jkr

ஏ-9 நெடுஞ்சாலையூடாக பயணிக்க த.தே.கூட்டமைப்புக்கு அனுமதி


தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏ - 9 நெடுஞ்சாலை ஊடாக யாழ்ப்பாணம் செல்வதற்கான அனுமதி பாதுகாப்பு அமைச்சினால் வழங்கப்பட்டுள்ளது. இதன் பிரகாரம் நேற்று யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பத்மினி சிதம்பரநாதன் கிளிநொச்சி ஊடாக தனது வாகனத்தில் யாழ்ப்பாணம் சென்றடைந்துள்ளார். மதவாச்சியிலிருந்து இவரது வாகனத்திற்கு இராணுவ பாதுகாப்பு வழங்கப்பட்டதாக அறிய முடிகின்றது.

ஏ- 9 நெடுஞ்சாலை திறக்கப்பட்ட பின்னர் தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரொருவர் தரைவழியாக யாழ்ப்பாணம் சென்றுள்ளமை இதுவே முதல் தடவையாகும்.

கடந்த காலங்களில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாழ்ப்பாணத்திற்கான பயணத்தை விமான மூலமே மேற்கொண்டுவந்தனர் . மாதத்தில் 3 தடவைகள் இலங்கை விமானப் படைக்கு சொந்தமான விமானத்தில் இலவச பயண வசதிகளும் அரசாங்கத்தினால் இவர்களுக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • Twitter
  • RSS

0 Response to "ஏ-9 நெடுஞ்சாலையூடாக பயணிக்க த.தே.கூட்டமைப்புக்கு அனுமதி"

แสดงความคิดเห็น

Copyright 2009 REFUGEE
Free WordPress Themes designed by EZwpthemes
Converted by Theme Craft
Powered by Blogger Templates