பெற்றோர்களை பிரிந்தார் அசின்

தந்தை சொல் மிக்க மந்திரமில்லை. இந்த பழமொழியை கிழ மொழியாக்கிவிட்டு கிர்ரென பறந்துவிட்டார் அசின். கஜினி படத்தின் மூலம் இந்திக்கு நுழைந்த அசின், ஒரே படத்தில் எட்டாத உயரத்திற்கு போனார். ஆஹா ஓஹோ என்று கொண்டாடினார்கள் கான்களும், மான்களும்! மகள் கூடவே எக்ஸ்ட்ரா லக்கேஜாக சுற்றி வந்த தாடி வைத்த ஜோசப் தோட்டம்கல்லை தடி கொண்டு விரட்டாத குறையாக விரட்டினார்கள் மேற்படி மான்களும் கான்களும்.
அப்பாவை ரூமிலேயே இருக்க சொல்லு. நீ மட்டும் ஷ§ட்டிங் வா என்று அவர்கள் போட்ட கண்டிஷனுக்கு வேறு வழியில்லாமல் ஒப்புக் கொண்டார் அசின்.
மும்பையிலேயே தங்கியிருந்தாலும் மகளோடு ஷ§ட்டிங் ஸ்பாட்டுக்கு போக முடியாத கொடுமைக்கு ஆளான அப்பா, அவ்வபோது புலம்பி வைக்க, “கொஞ்ச நாளில் எல்லாம் சரியாகிடும். பொறுத்துக்கோங்க” என்றாராம் அசின். ஆனால், ஒரேயடியா சரியாப்போச்சு என்று அசின் சொன்னதுதான் அதிர்ச்சிக்குள்ளாக்கியிருக்கிறது அப்பாவை. தனது பெற்றோர்களை பிரிந்து தனியாக வசிக்கிறாராம் அசின். “கிளிக்கு றெக்கை முளைச்சிடுச்சு” என்று ஒரு பதிலோடு கட் பண்ணுகிறார் கேள்வி கேட்பவர்களை.
கஜினி ஹிட் ஆனதும் மும்பையிலேயே வீடு பார்த்து தங்கிக் கொண்ட அசின் குடும்பம், இப்போது அவர் இல்லாமல் வாடிக் கொண்டிருக்கிறது.







0 Response to "பெற்றோர்களை பிரிந்தார் அசின்"
แสดงความคิดเห็น