jkr

தண்ணீர் விவகாரம்: அமெரிக்க தூதரகத்திற்கு இலங்கை அரசு அபராதம்


கொழும்பு நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்தில் சட்டவிரோதமாக தண்ணீர் பயன்படுத்தப்பட்டுள்ளதாகக் கூறி இலங்கை அரசு சுமார் 3000 டாலர்கள் அபராதம் விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பு நகரில் எண்.7, ஆல்பிரட் கிரசன்ட் பகுதியில் உள்ள அமெரிக்கத் தூதரக வளாகத்தில் தண்ணீர் சட்டவிரோதமாக பயன்படுத்தப்ட்டு வந்ததாக இலங்கை நீர்வடிகால் வாரியம் புகார் கூறியதன் அடிப்படையில் இந்த அபராதம் விதிக்கப்பட்டதாக இலங்கைத் தமிழர் ஆதரவு இணையதளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சமீபத்தில் சட்டவிரோதமாக மின்சாரத்தைப் பயன்படுத்தியதாக தூதரக அதிகாரிகளுக்கு இலங்கை மின்சாரத்துறை சுமார் 12 ஆயிரம் டாலர்கள் அபராதமாக விதித்தது என்றும் அந்த இணையதளங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "தண்ணீர் விவகாரம்: அமெரிக்க தூதரகத்திற்கு இலங்கை அரசு அபராதம்"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates