களில் இந்த வினோத முறை, மிக அரிது







0 Response to "இரட்டை குழந்தை இல்லை; ஆனா, இரட்டை மாதிரி : அமெரிக்க பெண்ணுக்கு விசித்திரம்"
แสดงความคิดเห็น