தாய்லாந்தில் தேடப்படும் புலிகளின் முக்கியநடவடிக்கைக்கு பொறுப்பாக செயற்பட்ட பிரபா இந்தோனிசியாவிற்க்கு தப்பியோட்டம்

இவர் கப்பல்களில் ஆட்கடத்தல் கிறடிட் கார்ட் மோசடி நடவடிக்கைளின் முக்கிய சூத்தரதாரியாவர் இவர் பல தமிழர்களிடம் வெளிநாட்டு அனுப்பவதாககூறி பெறும்தொகையான பணத்தினை பெற்றுகொண்டு ஏமாற்றபட்டுள்ளுதாகவும் தெரியவருகிறது புலிகளுக்கு ஆயதங்களை வாங்கி வினியோகம் செய்ததில் முக்கியபங்குவகித்தவர் எனவும் இவர்க்கு உதவியாக பேங்கோக் சங்கர் செயற்பட்டுவருவதாகவும் தெரிவிக்கபடுகிறது இவர்களுக்கு எல்லாம் பொறுப்பாக பிரித்தானியா பிரஜையும் பல புலிகளின் கப்பல்களுக்கு பொறுப்பாளராக சங்கர் செயற்படுவதாக தெரிவிக்கபடுகிறது இவர்கள் இன்னும் பலரும் சந்திக்கும்யிடமாக தாய்லாந்தில் உள்ள சிலோம் பகுதியில் அமைந்துள்ள ஜிம் டவர் கட்டிட பகுதியிலே சந்திப்புகளை மேற்கொண்டும் வந்துள்ளனர்
தாய்லாந்து பெண்மணியைத் திருமணம் முடித்து இரண்டு பிள்ளைகளின் தந்தையான பிரபா என்று அழைக்கபடும் புலிக்குட்டி ஒரு புலி உறுப்பினர் இவர் தற்போது தாய்லாந்தில் இருந்து இந்தோனிசியா அல்லது லாகோஸ்க்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை ஞாயிறன்று மாலை தாய்லாந்து சீ.எஸ்.டீ பொலீசார் குலாம்தே என்னுமிடத்தில் அமைந்துள்ள குலாம்தே ஹோட்டலைச் சுற்றிவளைத்து தேடுதல் நடத்தியபோது ஒரு கனேடியத் தமிழர் உட்பட மூன்று இலங்கைத் தமிழர்களைக் கைது செய்துள்ளதுடன், அவர்கள் வசமிருந்த 104 (கடனட்டைகள்) கிறடிட் கார்ட், கிரடிட்காட் ரீடர் என்பவற்றையும் கைப்பற்றியுள்ளனர். இதன்போது கனடாப் பிரiஐயான 24வயதான சிவப்பிரியன் சிவப்பிரகாசம், 22வயதான அஜந்தன் பாலேந்திரன், 28வயதான வெங்கடேஸ்வரன் மகேஸ்வரன் ஆகியோரே கைது செய்யப்பட்டவர்கள் ஆவர்.
இவர்கள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து தாய்லாந்து பொலீஸார் சுவீசான் என்னுமிடத்திலுள்ள இந்தமறா என்ற பகுதியில்; நடத்திய சுற்றிவளைப்பின் போது 45இலங்கைத் தமிழர்கள் விசா இல்லாமல் தாய்லாந்தில் தங்கியிருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்ட குறித்த 45பேரில் 24பேர் 01வயது முதல் 13வயதுக்கிடைப்பட்ட சிறுவர்கள் எனவும் தெரிய வருகின்றது. இவ்வாறு கைது செய்யப்பட்ட 45பேரும் விசா இல்லாதோருக்காக தாய்லாந்தில் அமைக்கப்பட்டுள்ள தடுப்புமுகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
- ரி.பி.சி. செய்தி







0 Response to "தாய்லாந்தில் தேடப்படும் புலிகளின் முக்கியநடவடிக்கைக்கு பொறுப்பாக செயற்பட்ட பிரபா இந்தோனிசியாவிற்க்கு தப்பியோட்டம்"
แสดงความคิดเห็น