jkr

அடுத்தாண்டில் 7% பொருளாதார வளர்ச்சி எட்டப்படும்- பிரதமர் நம்பிக்கை


டெல்லி: இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் 6.5 சதவீதமாக இருக்கும். அடுத்த ஆண்டில் இது 7 சதவீத வளர்ச்சியை எட்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அடுத்தாண்டு பருவ மழை பொய்க்காமல் இருந்தால்தான் 7 சதவீத வளர்ச்சியை எட்ட முடியும் எனவும் பிரதமர் தெரிவித்துள்ளார்.

டெல்லியில் இன்று இந்திய பொருளாதார மாநாடு நடந்தது. அதைத் தொடங்கி வைத்து பிரதமர் பேசுகையில், உலகப் பொருளாதார சீர்குலைவை இந்தியா திறம்பட சமாளிக்க முடிந்தது மகிழ்ச்சி அளிக்கிறது. பிற நாடுகளை விட இந்தியா இந்த விஷயத்தில் சிறப்பாக செயல்பட்டது.

நடப்பு நிதியாண்டில் நாம் பருவமழை பொய்த்தது, விவசாய வளர்ச்சிக் குறைவு ஆகியவை காரணமாக பல மோசமான விளைவுகளை சந்திக்க நேர்ந்தது. இந்த நிதியாண்டில் இந்தியா வின் பொருளாதார வளர்ச்சி 6.5 சதவீதமாக இருக்கும்.

அதேசமயம், பொருளாதாரம் ஏற்றப் பாதைக்குத் திரும்பி வருவதற்கான அறிகுறிகள் சிறப்பாக உள்ளன. மேலும், அடுத்த ஆண்டு பருவ மழை பொய்க்காமல் இருந்தால், நம்மால் 7 சதவீதம் அல்லது அதற்கு மேற்பட்ட வளர்ச்சியை காண முடியும் என்றார் சிங்
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "அடுத்தாண்டில் 7% பொருளாதார வளர்ச்சி எட்டப்படும்- பிரதமர் நம்பிக்கை"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates