அகதி கப்பலில் இருந்த புலி உறுப்பினர் அடையாளம் காணப்பட்டுள்ளார்!

ஓசன் லேடி(Ocean Lady) என்ற பெயருடைய கப்பலில் சென்று கனேடிய அரசிடம் அரசியல் அடைக்கலம் கோரியிருந்த 78 இலங்கை தமிழர்களில் ஒருவர் சிறிலங்கா மற்றும் சர்வதேச பொலிசாரினால் தேடப்படுவர் என்பதினை இலங்கை பொலிசார் கனேடிய அதிகாரிகளுக்கு உறுதிப்படுத்தி உள்ளனர். 26 வயதுடைய கார்தீபன் மாணிக்கவாசகர் என்பவரே இவ்வாறு அடையாளம் காணப்பட்டுள்ளார். இதேவேள அந்த கப்பலில் பயணம் செய்தவர்களில் பெரும்பாலானோர் புலி உறுப்பினர்கள் என்று கனேடிய தமிழர்கள் மத்தியில் பேசப்பட்டு வருகின்றது. அந்த கப்பலில் பணியாற்றிய பொறியியலாளர் மற்றும் கப்பல் தலைவர் ஆகியோர் புலிகளுக்கு ஆயுதம் கடத்தி வந்த கப்பலில் பணிபுரிந்தவர்கள் என மொன்றியால் நகரில் வாழும் தமிழர்கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டு வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.







0 Response to "அகதி கப்பலில் இருந்த புலி உறுப்பினர் அடையாளம் காணப்பட்டுள்ளார்!"
แสดงความคิดเห็น