jkr

இலங்கையர்கள் என்று நம்பப்படும் 76பேருடன் தாம் கடும்போக்கை கடைப்பிடிக்க இருப்பதாக கனேடிய குடிவரவு அமைச்சர் ஜேசன் கெனடி தெரிவிப்பு!

canada-01-june1 கனடாவில் புகலிடம் கோருவோர் மீது மென்போக்கு கடைப்பிடிக்கப் படுவதாக நிலவும் அபிப்பிராயத்துடன் அரசாங்கம் போராடிக் கொண்டிருக்கும் இவ்வெளையில், நாட்டின் மேற்கு கரையோரத்தில் துருப்பிடித்த படகு ஒன்றில் வந்து சேர்ந்த இலங்கையர்கள் என்று நம்பப்படும் 76பேருடன் தாம் கடும்போக்கை கடைப்பிடிக்க இருப்பதாக அந்நாட்டின் குடிவரவு அமைச்சர் ஜேசன் கெனடி தெரிவித்துள்ளார். தமிழ் கனடியர்கள் இந்த படகு மக்கள்மீது கருணை காண்பிக்குமாறு கனடிய அதிகாரிகளை வற்புறுத்திவரும் அதேவேளை, இந்த குடியேற்றவாசிகளின் சட்டவிரோத படகுப்பயணம் அதிகரித்துவரும் சட்டவிரோத ஆட்கடத்தல் பிரச்சினைரயை சுட்டிக்காட்டுவதாக இருக்கிறது என்று அமைச்சர் கெனடி ஊடகச் செவ்வியொன்றில் தெரிவித்துள்ளார். அநேகமான புகலிடக் கோரிக்கைகள் பொய்யானவை என்று நம்பப்படுவதாகவும் அவை தொடர்பாக கடும் சட்டங்களை கொண்டு வரப்போவதாகவும் கனடாவின் கொன்சர்வேற்றிவ் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "இலங்கையர்கள் என்று நம்பப்படும் 76பேருடன் தாம் கடும்போக்கை கடைப்பிடிக்க இருப்பதாக கனேடிய குடிவரவு அமைச்சர் ஜேசன் கெனடி தெரிவிப்பு!"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates