jkr

யுத்தக் குற்றச் செயல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்- இலங்கையிடம் அமெரிக்கா கோரிக்கை


இலங்கையில் 25 வருடகால யுத்தம் முடிவுறும் தறுவாயில் இடம்பெற்றதாக கூறப்படும் யுத்தக் குற்றச்செயல்கள் குறித்து விசாரித்து அவற்றுக்கு பொறுப்பானவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்குமாறு இலங்கையிடம் அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. அமெரிக்க காங்கிரஸுக்கு இராஜாங்க திணைக்களத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள யுத்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பான அறிக்கையினை இலங்கை அரசாங்கம் நிராகரித்துள்ளது. திரிபுபடுத்தப்பட்ட குற்றச்சாட்டுக்கள் சோடிக்கப்பட்ட கதைகளூடாக இலங்கை அரசாங்கத்தை அபகீர்த்திக்குத் தள்ளிவிடும் உள்நோக்க நலன்களுடன் தொடர்புபட்ட முயற்சியாகவே இந்த அறிக்கையினை நோக்க வேண்டியுள்ளது என்றும் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. இந்த நிலையிலேயே யுத்தக் குற்றச்சாட்டு குறித்து விசாரணை நடத்துமாறு அமெரிக்கா இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது. புதிய திணைக்கள அறிக்கையில் அடங்கியுள்ள அரசாங்க படைகளினாலும் விடுதலைப் புலிகளினாலும் புரியப்பட்ட மனித உரிமை மீறல்கள் குறித்து தெரிவிக்கப்பட்ட நம்பகமான குற்றச்சாட்டுக்கள் குறித்து முழுமையாக விசாரணை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்க இராஜாங்க திணைக்கள பேச்சாளர் லான் கெலி இலங்கையிடம் வலியுறுத்தியுள்ளார்.

முடிவில் குற்றவாளிகளாக காணப்படுவோர் நீதிக்கு முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டுமென கடந்த புதன்கிழமை காங்கிரஸுக்கு அனுப்பப்பட்ட அறிக்கை வெளியிடப்பட்டதை அடுத்து நிருபர்கள் மத்தியில் உரையாற்றிய கெலி இவ்வாறு தெரிவித்தார். விடுதலைப்புலிகள்“ இளைஞர்களையும் யுவதிகளையும் தங்கள் கெரில்லா போரில் ஈடுபடுத்தியதாகவும் அரசாங்க படைகள் யுத்த நிறுத்தத்தை மீறியதாகவும் சரணடைய விருப்பம் தெரிவித்த புலி உறுப்பினர்களை கொன்றதாகவும் அறிக்கையில் குற்றச்சாட்டுக்கள் விவரமாக தெரிவிக்கப்ட்டுள்ளன. அரசாங்க படைகள் அல்லது அரசாங்க ஆதரவிலான துணைப்படைகள் தமிழ் சிவிலியன்களை கடத்தியதாகவும் சில சந்தர்ப்பங்களில் அவர்களை குறிப்பாக சிறுவர்களையும் இளைஞர்களையும் கொன்றதாகவும் குற்றச்சாட்டுக்கள் அறிக்கையில் தெரிவிக்கப்படடுள்ளன.

முகாம்களுக்கு போதிய விநியோகங்களை அனுப்புவதாக அரசாங்கம் உறுதியளித்த போதிலும் யுத்தசூனிய வலயங்களிலும் முகாம்களிலும் வாழும் சிவிலியன்களுக்கு போதிய உணவு, மருந்து. சுத்தநீர் ஆகியன கிடைப்பதில்லை என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. யுத்தம் தீவிரமடைந்த காலப்பகுதியான கடந்த ஜனவரி மாதம் முதல் இலங்கைப் படைகள் தமிழீழ விடுதலைப்புலிகளை தோற்கடித்த காலப்பகுதியான கடந்த மே மாதமுடிவு வரையிலான நிலைவரங்கள் அறிக்கையில் அடங்கியுள்ளது.

விடுதலைப்புலிகள் அடங்கலாக பயங்கரவாத குழுவினர்கள் போன்ற அரசாங்கம் அல்லாத செயற்பாட்டாளர்களின் ஆயுத தாக்குதலிலிருந்து தன்னை பாதுகாக்க ஒரு அரசாங்கத்திற்குரிய இயல்பான உரிமையை அமெரிக்கா அங்கீகரிக்கிறது. ஆயுத போராட்டங்களின் போது அரசாங்க மற்றும் அரசாங்கங்கள்“ அல்லாத செயற்பாட்டாளர்கள் சிவிலியன்களை பாதுகாப்பதற்கான கடப்பாடு உட்பட அவர்களது சர்வதேச சட்ட கடப்பாடுகளை மதித்து நடந்து கொள்ள வேண்டுமென அமெரிக்கா எதிர்பார்க்கிறது. சர்வதேச மனதாபிமாõனத்திற்கு எதிரான குற்றச் செயல்கள் மற்றும் இது சம்பந்தமான பாதிப்புக்கள் தொடர்பாக யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் சர்வதேச மனிதநேய சட்டங்களை மீறி வன்முறைகளை ஏற்படுத்தும் சம்பவங்கள் பற்றியும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த சம்பவங்கள் உண்மையில் யுத்தம் தொடபர்பான சட்டங்களை மீறுவதாக உள்ளனவா என்ற சட்டபு??ர்வ முடிவுக்கோ அல்லது இச்சம்பவங்கள் உண்மையில் இடம்பெற்றன என்ற முடிவுக்கோ அறிக்கை வரவில்லை.

களத்தில் தங்கியிருந்த சாவதேச நிறுவனங்களும் ஊடகங்களும் அரசாங்க சார்பற்ற நிறுவனங்களும் தெரிவித்த தகவல்களை அடிப்படையாக வைத்தே குற்றச்சாட்டுக்கள் அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன என்று கெலி தெரிவித்தார். இவை நம்பகமானவை என்று தாங்கள் கருதுவதாக பேச்சாளர் தெரிவித்தார். யுத்தத்தின் இறுதிக் கட்டங்களில் பாரதூரமான குற்றங்கள் புரியப்பட்டமைக்கான சந்தேகங்களை அறிக்கை போக்க வேண்டுமென நியு??யோர்க்கில் தளத்தை கொண்டுள்ள மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசிய பிராந்தியத்திற்கான பணிப்பாளர் பிரெட் அடம்ஸ் தெரிவித்தார்.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "யுத்தக் குற்றச் செயல்கள் குறித்து விசாரணை நடத்த வேண்டும்- இலங்கையிடம் அமெரிக்கா கோரிக்கை"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates