பிரபல சினிமா வசனகர்த்தா மரணம்

பிரபல சினிமா வசனகர்த்தா கே.தேவ நாராயணன் (84) சென்னையில் இன்று இரவு 7 மணிக்கு மரணமடைந்தார். தமிழ் திரையுலகில் பிற மொழி படங்களுக்கு தமிழில் வசனம் எழுதி வந்த வசனகர்த்தாக்களில் தேவ நாராயணனும் ஒருவர். இவர் சலங்கை ஒலி, சிப்பிக்குள் முத்து, இந்திரன் சந்திரன் உள்பட 700 மொழி மாற்றுப் படங்களுக்கு வசனம் எழுதியுள்ளார். இவருடைய உடல் தகனம் சென்னையில் நாளை நடக்கிறது. மரணமடைந்த தேவ நாராயணனுக்கு பத்மா, ஜெயலட்சுமி என்று இரண்டு மனைவிகளும் ஹரிகரன், ரவிசங்கர், மோகன்குமார் என்ற 3 மகன்களும் உள்ளனர்.







0 Response to "பிரபல சினிமா வசனகர்த்தா மரணம்"
แสดงความคิดเห็น